11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
வடஇந்தியாவில் வணிகம் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சியை விவரி
2.
பண்டையத் தமிழ்நாட்டில் கடற்கரையோர வர்த்தகம் பற்றி விளக்குக
3.
சட்டப்படி செல்லக்கூடிய ஒப்பந்தம் ஒன்றின் இன்றியமையாத கூறுகள் யாவை?
4.
5.
குறிப்பு வரைக
அ) இருத்திவைக்கப்பட்ட ஆதாயம்
ஆ) குத்தகை நிதி
6.
குறு சிறு மற்றும் நடூத்தர தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை விளக்குக
7.
நேரடி மற்றும் மறைமுக வரியை உதாரணத்துடன் விளக்குக.
8.
உள் நாட்டு வணிகத்திற்கும் பன்னாட்டு வணிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
9.
வெளிநாட்டு வியாபாரத்தின் பல்வேறு வகைகளை விவரி?
10.
ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.
11.
12.
சரக்கு மற்றும் சேவை வரியின் நன்மைகள் விளக்குக.
13.
தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும் யாவை ?
14.
தொழில் நிதியியலின் இயல்புகள் [தன்மைகள்] அல்லது பண்புகள் யாவை?
15.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுவின் தோற்றம், வளர்ச்சி பற்றி குறிப்பு வரைக.
16.
சுற்றாடும் சில்லறை வியாபார அமைப்புகளின் வகைகளை விவரி.
17.
பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.
18.
உலக வர்த்தக அமைப்பின் நன்மைகள் விவரி?
19.
இறக்குமதி வணிக நடைமுறைகளை விவரி.
20.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?
1.
(i) அரசியல் மாற்றங்கள் இருந்த போதும் 12-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை இந்தியா செழிப்புடன் விளங்கியது. பால்பன் முதன் முதலாக சுல்தானாக இருந்தார். அடர்ந்த வனப்பகுதிகளில் பாதை உருவாக்கி வியாபாரம் செய்ய வழி வகுத்தார்.
(ii) அலாவுதின் கில்ஜி பொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தார்.
(iii) அவர் பெர்சியாவிலிருந்து வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்ய மானியம் வழங்கி ஊக்கப்படுத்தினார். அரேபியர்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தினார்.
(iv) தமிழர்கள் குஜராத்தியர்கள் போன்ற இந்திய வர்த்தகர்கள் அவர்கள்ஒருபோதும் நசுக்க நினைத்ததில்லை. கடலோர வர்த்தகம் மார்வாடிகள் மற்றும் குஜராத்தியர்கள் கைகளில் இருந்தன. மத்திய மற்றும் மேற்கு ஆசிய நிலப்பகுதி வர்த்தகம் இந்துக்களில் முல்கானியர்களிடமும் ஆப்கானியர் மற்றும் ஈரானியர்களில் குர்சானியர்களிடமும் இருந்தது.
(v) வெள்ளி மற்றும் தாமிரம் அடிப்படையில் நாணயமுறை நிறுவப்பட்டு, சுல்தான் காலகட்டத்துக்குள் வர்த்தகம் செழித்தோங்கியது.
2.
(i) பூம்புகார் போன்ற பெரிய நகரங்கள் மருவூர்பாக்கம் (உள் நாட்டு நகரம்) மற்றும் பட்டினம்பாக்கம் (கடலோர நகரம்) ஆகியவை உணவுப்பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் பெரு வியாபாரிகளையும் கொண்டிருந்தன.
(ii) தொண்டி, கொற்கை பூம்புகார் மற்றும் முசிறி ஆகிய துறைமுகங்கள் ஒட்டிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் இடங்களாக இருந்தன. வெளிநாட்டு வர்த்தகம் சிறப்பிடம் பெற்றிருந்தன. முத்துக்கள், பவளங்கள் மீன் பிடிப்பதிலும், உப்பு உற்பத்தியிலும் கப்பல் கட்டுதலிலும் ஈடுபட்டிருந்தனர்.
(iii) குறிப்பாக சிறியதான படகு திமிலா, தோணி, அம்பு ஓடம், புனை, கட்டுமரம் முதலியன உள்நாட்டு வியாபாரத்திற்கும், பேரளவுகலம், மரக்கலம், வங்கம், நாவாய் முதலியன வெளிநாட்டு வியாபாரத்திற்கும் பயன்படுத்தினர்.
3.
பிரிவு 10-ன்படி அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களாகும் எப்பொழுது எனில் உடன்படிக்கை நபர்களின் தன்னிச்சையான இசைவு தகுதி வாய்ந்த நபர்கள், சட்டபூர்வமான நோக்கம், சட்டபூர்வமான மறுபயன் மற்றும் செல்லாத ஒப்பந்தம் என அறிவிக்கப்படாத ஒப்பந்தம் ஆகியவை இன்றியமையாத கூறுகள் இருக்க வேண்டும்.
(i) முனைவும் ஏற்பும் (Offer and Acceptance): ஒரு ஒப்பந்தத்திற்கு இரண்டு நபர்கள் தேவை அவர்களின் ஒரு நபர் முனைவு மற்றொருவர் ஏற்பும் செய்கின்றனர்.
(ii) சட்ட உறவு முறை (Legal Relationship): ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களின் உள் நோக்கம் தமக்கிடையே ஓர் சட்ட உறவுமுறையை உருவாக்குவதற்காக இருக்க வேண்டும். சமூக தன்மையுடைய உடன்படிக்கைகளில் சட்ட உறவுமுறை என்பதால், அவை ஒப்பந்தங்களாக முடியாது.
(iii) சட்டபூர்வமான மறு பயன் (பிரிவு 2(d) (Lawful Consideration): மறுபயன் என்பது எதையெனும் திரும்பப்பெறுதல் ஆகும். மறுபயன் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ, சேவையாகவோ, அறிவாகவோ இருக்கலாம். மறுபயன் என்பது சட்டத்துக்கு புறம்பானதாகவோ அல்லது ஒழுக்கக் கேடானதாகவோ அல்லது பொது கொள்கைக்கு எதிரானதாகவோ இருக்கக்கூடாது.
(iv) சட்டபூர்வமான நோக்கம் (Lawful Object) (பிரிவு 23): உடன்பாட்டின் நோக்கம் சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் இதன் நோக்கம் சட்டத்துக்கு புறம்பானதாகவோ அல்லது ஒழுக்ககேடானதாகவோ அல்லது பொது நலனுக்கு புறம்பாகவோ ஒப்பந்தம் மேற்கொள்ள இயலாது.
(v) தன்னிச்சையான இசைவு (Free consent) (பிரிவு 13 மற்றும் 14): உடன்படிக்கை நபர்களின் தன்னிச்சையான இசைவால் ஏற்பட்டிருத்தல் வேண்டும். ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்களிடம் மனமொத்த இசைவு தர வேண்டும். அவர்கள் ஒரு விஷயத்தை ஒரே நேரத்தில், ஒரே நோக்குடன் உடன் பட வேண்டும். பின்வரும் காணங்களால் ஏற்படாத இசைவு தன்னிச்சையான இசைவு எனலாம். அவை வலுக்கட்டாயம், தகாத செல்வாக்கு மோசடி, திரித்துக் கூறுதல் அல்லது தவறு ஆகியவற்றை கூறலாம்.
(vi) ஓப்பந்தத் தகுதி (Capacity of Parties) (பிரிவு 11): ஒப்பந்தத்தில் ஈடுபடத் தேவையான தகுதியை உடைய நபர்களால் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மட்டுமே ஒப்பந்தமாகின்றது. பின் வரும் நபர்கள் ஒப்பந்தத்தில் ஈடுபட தகுதியுடையவர் என சட்டம் கூறுகின்றது. (அ) சட்டப்படி உரிமை வயது அடைந்தவர் (ஆ) மனச் சமநிலை உடையவர் (இ) சட்டத்தினால் தகுதியற்றவர் என அறிவிக்கப்படாத நபர்கள்.
(vii) தெளிவுடைமை (Certainly) (பிரிவு 29): ஒரு ஒப்பந்தம் செல்லத் தகுந்ததாக இருக்க வேண்டும் எனில் அதன் நிபந்தனைகள் தெளிவாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக A என்பவர் "நான் என்னுடைய சீருந்தை விற்க ஒப்புகொள்கிறேன்" என B யிடம் கூறுகிறார்.A என்பவருக்கு நான்கு சீருந்து உள்ளன. இங்கே A எந்த சீருந்தை விற்க போகிறார்? என குறிப்பிடப்படவில்லை. இந்த ஒப்பந்ததில் நிபந்தனைகள் தெளிவாக இல்லை.
(viii) நிறைவேற்றம் தன்மை (possibility of Performance) (பிரிவு 56): செய்து கொள்ளும் உடன்பாடு நிறைவேற்றப்படக் கூடியதாக இருத்தல் வேண்டும். செயல்படுத்த முடியாத ஒன்றை செய்வதாக மேற்கொள்ளும் உடன்பாடு செல்லாத ஒன்றாகும். எடுத்துக்காட்டாக ஒரு புதிய கிரகத்தைக் கண்டறியவதாக A என்பவர் B க்கு வாக்களிக்கிறார். இந்த உடன்படிக்கை ஆரம்ப நிலையிலே செயல்படுத்த முடியாது. எனவே இந்த ஒப்பந்தம் நிறைவேற்ற இயலாது.
(ix) செல்லாது என அறிவிக்கப்படவில்லை (Not declared Void): சட்டத்தால் செயல்[செயல்படுத்தப்படும் திறன் கொண்டதாக ஒப்பந்தம் இருத்தல் வேண்டும். சட்டத்தால் சில உடன்படிக்கைகள் சட்டவிரோதமானது அல்லது செல்லாதது என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(x) தேவையான சட்டச் சடங்குகள் (Necessary Legal Formalties): ஒரு ஒப்பந்தம் வாய்மொழி அல்லது எழுத்தில் இருக்கலாம். எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து மற்றும் சான்றிதழ் பெறவேண்டும். சட்டபூர்வ நடைமுறைகள் மேற்கொள்ளாவிட்டால், ஒப்பந்தத்தை சட்டத்தால் செயல்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு காலம் கடந்த கடனை வழங்குவதற்கான வாக்குறுதி அளித்த ஒருவர் அதை எழுத்தில் அளித்தல் வேண்டும்.
4.
5.
அ) இருத்திவைக்கப்பட்ட ஆதாயம் (Retained Earnings):
(i) எந்த ஒரு நிருமமும் தான் ஈட்டிய ஒட்டு மொத்த லாபத்தையும் பங்குதாரர்களுக்குப் பகிர்ந்து அளிப்பதில்லை. மாறாக ஈட்டிய வருவாயின் ஒரு பகுதியைப் பங்குநர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள லாபத்தைச் சேமித்து நிறும வளர்ச்சியில் மறுமுதலீடு செய்கின்றன.
(ii) எதற்கு இருத்திவைக்கப்பட்ட ஆதாயம் (அல்லது) இலாபத்தை மறு உழவு செய்தல்(Ploughing Back ஒப்பி Profits) என்று பெயர். அதாவது தனிமனிதன் தான் ஈட்டிய வருவாய் அனைத்தையும் செலவு செய்யாமல் எதிர்பாராமல் ஏற்படக் கூடிய செலவுகளைச் சமாளிக்க, அதில் ஒரு பகுதியைச் சேமித்து வைப்பது போன்று நிறுமங்களும் அவற்றின் வளர்ச்சி, தொழில் விரிவாக்கம், தொழில் பன்முனையாக்கம், புதிய போறும் அறிமுகம் போன்ற பல நடவடிக்கைகளுக்காக இருத்திவைக்கப்பட்ட ஆதாயம் நிதியைப் பயன்படுத்தி வருகின்றது.
(iii) மேலும் நட்டம் வரும் காலங்களில் பங்காதாயம் வழங்கவும் இந்த நிதி பெரிதும் உதவுகிறது. இவ்வகை நிதியை பயன்படுத்துவதில் எந்தவிதச்சட்டச் சடங்குகளும் இல்லை. எனவே இவ்வகை நிதி மிகவும் எளிதாக திரட்டக் கூடியதாகவும் மற்றும் சிக்கனமானதாகவும் கருதப்படுகிறது.
ஆ) குத்தகை நிதி (Lease Finance) :
(i) குத்தகை நிதி என்பது தேவைப்படும் சொத்துகளைக் குத்தகைக்கு எடுத்து உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் செயலைக் குறிக்கும் தொடக்க நிலையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரையில் தளவாடங்கள், கருவிகள் மற்றும் இதர சொத்துக்களை ஒட்டு மொத்தமாக பணம் செலுத்தி வாங்குவது என்பது கடினமான ஒன்றாகும்.
(ii) இப்படிப்பட்ட சூழ்நிலையில் குத்தகை நிதி முறை இந்நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வரமாக விளங்குகிறது. இம்முறையில் தனி நபர் அல்லது நிறுமம் சொத்துகளைத் தன்னுடைய சொந்த முதலீட்டில் வாங்கி அச்சொத்துகளைத் தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு வாடகை, அல்லது குத்தகை அடிப்படையில் வழங்கி, அவற்றைப் பயன்படுத்தி அனுமதிக்கிறது.
(iii) சொத்துகளின் மீது உரிமை கொண்ட நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுபவர் என்று பெயர். சொத்துகளைக் குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு "குத்தகை எடுத்தவர்" என்று பெயர்.
(iv) இங்கு ஒப்பந்தமானது "குத்தகை ஒப்பந்தம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் குத்தகை தொடர்பான அனைத்துச் சொற்பகர்வுகள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.
(v) எடுத்துக்காட்டாக இந்த ஒப்பந்தத்தில் குத்தகை காலம், குத்தகை தொகை, அதை செலுத்தும் முறை, பராமரிப்பு செலவுக்கு ஒதுக்கீடு செய்தல் போன்ற நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
(vi) குத்தகை காலம் முடிந்த பின்பு குத்தகைக்கு எடுத்துப் பயன்படுத்திய சொத்தை குத்தகை விட்டவரிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அல்லது மாறாக குத்தகைக்கு விட்டவர் குத்தகைக்கு எடுத்த பொருளின் மீதான முழு பதிப்பை பெற்றுக்கொண்டு குத்தகைக்கு எடுத்தவருக்கு உரிமையை மாற்றி கொடுக்கலாம்.
6.
(i) அதிக வேலை வாய்ப்புகள் : பெரிய வர்த்தக நிறுவனங்களை காட்டிலும் இந்நிறுமங்கள் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன.இத்தகைய நிறுமங்கள், பெரும்பாலும் உள்ளரில் கிடைக்கும் உழைப்பாற்றலை நம்பி இருப்பதால் நாட்டில் உள்ள ஏராளமனா மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருகிறது
(ii) குறைந்த உற்பத்தி செலவு : இம்மாதிரியான நிறுமங்களைநடத்தப்பயிற்சி பெற்ற அல்லது அதிக ஆற்றல் படைத்த தொழிலாளார்களா அல்லது தொழில் கல்வி பயின்ற உழைப்பாளர்களோ தேவைப்படுதில்லை,இன்
நீருவனங்கள் குறைந்த ஊதியத்தில் பணியாளர்களை நியமிப்பாதல் உற்பத்தி செலவுகள் வெகுவான குறைகிறது.இதன் விளைவாக பெரிய அளவிலான நிர்வனங்களை விட இவற்றால் குறைந்த செல்வில் உற்பத்தியை மேற்கொள்ள முடிகிறது
(iii) குறைந்த முதலிடு : இவற்றைக் தொடங்குவதற்கு பேரளவு முதல் தேவைப்படுவதில்லை.இவைகளின் உரிமையாளைர்கள் உள்ளரில் இருப்பதால் தனக்கு அருகாமையில் உள்ள உள்ளரில் வளங்களை பயன்படுத்திக் கொள்கின்றார்.கைவினை பொருட்கள் மற்றும் பரம்பரியத் குடும்பத் தொழில்களை ஊக்குகின்றன.இந்த நிறுவனங்கள் சிற்று மற்றும் பேரூரில் உள்ள உள்ளூர் தொலைமுனைவோர் மற்றும் சுயதொழில் செய்பர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன
(iv) விரைந்து முடிவெடுத்தல்: இவற்றின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொழில் படிப்பு பயின்ற மேலார்களைப் பணியமரத்த வேண்டிய அவசியம் இல்லை.பெருபாலும் இந்த நிறுவன அவற்றின் உரிமை யாளர்களே நிர்வாகம் செய்கினற்னர்.
பங்களிப்பு உதவி: பெரிய உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதரி பாகங்கள் மற்றும் பிற பொருட்களை தயாரித்து கொடுத்து பேரளவு உற்பத்திக்கு துணை புரிவதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன
(vi) சமுதாயத்தில் பொருளாதார சமநிலைய உருவாகுதல்: வருமானம் மற்றும் வளங்கள்ஒரு சிலரிடம் குவிவதைத் தடுத்து அவற்றைப் பரவலகுவதன் மூலம் சமுத்தியதில் பின்திங்கிய நிலையில் இருப்போரையும் இலாபம் மகிந்த தொழில் துறையில் பங்கு பெறச் செய்வதன் மூலம் சீரான பொருளாதாரப் பகிர்வுக்கு வலி வகை செய்கிறது
(vii) அனைத்து பகுதிகளிலும் சமமான வளர்ச்சி:இந்நிறுவனங்களின் வளிர்ச்சிய ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவில் தொழில் ரீதியாக பின்தங்கியுள்ள பகுதிகளை வளர்ச்சி அடையச் செய்யலாம்.இதன் மூலம் நாடு முழுவதும் , சீரான தொழில் வளர்ச்சியை பெற இயலும்.இவை உள்ளுர்களிலேய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதால் மற்றும் பேரூர்களில் வசிக்கும் மக்கள் நகர்ப்புறம் நோக்கி வேலைக்காக இடம் பெயர்வது தடுக்கப்படுகிறது
(viii)சுய வேலைவாய்ப்பு உருவாக்கி , சுய சார்பு மேம்படுத்துதல்: இத்துறையானது தொழில் முனைவோர்கலை உருவாக்குவதில் பெரும் பங்குகாற்றுகின்றன. இது சமுதாயத்தில் சுயவேலைவாய்ப்பு அளிப்பதன் மூலம் சுயசார்பை ஊக்குவிக்கிறது. தன் மூலம் தனிநபர் வருமானம் வெகுவான உயர்ந்து நாட்டின் பொருளாதர வளர்ச்சி அதிகரிக்கிறது
7.
(i) எந்த விதமான பயனையும் நேரடியாக திரும்பப் பெறும் எதிர்பார்ப்பற்ற, அரசால் சமுத்தப்படும் ஓர் கட்டாயக் கட்டணமே வாரியாக. அதாவது, மக்களால் அரசுக்கு அளிக்கப்படும் ஓர் கட்டாயக் கட்டணம் அல்லது பங்களிப்பே வரியாகும்.
(iiஒரு நபர் வரிக் கட்ட வேண்டிய நிலையில் இருப்பார் எனில், அவ்வரியைக் கட்ட வேண்டியது அவரது சட்டக் கடமையாகும்.
(iii) அரசனுடைய மிக முக்கிய வருவாய் வரியின் மூலமாகவே ஈட்டப்படுகிறது. இவ்வரி வருவாயானது குடிமக்களின் நலதிட்டங்களுக்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும், கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
(iv) சிறந்த ஓர் வரைமுறை, மக்களின் பணிபுரிதல் சேமித்தல் மற்றும் முதலீடு செய்தல் ஆகியவற்றில் உள்ள வர்களின் விருப்பம் தகுதி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது. இல்லையெனில், அது வணிகம், தொழில் மற்றும் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தின் வளர்ச்சியையே பாதித்து விடும்.
வரிகளின் வகைகள்:
இந்தியாவில் வரிகள் பின்வரும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பபட்டுள்ளது.
நேர்முக வரி:
(i) வருமான வரி
(ii) நிறும வரி
(iii) சொத்து வரி
(iv) அன்பளிப்பு வரி (நன்கொடை வரி)
(v) பண்ணை வரி
(vi) பயன்கள் வரி
நேர்முக வரிகள்:
நேர்முக வரிகள் என்பது யார் மீது விதிக்கப்படுகிறது அவரே அவ்வரியைச் செலுத்துவதாகும். அதாவது நேர்முக வரியில் வரிதாக்கமும் , வரி நிலைப்பாடும் ஒருவர் மீதே விழுகின்றன. இவ்வாறு, வரித் தாக்கமும், வரி நிலைப்பாடும் ஒருவர் மீதே விழும் வகையைகி சார்ந்த வரிகள் நேர்முக வரிகள் எனப்படும் அதாவது தனி நபரின் வருமானம் அல்லது அவரின் செல்வத்தின் மீது விதிக்கப்பட்டு அவரால் செலுத்தப்படும் வரியாகும் இந்தியாவில் அனைத்து நேரடி வரிகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மறைமுக வரிகள்:
(i) மறைமுக வரிகளின் கீழ், வரித்தாக்கமும், வரிநிலைப்பாடும் வேறுபட்ட நபர்களின் மீது விழுகின்றன. இவை யார் மீது விதிக்கப்படுகின்றனவோ அவர்களால் சுமக்கப்படுவதில்லை. இவை மற்றவர்களுக்கு மாற்றி அளிக்கப்படுகின்றன.
(ii) அதாவது சரக்கு மற்றும் சேவைகளை வழங்கும் விற்பனையாளர் மீது வரி விதிக்கப்பட்டு அவற்றை வாங்குபவரால் செலுத்தப்படும் வரியே மறைமுக வரியாகும். உதாரணம் சரக்கு சேவை வரி (GST).
8.
| அடிப்படை | உள்நாட்டு வணிகம் | பன்னாட்டு வணிகம் |
| 1. பொருள் | உள்நாட்டு வணிகம் ஒரு நாட்டின் எல்லைக்குள்ளே நடைபெறும் வியாபார நடவடிக்கையாகும். |
பன்னாட்டு வணிகம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடைபெறும் வியாபார நடவடிக்கை ஆகும். |
| 2. வியாபாரத்தில் பங்கு பெறுவோர் |
ஒரு நாட்டில் உள்ள மக்களும் நிறுவனங்களும் வியாபார நடவடிக்கைகளில்பங்கேற்கின்றனர். |
ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி உள்ள மக்களும் நிறுவனங்களும் வியாபார நடவடிக்கைகளில் பங்கேற்கின்றனர். |
| 3. உற்பத்திக் காரணிகள் இடம் பெயர்தல் |
மூலப் பொருள், உழைப்பு, முதல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகள் தடைஇன்றி நாட்டின் எல்லைக்குள் இடம் பெயர முடியும். |
மூலப் பொருள், உழைப்பு, முதல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற உற்பத்திக் காரணிகள் ஒரு நாட்டின் எல்லையைத் தாண்டி இடம் பெயர முடியாது. |
| 4. நுகர்வோரின் தன்மை | உள்நாட்டு வணிகத்தில் கலாச்சாரம், நடத்தை சுவை விருப்பம், சட்டமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவை ஒரே மாதிரியாக இருக்கும். |
பன்னாட்டு வணிகத்தில் கலாச்சாரம், நடத்தை சுவை விருப்பம், சட்டமுறை, பழக்கவழக்கங்கள் ஆகியவை வேறுபட்டதாக இருக்கும். |
| 5. வியாபார முறை | உள்நாட்டு வணிகத்தை ஒரே நாட்டினுடைய விதிகள், சட்டங்கள், கொள்கைகள், வரிவிதிப்பு முறை ஆகியவை நெறிப்படுத்துகின்றன. |
பன்னாட்டு வணிகத்தை பல நாடுகளின் விதிகள், சட்டங்கள் வரிவிதிப்புகள் மற்றும் அளவு ஆகியவை நெறிப்படுத்துகின்றன. |
| 6. பயன்படுத்தும் நாணயம் | உள் நாட்டு வணிகத்தில் உள்ளூர் நாணய மதிப்பில் வியாபார நடவடிக்கைகள் தீர்க்கப்படுகின்றன. | பன்னாட்டு வணிகத்தில் அயல்நாட்டு நாணய மதிப்பில் வியாபார நடவடிக்கைகள் தீர்க்கப் படுகின்றன. |
| 7. போக்குவரத்து முறை | உள்நாட்டு வணிகத்தில் சாலை மற்றும் இரயில் போக்குவரத்து மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. |
பன்னாட்டு வணிகத்தில் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது. |
| 8. இடர் காப்பின்மை | இடரின் அளவு குறைவு. | இடரின் அளவு அதிகம். |
| 9. சந்தையின் அளவு | நாட்டின் எல்லைக்கு உட்பட்டது. | நாட்டின் எல்லையைத் தாண்டி பரந்த அளவு செல்கிறது. |
| 10. சுங்கத் தீர்வை செலுத்துதல் | சுங்கத் தீர்வையும் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய நடைமுறைகளும் மிகவும் குறைவு. |
சுங்கத் தீர்வையும் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டிய நடைமுறைகளும் அதிகமானவை மற்றும் சிக்கலானவை. |
9.
வெளிநாட்டு வியாபாரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி, ஏற்றுமதி, மறு ஏற்றுமதி வியாபாரம்.
(i) இறக்குமதி: உள்நாட்டுத் தேவைக்காக வெளிநாட்டிலிருந்து பொருட்களை வாங்குவதே இறக்குமதி வியாபாரம் ஆகும். உதாரணமாக, இந்தியா வளைகுடா நாடுகளிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதைக் கூறலாம். இந்தியா இயந்திர சாதனங்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. விரைவான இயந்திரமயமாக்களுக் காகவும், நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இறக்குமதி வணிகம் தவிர்க்க செய்யவும்.
(ii) ஏற்றுமதி: உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பது ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
(iii) உதாரணம்:
1. இந்தியா, இரும்பு மற்றும் எஃகு போன்றவற்றை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது.
2. இந்தியா ஜெர்மனி நாட்டிற்கு தேயிலை ஏற்றுமதி செய்கிறது.
3. மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
4. உள்நாட்டில் தேவைக்கு மிகுதியாக உள்ள பொருட்களை விற்பதற்கும், உள்நாட்டு இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், அந்நியச் செலாவணி ஈட்டுவதற்கும், தேசிய வருமானத்தை உயர்த்துவதற்கும், நிறை வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், அரசு வருவாயை மிகவும் அவசியமானதாகும்.
(iv) மறு ஏற்றுமதி வியாபாரம்: ஒரு நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி மூலம் விற்பனை செய்வது மறு ஏற்றுமதி வியாபாரம் ஆகும்.
(v) உதாரணம்:
1. இந்தியாவில் சூரத் நகரில் உள்ள வைர வியாபாரிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து துண்டாக்கப்படாத வைரங்களை இறக்குமதி செய்து, அவற்றைத் துண்டாக்கி, பட்டை தீட்டி, மீண்டும் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பன்னாட்டு வைரச் சந்தைக்கு மறு ஏற்றுமதி செய்கிறார்கள்.
2. சிங்கப்பூர், துபாய், ஹாங்காங், லண்டன் ஆம்ஸ்டர்டாம் ஆகிய நாடுகள் மிகப்பெரிய மறு ஏற்றுமதி மையங்களாக செயல்படுகின்றன.
3. இறக்குமதி செய்யும் நாட்டில் போதுமான அளவுவங்கி வசதிகள் இருக்கும் போதும், தொடர்ந்து அயல் நாட்டு வணிகம் செய்யும் அளவிற்கு சரக்குகள் இல்லாதிருக்கும் போதும், ஏற்றுமதி செய்யும் நாட்டிற்கும், பொருட்களை நுகரும் நாட்டிற்குமிடையே நேரடித் தொடர்பு ஏற்படுத்துவது சிக்கலாக இருக்கும் போதும் மறு ஏற்றுமதி வணிகம் அவசியமாகிறது.
10.
பின்வருமான ஏற்றுமதி வணிகத்தின் நடைமுறைகளாகும்.
(i) வியாபார தகவல் வினவல்: ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரிடமிருந்தோ அல்லது அவரின் முகவரிடமிருந்தோ பொருட்களை இறக்குமதி செய்வதற்கான எழுத்து மூலமான விசாரணையைப் பெறுகிறார்.
(ii) சரக்காணை பெறுதல் மற்றும் ஏற்றுமதி ஆணையை உறுதிப்படுத்துதல்: இறக்குமதியாளர் வியாபார விசாரணைக்குப் பிறகு சரக்கை வாங்குவதற்கான சரக்கணையை தானோ அல்லது தனது முகவர் மூலமோ ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்கிறார்.
(iii) நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்தல்: அயல் நாட்டில் உள்ள இறக்குமதியாளரைப் பற்றியும் அவரின் பணம் செலுத்தும் திறன் பற்றியும் ஏற்றுமதியாளர் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவே அவர் இறக்குமதியாளரை நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்து தருமாறு கோருகிறார்.
(iv) ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறியீட்டு ஏன் பெறுதல் : ஏற்றுமதியாளர் குறியீட்டு எண் பெற அயல்நாட்டு வணிக பொது இயக்குநரின் மண்டல அலுவலகத்திற்க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
(v) உறுப்பினர் சான்று பெறுதல்: ஏற்றுமதியாளர் அரசு வழங்கும் ஏற்றுமதி தொடர்பான சலுகைகளை பெற வேண்டுமெனில் ஏற்றுமதி வளர்ச்சிக் குழுவிடம் உறுப்பினர் சான்று பெற வேண்டும்.
(vi) பொருட்களை உற்பத்தி செய்தல்/கொள்முதல் செய்தல்/ கட்டுமம் செய்தல்: ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர் குறிப்பிட்ட பொருட்களை தொழிற்சாலையிலிருந்தோ அல்லது சந்தையிலிருந்தோ தருவித்துக்கொள்ள வேண்டும். இறக்குமதியாளர் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பொருட்கள் கட்டுமம் செய்யப்பட வேண்டும்.
(vii) ஏற்றுமதி ஆய்வு சான்று: பொருட்கள் கட்டுமம் செய்யப்பட்ட பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி ஆய்வு முகாமைக்கு விண்ணப்பித்து சான்று பெற வேண்டும்.
(vii) பொருட்களை காப்பீடு செய்தல்: ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்புவதற்கு முன் உரிய நிறுவனத்தில் காப்பீடு செய்ய வேண்டும்.
(ix) தோற்றுவாய் சான்றிதழ் : இறக்குமதி வணிக நடைமுறையில் தோற்றுவாய் சான்று மிக முக்கிய ஆவணமாகும். இச்சான்று ஏற்றுமதி செய்யப்படும் பொருள் குறிப்பிட்ட நாட்டில் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்ற உறுதி மொழியை விளம்புகிறது.
(x) வணிக தூதுவர் இடாப்பு : இறக்குமதியாகும் சரக்கின் மதிப்பு சரியானது தான் என்று சான்று பகரக்கூடிய ஆவணமே வாணிகத் தூதுவர் இடாப்பு ஆகும். இறக்குமதி நாடு சுங்க அதிகாரிகள் சரக்கு கட்டுமத்தை திறந்து பார்க்காமலே இடாப்பில் குறிப்பிட்ட மதிப்பின் அடிப்படையில் சுங்கத் தீர்வை விதிப்பர்.
(xi) அனுப்புகை முகவரி அமர்த்துதல் : ஏற்றுமதியாளர் ஏற்றுமதி ஆய்வு சான்று பெற்ற பிறகு சரக்கை அனுப்ப சுங்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். பொதுவாக இந்த அனுமதிபெறும் பணிக்காக தன் சார்பாக அனுப்புகை முகவரி நியமிக்கிறார்.
(xii) துறைமுகத்திற்கு சரக்கை அனுப்புதல் மற்றும் முகவருக்கு தகவல் தருதல்: ஏற்றுமதியாளர் சரக்கைத் துறைமுகத்திற்கு இரயில் அல்லது லாரி மூலம் அனுப்பி விட்டு, அதற்குரிய இரயில் ரசீது லாரி இரசீதை அனுப்புகை முகவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
(xiii) அனுப்புகை முகவர் பின்பற்ற வேண்டிய சுங்க நடைமுறைகள்: துறைமுக நகரத்தில் சரக்கைப் பெற்றுக் கொள்ளுதல், கப்பலிடு ஆணை பெறுதல், கப்பல் வாடகை முறி ஏற்பாடு செய்தல்.
(xiv) சரக்கை அகற்றுதல் தொடர்பான சுங்க நடைமுறைகள்: துறைமுகக் கட்டணம் செலுத்துதல் சரக்கை அனுப்ப அனுமதி பெறுதல், கப்பல் தலைவர் இரசீது பெறுதல், கப்பல் தலைவர் இரசீது பெறுதல், கப்பல் இரசீது பெறுதல்.
(xv) வாணிக இடாப்பைத் தயாரித்தல் மற்றும் வங்கியில் ஆவணங்களை தாக்கல் செய்தல் : இறக்குமதியாளருடன் செய்து கொண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுமதியாளர் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள் தொடர்பாக வாணிக இடாப்பைத் தயாரிக்கிறார். அதன் பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தன்னுடைய வங்கிக்கு அனுப்பி வைக்கிறார்.
(xvi) பணம் செலுத்தப் பெறுதல்: மாற்றுச்சீட்டு மூலம் பணம் செலுத்தப் பெறல் (அ) செலுத்தகைக்குப் பிறகு ஆவணங்கள் ஒப்படைத்தல் (ஆ) ஏற்புக்குப் பிறகு ஆவணங்கள் ஒப்படைத்தல், வங்கி சான்று மூலம் பணம் செலுத்தப் பெறல்.
11.
12.
சமூகம் மற்றும் நாட்டிற்கு:
(i) சீரான தேசிய சந்தை அந்நிய முதலீட்டினை ஈர்க்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொருளாதாரத்தினை GST ஒன்றினைக்கிறது.
(ii) இறக்குமதி சரக்குகள் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்த சரக்குகள் இடையேயான வரிவிதிப்பில் சமநிலையை கொண்டு வருகிறது.
(iii) உற்பத்தி, ஏற்றுமதியினை ஊக்குவிக்கிறது.
(iv) அதே நேரத்தில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதன் முலம் வறுமையை ஒழிக்கிறது.
(v) வரி இணக்கத்தினை அதிகரிக்கிறது. அரசாங்கத்திற்கு வருவாயையும் அதிகரிக்கிறது.
(vi) இது வெளிப்படையானது மற்றும் உலக அளவில் வியாபார எளிமையில் இந்தியாவின் தரத்தை மேம்படுத்துகிறது.
(vii) சீரான வரி வீதங்கள் வரி ஏய்ப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரி வீத வேற்றுமையை குறைக்கிறது.
வியாபார சமூகத்திற்கு:
(i) பதினேழு வரிகள் நீக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரே விதமான வரி அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது சில வரி விலக்குகளைக் எளிமையான வரி முறை ஆகும்.
(ii) உள்ளிட்டு வரி, வரியின் விழுதொடராக்கவிளைவினை குறைகிறது சராசரி வரிச் சுமை குறைவதன் மூலம் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கிறது அதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி என்ற திட்டத்திற்கு உதவுகிறது.
(iii) பொதுவான வழிமுறைகள் சரக்கு என்ற திட்டத்திற்கு உதவுகிறது.
(iv) GST பல்வேறு பதிவேடுகள் பராமரிப்பை குறைகிறது. மனித சக்தி மற்றும் வளங்களில் குறைவதன் மூலம் திறன் மேம்பாடு அடைகிறது.
(v) அனைத்து நடவடிக்கைகளும் GSTN மூலம் நடைபெறுவதால், ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி செய்கிறது.
(vi) நாடு முழுவதும் ஒரே சீரான விலையை தருகிறது. அனைத்து மாநிலங்களிலும் வியாபார விருவாக்கத்தினை எளிதாக்குகிறது.
நுகர்வோருக்கான பயன்கள்:
(i) உள்ளீட்டு வரி நுகர்வோருக்கான விலையை குறைக்கிறது.
(ii) அனைத்து சிறு சில்லறை வணிகர்கள் வரிவிலக்கு பெறுகின்றனர். அதன் மூலம் நுகர்வோர்களின் செலவு குறைகிறது.
13.
பண்டங்கள் மற்றும் பணிகள் பரிமாற்றத்தினூடே ஏற்படும் தடைகளும் இடையூறுகளும் அவற்றை நீக்கும் வழி வகைகளும் பின் வருமாறு :-
1. ஆள்சார் தடை
பொருள்கள் தேவைப்படும் நபர்களையும் நியாயமான விலையில் வாங்க விரும்புபவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது. இக்குறைபாடே ஆள்சார் தடை எனப்படும். உற்பத்தியின் அளவு அதிகரிக்க நுகர்வோரை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. வணிகத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது.
2. இடத் தடை
பொருட்கள் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில், விமானம், கடல் மற்றும் நில போக்குவரத்து போன்றவை நுகர்வோர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லமுக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.
3. காலத் தடை
நுகர்வுத் தேவைப்படும் பொழுதும் வாங்கவிரும்பும் பொழுதும் பொருட்கள் கிடைக்க வேண்டும். தேவையைக் கணக்கில் கொண்டு பேரளவு உற்பத்தி செய்யப்படுவதும் நுகர்வோரிடம் விற்கத் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்டகாலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்ஆண்டு முழுவதும் தேவைஏற்படும். எனவே பொருட்களைப் பண்டகக் காப்பகங்களில் சேகரித்துக் வைத்துக் கொள்வதன் மூலம் நுகா; பொருள் தொடர்ந்து கிடைக்கவழி ஏற்படும்.
4. இடர் மற்றும் பொருட்கள் தரம் கெடாமல் இருக்கத் தடை: பொருட்கள்முறையானசிப்பம் கட்டுதல் மற்றும் நவீனகுளிர்சாதனவசதி கொண்டபண்டகசாலைகள்ஆகியவற்றால் பொருட்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. பொருட்கள்பூச்சிகள், எலிகள், ஆவியாதல் போன்றவைகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன.
5. இடர்பாட்டுத் தடை
போக்குவரத்துக் கட்டுமம் உள்ளிட்டவைகள் மூலம் சரக்குகள் கொண்டு சென்றாலும், ஆட்களாலும், இயற்கையாலும் ஏற்படக்கூடிய நட்டங்களைத் தவிர்க்கமுடிவதில்லை, இந்நட்டத்தைஈடுகட்டக் காப்பீடு செய்யப்படுகிறது. தீக்காப்பீடு, கடல்சார் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு ஆகியவற்றின் வழியாக நட்டத்தைப் சரிக்கட்டமுடியும்.
6. அறிவுசார் தடை
சந்தை நிலவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாததால் நுகர்வோர் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க இயலாமல் போய் விடக்கூடும். இத்தடைக்கு அறிவுசார் தடை என்கிறோம். நல்ல விளம்பரம் மற்றும் விற்பனையாளர் சேவைகள் மூலம் அத்தடையை நீக்கலாம்.
7. பண்டப் பரிமாற்றத் தடை
பணம் பண்டப் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது. பொருட்களுக்கு உண்டான சரியான விலையை செலுத்துவதன் மூலம் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
8. நிதித் தடை
உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் அவசியமான நேரத்தில் தேவையான நிதி கிடைப்பதில்லை. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நிதியை வணிக ரீதியாக செயல்படுத்துவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் நிதி உதவுகிறது.
9.பொருட்களைத் துல்லியமாக தயாரிப்பதில் தடை: ஆராய்ச்சிகளின் மூலம் நுகர்வோரின் தேவையை அறிந்து அவர்களுக்கு தரமான பொருட்களை வழங்க முடிகிறது.
10.பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடத்திலிருந்து நுகர்வோருக்கு நேரடி வீட்டிற்கு கொண்டு செல்லுதல் மின்னணு வணிகம் மூலம் பொருட்களை வீட்டிலிருந்தே வாங்கல் ஆணை பிறப்பிக்கலாம். பொருட்களை பெற்றுக்கொண்ட பின் அதற்குண்டான தொகையினை செலுத்தலாம்.
14.
(i) தொழில் நிதி என்பது தொழில் பயன்படுத்தப்படும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நிதிகளை உள்ளடக்கியதாகும். சிறிய, நடுத்தர மற்றும் பேரளவு நிறுவனங்கள் போன்ற அனைத்து வகை நிறுவனங்களுக்கும் நிதி தேவைப்படுகிறது
(ii) தொழில் நிதியின் அளவு வியாபார நிறுவனங்களின் தன்மை மற்றும் செயல்பாட்டின் அளவை பொறுத்து மாறுபடும். அதாவது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் குறைந்த அளவு நிதி ஆதாரம் போதுமானது. ஆனால் பேரளவு நிறுவனகட்கு அதிக நிதி தேவைப்படுகிறது.
(iii) தொழில் நிதியின் தேவை காலத்திற்கு ஏற்ப மாறுபடும். இதை வேறு வகையில் கூறுவதானால், தொழிலும் சுறுசுறுப்பாக இயங்கும். உச்சகட்டக் காலத்தில் தொழில் நிதி தேவை அதிக அளவிலும், மந்தமான காலங்களில் மிதித்த தேவை குறைவாகவும் இருக்கும்.
(iv) ஒரு நிறுவனத்தின் தொழில், நடவடிக்கைகளின் அளவு மற்றும் அதன் செயல்பாட்டு எல்லையை அந் நிறுவனத்தின் தொழில் நிதியின் அளவே தீர்மானிக்கிறது.
15.
(i) இந்தியாவின் சுய உதவிக் குழுக்கள்: டிசம்பர் 2017 ன் படி இந்தியாவில் 45,67,090 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்தச் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 5,02,65,933 ஆகும், அடிப்படை அல்லது தொடக்க நிலையில் மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துவதில், சுய உதவிக்குழுக்களின் முக்கியத்துவத்தை அறிந்து, இந்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் இவற்றுக்கான முறையான அங்கீகாரம் அளித்துள்ளன.
(ii) தமிழ்நாட்டில் சுய உதவிக்குழுவின் தொடக்கம், வளர்ச்சி: பெண்களின் சமுதாய, பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஊரகப் பெண்களின் திறனை மேம்படுத்தும் நோக்குடன், தமிழ்நாட்டில் 1983ல் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக்கழகம் (வரையறுக்கப்பட்டது) என்ற நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு 1989 செம்படம்பரில் விவசாய முன்னேற்றத்திற்கான உலக நிதியத்தின் (International Fund for Agricultural Development) உதவியோடு தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிகுழுக்களை துவங்கி வைத்தது இத்திட்டத்தின் வெற்றியினால் "மகளிர் திட்டம்" என்ற திட்டம், 1997-98ல் மணிலா அரசின் நிதி உதவியோடு, பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்தச் சுய உதவிக்குழு மிகச் சக்தி வாய்ந்த இயக்கமாக செயல்பட்டு, இன்று மாநிலத்தில் பல வசதியற்ற மகளிரின் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் திட்டமாக செயல்பட்டு வருகிறது.
16.
சுற்றாடும் சில்லறை வியாபார அமைப்புகளை பின்வருமாறு பிரிக்கலாம். சுமை தூக்கி மற்றும் கூவி விற்கும் வியாபாரிகள், சாலை ஒர வியாபாரிகள் சந்தை வியாபாரிகள, இடம் பெயர் வியாபாரிகள்.
(i) சுமை தூக்கி மற்றும் கூவி விற்கும் வியாபாரிகள்: பொருள்களை தம் தலையிலோ அல்லது முதுகிலோ தூக்கிக் கொண்டு வீடு வீடாக நடந்து சென்று வியாபாரம் செய்பவர்கள் சுமை தூக்கி வியாபாரிகள் என அழைக்கப்படுவர். ஏதேனும் ஒரு வசதியுடன் வண்டியில் பொருட்களை வைத்து, பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம் குடியிருப்பிகள் மற்றும் பொது இடங்களுக்குச் சென்று கூவி விற்பனை செய்பவர்கள் கூவி விற்கும் வியாபாரிகள் எனப்படுவர்.
(ii) சாலை ஓர வியாபாரிகள்: வீதிகள் குறுக்கிடும் இடங்களின் ஓரங்களிலும் நடைபாதைகளிலும் தற்காலிகமாக பூ, பழம், காய்கறி, புத்தகங்கள் போன்றவற்றை கொண்டு வந்து விற்பனை செய்பவர்கள் சாலை ஒர வியாபரிகள் எனப்படுவர்.
(iii) சந்தை வியாபாரிகள்: ஒரு குறிப்பிட்ட நாளிலோ அல்லது தேதியிலோ அல்லது கிழமைகளிலோ நடைபெறும் சந்தைகளுக்கு சென்று விற்பவர்கள் சந்தை வியாபாரிகள் எனப்படுவர். எடுத்துக்காட்டு: பொள்ளாச்சி,இராணிப்பேட்டை மற்றும் மணப்பாறை ஆகிய இடங்களில் நடைபெறும் வாரச் சந்தைகள் குறைந்த விலை உடைய, ஒரு குறிப்பிட்ட வகையான அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை மட்டும் இவர்கள் வியாபாரம் செய்வர்.
(iv) இடம் பெயர் வியாபாரிகள்: மக்கள் நெருக்கம் மிகுந்த வியாபாரம் நடக்கும் இடங்களில் தற்காலிகமாக கடை வைத்து, சில நாட்கள் மட்டும் தங்கி இருந்து விற்பனை செய்பவர்கள் இடம் பெயர் வியாபாரிகள் எனப்படுவர். மேலும் இவர்கள் இடம் விட்டு இடம் சென்று வீட்டு உபயோகப் பொருட்களான துணிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காலணிகள் ஆகியவற்றை விற்பது மற்றும் பழுது பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
17.
(i) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி:
ஏற்றுமதி என்பது உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதாகும். அதே போன்று இறக்குமதி என்பது வெளிநாட்டிலிருந்து சரக்கு மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதாகும்.
(ii)ஒப்பந்த உற்பத்தி அல்லது புற ஒப்படைப்பு:
ஒரு நிறுவனம் அயல்நாட்டில் உள்ள ஒரு சில உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் ஒரு பொருளின் குறிப்பிட்ட உதிரிபாகங்களை குறிப்பிட்ட விரங்களுடன் தயாரிப்பதற்கு செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமே ஒப்பந்த உற்பத்தி அல்லது புற ஒப்படைப்பு அல்லது புறதிறனீ ட்டல் என்று அழைக்கப்படுகிறது.
(iii) உரிமம் மற்றும் தனியுரிமை பெறல்:
ஒரு நிறுவனம் வெளிநாட்டில் உள்ள மற்றொரு நிறுவனத்திற்கு தன்னுடைய இயந்திரம், வியாபார இரகசியங்கள் அல்லது தொழில் நுட்பம் ஆகியவற்றை ஓரு குறிப்பிட்ட உரிமைத் தொகைக்காக பயன்படுத்திக் கொள்ள செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்த ஏற்பாடே உரிமம் ஆகும். உதாரணம் மெக்டனால்ட், பிஸாகட் போன்றவை.
(iv) இணை-வினை:
ஒன்றுக்கு மேற்பட்ட பல நிறுவனங்கள் இணைந்து நேர்மைப் பங்குகளை வாங்குவதன் மூலம் ஒரு நிறுவனத்தையோ அல்லது சொத்தையோ உருவாக்கி மேலும் அந்நிறுவனத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அதனுடைய வருவாய், செலவினங்கள் மற்றும் அதனுடைய வருவாய், செலவினங்கள் மற்றும் சொத்துகளில் பங்கீட்டு கொள்வது ஒரு வியாபார ஒப்பந்தமே இணை -வினையாகும்.
1. அயல்நாட்டு முதலீட்டாளர் உள்நாட்டு நிறுமத்தில் பங்குகளை வாங்குவது.
2. உள்நாட்டு நிறுமம் ஏற்கனவே செயல்படும் அயல்நாட்டு நிறுமத்தில் பங்குகளை வாங்குவது.
3. அயல்நாட்டு நிறுவனம் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்குவது.
18.
(i) சர்வதேச சமாதானத்தை ஊக்குவிப்பதோடு,பன்னாட்டு வர்த்தகம் நடத்துவதற்கு ஒரு உகந்த சூழலை உருவாக்குகிறது.இது உறுப்பு நாடுகளிடையே ஏற்படும் வர்த்தக ரீதியான பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது
(ii) இது தடையற்ற வர்த்தகத்தின் மூலம் வருமானத்தை அதிகரித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.
(iii) உலக வணிக அமைப்பு உறுப்பு நாடுகளுக்கிடையே கட்டுப்பாடுகள் மற்றும் கட்டண தடைகளை நீக்கியுள்ளது.இது உறுப்பு நாடுகளுக்கிடையே சுதந்திரமான வர்த்தகம் நடைபெறுவதற்கு உதவுகிறது.உறுப்பு நாடுகளின் செலுத்தல் சமநிலையில் ஏற்படும் நிலையை சரி செய்ய இறக்குமதியில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
(iv) இது வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவையான மூலதனத்தை வழங்குவதன் மூலம் வர்த்தக தொடர்புடைய விடயங்களில் அவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது
(v) உலக வணிக அமைப்பு மண்டல மற்றும் சர்வதேச மாநாட்டை ஒழுங்குபடுத்துகிறது.இவ்வாறு வளரும் நாடுகளில் உலக வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்,விதிகள்,ஒழுங்குமுறைகள்,உலகளாவிய ரீதியில் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப உதவி ஆகியவற்றை உறுப்பு நாடுகள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்துகிறது
(vi) உறுப்பினர் நாடுகளிடையே கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் உலக மக்கள் பல்வேறு விதமான பொருட்கள் வாங்கி பயன்படுத்த வகை செய்கிறது.
(vii) உலக வர்த்தக அமைப்பு வர்த்தக தடைகளை குறைத்துள்ளது இதன் மூலம் உலகம் முழுவதும் வர்த்தகம் பெருகி தேசிய வருமானம் மற்றும் மக்களின் வருமானம் ஆகியவை அதிகரிக்க உதவுகிறது
(viii) உறுப்பினர் நாடுகளில் ஒருவரோடு ஒருவர் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை உலக வணிக அமைப்பு வழங்குகிறது.உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகள் இல்லாத நிலையில் உலகமெங்கிலும் உள்ள பல நாடுகளோடு பல பலதரப்பட்ட உடன்படிக்கைகளச் செய்ய வேண்டியிருக்கும்.இது ஒரு கூரை கீழ் அனைத்து நாடுகளுக்கும் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது
(ix) உலக வர்த்தக அமைப்பு கட்டுப்பாடற்ற வர்த்தகத்தை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளது.இது மானியங்கள் மற்றும் குவிப்பு பற்றி விதிகளை உருவாக்கியுள்ளது.
19.
இறக்குமதி வணிக நடைமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. பின் வருவன இறக்குமதி வணிகத்திற்காக ஒரு பொதுவான நடைமுறையாகும்.
(i) இறக்குமதி உரிமம் பெறுதல்: இறக்குமதியாளர் இறக்குமதி உரிமத்தை அயல்நாட்டு வணிக பொது இயக்குநரிடமிருந்தோ அல்லது அனுமதி பெற்ற மண்டல அதிகாரியிடமிருந்தோ பெற வேண்டும்.
(ii) வியாபார தகவல் வினவல்:
இறக்குமதி உரிமத்தை பெட்ரா பிறகு, ஏற்றுமதியாளரிடமோ அல்லது அவரின் முகவரிடமோ வியாபார விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
(iii) அன்னியச் செலாவணி பெறுதல்: இறக்குமதியாளர் தான் இறக்குமதி செய்த சரக்கிற்குரிய தொகையை அயல்நாட்டு பண மதிப்பில் செலுத்த அன்னிய செலாவணியைப் பெற வேண்டும்.
(iv) சரக்காணை அனுப்புதல்: இறக்குமதியாளர் சரக்காணையை நேரடியாகவோ அல்லது சரக்காணையத்தின் மூலமாகவோ ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
(v) நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்தல்: அயல் நாடு ஏற்றுமதியாளர் இந்திய இறக்குமதியாளரை பற்றியும் அவரின் பணம் திருப்பி செலுத்தும் திறன் பற்றியும் அறிந்திருக்க ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரை தன் பெயரில் நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்து தருமாறு கோரா வேண்டும்.
(vi) கப்பலிடு ஆவணங்களை பெறுதல்:
இறக்குமதியாளர் அனைத்துக் கப்பலிடு ஆவணங்களையும் அறிவுரைக் குறிப்புடன் சேர்த்து ஏற்றுமதியாளரிடமிருந்து பெற வேண்டும்.
(vii) அகற்றீட்டு முகவரை நியமித்தல்: இறக்குமதி துறைமுகத்திலிருந்து சரக்கை அகற்றீடு செய்வதற்கு பல்வேறு சுங்க நடைமுறைகளை தன்னால் பின்பற்ற முடியாத நிலையில் சரக்கைத் துறைமுகத்திலிருந்து வெளியே கொணர்வதற்கு அகற்றீட்டு முகவரை நியமிக்க வேண்டும்.
(viii) சுங்க நடைமுறைகளைப் பூர்த்தி செய்தல்:
அகற்றீட்டு முகவர் இறக்குமதியாளர் சார்பாக இறக்குமதி செய்யப்பட்ட சரக்கை வெளியே கொணர்வதற்கு பின்வரும் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1. சரக்கை வெளியே கொணர்வதற்கு ஒப்புகை பெறுதல்.
2. துறைமுகக் கட்டணம் செலுத்துதல்
3. நுழைவுச் சீட்டு தயாரித்தல்
4. இறக்குமதி தீர்வை செலுத்துதல்
5. துறைமுகத்திலிருந்து சரக்கை வெளியே கொணர்தல்
7. இறக்குமதியாளருக்கு சரக்கை அனுப்புதல்
8. இறக்குமதியாளருக்கு குறிப்பு அனுப்புதல்
(ix) சரக்கைப் பெற்றுக் கொள்ளுதல்: இறக்குமதியாளர் உரிய இரயில் நிலையத்திலோ அல்லது லாரி நிறுவனத்திலோ இரயில் இரசீதைக் கொடுத்து சரக்கைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
(x) இறக்குமதிக்கான தொகையை செலுத்தி கணக்கைக் தீர்த்தல்:
இறக்குமதியாளர் கீழ்கண்ட வழிகளில் இறக்குமதிக்கான தொகையைச் செலுத்தலாம்.
1. இறக்குமதியாளர்தொகையை செலுத்திய பிறகு ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
2. இறக்குமதியாளர் மாற்றுச் சீட்டிற்கு தொகையை செலுத்திய பிறகு ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
3. இறக்குமதியாளர் மாற்றுச் சீட்டினை ஏற்றபிறகு ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
20.
ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு பின்வரும் தீர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒப்பந்தத்தை ரத்து செய்தல், திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு, தடையுத்தரவிற்கான வழக்கு, பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு
(i) ஒப்பந்தத்தை ரத்து செய்தல் (Recission of Contract):
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒருவர் ஒப்பந்தத்தை மீறும் பொழுது மற்றவர் அவ்வொப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதிக் கொள்ளலாம். மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தின் தீமைக்குள்ள அணைத்து கடமைகளிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். (.க) M என்பவர் N என்பவருக்கு குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கிறார். அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், அதே போல் குறிப்பிட்ட நாள் அன்று மோட்டார் வண்டிக்குரிய பணத்தை N அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார், ஆனால் N அந்த நாளில் பணத்தை அளிக்க மறுக்கிறார்.
(ii) திட்டவட்டமான நிறைவேற்றத்திற்கான வழக்கு (Claim for Specific Performance):
சில சமயங்களில் இழப்பீடுகள், ஒப்பந்த முறிவிற்கான போதுமான ஓர் தீர்வாக இருக்காது.இச்சமயங்களில் நீதிமன்றம் ஒப்பந்த அவரது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு ஆணையிடலாம். ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும்.
(iii) தடையுத்தரவிற்கான வழக்கு:
ஒரு குறிப்பிட்ட செயலை ஒரு நபர் செய்யாதிருக்குமாறு தடைப்படுத்தும் வகையில் அமையும் நீதிமன்றத்தின் ஆணை தடையுத்தரவு ஆகும், ஒரு நபர் ஒரு செயலை செய்யமாட்டேன் என வாக்குறுதி அளித்த நிலையில், அச்செயலைச் செய்யாதிருக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறபிக்கலாம். பின்வரும் வழக்குகளில் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கலாம். (i) தவிர்க்கக்கூடிய ஒப்பந்தம் இருந்தால் (2) செல்லாத ஒப்பந்தமாக இருந்தால் அல்லது (3) செல்லாத ஒப்பந்தம் என கண்டுபிடித்தால்.
(iv) பணிக்கு ஏற்ற தொகைக்கான வழக்கு:
ஒப்பந்தத்தில் ஈடுபடும் ஒரு நபர் வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னர் மற்றொரு நபர் ஒப்பந்தத்தை மீறுவதால் பணிகி ஏற்ற தொகை என்ற கூற்று எழுகிறது. " எவ்வளவு ஈட்டப்பட்டதோ அவ்வளவு" என்ற சொல்லின் பொருள் பணிக்கு ஏற்ற தொகை எனப்படுகிறது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டு மறுபகுதி நிறைவேற்றப்பட முடியாமல் தடை 'ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை முடிந்த நபருக்கு இழப்பீடு வகை செய்கிறது.
(v) ஏற்பட்ட நட்டத்திற்கான இழப்பீடு:
இழப்பீடு என்பது ஒப்பந்தம் மீறுகையால் பாதிக்கப்பட்ட நபர் அடைந்த நட்டத்தை ஈடுகட்டும் வகையில் தவறிழைத்த நபரால் அளிக்கப்படும் பணம் சார்ந்த ஈடு ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நபர், ஒப்பந்தம் மீறுகைக்கு காரணமான நபர் மீது இழப்பீடு பெரும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்திய ஒப்பந்த சட்டம் 1872ன் பிரிவு 73, ஒப்பந்தத்தை மீறும் நபர் அதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு அளிக்கும் பொறுப்புள்ளது. இழப்பீடு நான்கு வகைகளாக உள்ளன, அவை சாதாரண இழப்பீடுகள், சிறப்பு இழப்பீடுகள் பழிவாங்கும் தன்மையுள்ள அல்லது முன்மாதிரி இழப்பீடுகள் மற்றும் பெயரளவு இழப்பீடுகள்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards