11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 25/02/2020
11ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Commerce All Chapter Important Question )
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
கட்டிடங்கள், பாலங்கள் அணைகள் கட்டத் தேவையான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு ________ என்று பெயர்
கட்டுமானத் தொழில்கள்
தயாரிப்புத் தொழில்கள்
உற்பத்தித் தொழில்கள்
சேவைத் தொழில்கள்
2.
பொருட்களின் விலைகளைக் குறைத்து வியாபார வளர்ச்சியை பெருக்க வழி வகுத்தவர் யார்?
அலாவுதீன் கில்ஜி
பால்பன்
வாஸ்கோடாகமா
அக்பர்
3.
பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்ட துறைமுகம் இல்லாதது எவை?
கொற்கை
சாலியூர்
காயல்பட்டினம்
காவிரிப் பூம்பட்டினம்
4.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் முக்கியமான ஆலம்பரை என்ற பண்டைய வர்த்தக நிலையம் அமைந்துள்ள மாவட்டம் எது?
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
வேலூர்
5.
கூட்டாண்மை பதிவுச் சட்டம்
1956
1952
1932
1955
6.
இந்தியா மைய வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு
1932
1935
1947
1949
7.
நெகிழ்வு த் தன்மை உடைய வணிகம்
தனியாள் வணிகம்
கூட்டுப்பங்கி நிறுமம்
கூட்டாண்மை
கூட்டுறவு சங்கம் விடை
8.
தனியாள் வணிகத்தை பதிவு செய்ய______________.
பதிவு தேவையில்லை
பதிவு செய்ய வேண்டும்
விருப்பத்திற்குட்பட்டது
எதுவுமில்லை
9.
கீழ்க்கண்ட பண்டக சாலையில் எது உரிமையின் அடிப்படையில் அல்லாத ஓன்று.
தனியார் பண்டக சாலை
அரசு பண்டக சாலை
கூட்டுறவு பண்டக சாலை
பொதுப் பண்டக சாலை
10.
கீழ்க்கண்டவற்றில் வளர்ச்சி வங்கிகள் அல்ல
இந்தியத் தொழில் நிதிக் கழகம்
இந்தியச் சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி
முத்ரா வங்கி
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி
11.
பல நாடுகளின் இயங்கும் நிறுவனங்கள் ஒரு நாட்டில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றன இதனை _____ நிறுவனங்கள் எனலாம்.
அரசு நிறுவனங்கள்
பன்னாட்டு நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள்
இணை நிறுவனங்கள்
12.
பன்னாட்டு நிறுமம் என்பது
எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது
உலகில் முதல் 200 நிறுவனங்களின் ஒன்றாகும்
ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது
இவை அனைத்தும்
13.
இந்தியாவின் மிகப் பெரிய வணிக வங்கி
ஐசிஐசிஐ
எஸ்.பி.ஐ
பிஎன்பி
ஆர்பிஐ
14.
RTGS மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்ய முடியும்?
எவ்வளவு தொகை வேண்டுமானாலும்
50,000
2 லட்சம்
5 லட்சம்
15.
மின்னணு வங்கியினை __________ மூலம் செயல்படுத்தலாம்.
கணினிகள்
கைபேசிகள்
ATM அட்டை
மேலே உள்ள அனைத்தும்
16.
நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது
இங்கிலாந்து
அமெரிக்கா
சுவிஸ்
இந்தியா
17.
உள்ளூர் பகுதி வங்கிகள் ஊக்குவித்து வருவது
கிராம சேமிப்பு
வணிகச் சேமிப்பு
தொழிற்துறை வளர்ச்சி
விவசாய வளர்ச்சி
18.
அனைத்து கூட்டுறவுகளும் நிறுவப்படுவதற்கு
தொண்டு நிறுவன நோக்கம்
சேவை நோக்கம்
இலாப நோக்கம்
சீர்திருத்த நோக்கம்
19.
கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்கள்
யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
மேற்கண்டவற்றில் ஏதுமில்லை
20.
வங்கியர்கள் பணத்தை கையாள்பவர்கள் மட்டுமல்ல, __________ க்கு வழிகாட்டுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி
வர்த்தக வளர்ச்சி
தொழில் வளர்ச்சி
சேவை வளர்ச்சி
21.
ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கு எந்த வங்கிக்கு அதிகாரம் உள்ளது.
மைய வங்கி
வணிக வங்கி
கூட்டுறவு வங்கிகள்
வெளிநாட்டு வங்கிகள்
22.
நிறுமத்தின் இயக்குநரை கீழ்க்கண்டவற்றுள் யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?
கடனீந்தோர்
கடனாளர்
கடனீட்டு பத்திரத்தார்
பங்குதாரர்கள்
23.
கீழ்க்கண்டவற்றுள் எது நாடாளுமன்ற அல்லது மாநிலச் சட்ட மன்றங்கள் இயற்றிய சட்டத்தின் மூலம் உருவாக்கப்படுகிறது ?
பட்டய (சாசன) நிறுமம்
அயல் நாட்டு நிறுமம்
அரசு நிறுமம்
சட்டமுறை நிறுமம்
24.
25.
ஒரு அரசாங்க நிறுவனம் எதன் பெயரில் பங்குகளை வாங்குகிறது?
பிரதமர்
குடியரசுத் தலைவர்
இந்தியத் தலைமை நீதிபதி
மாநில முதலமைச்சர்
26.
பொதுத் துறை நிறுவனத்தின் மிகப்பழமையான அமைப்பு
பொதுத் துறை நிறுவனம்
துறைவாரி அமைப்பு
பன்னாட்டு நிறுவனம்
சட்டமுறை நிறுவனம்
27.
கூட்டாண்மையை ................பதிவு செய்யலாம்
நிறுமப் பதிவாளர்
கூட்டுறவுப் பதிவாளர்
கூட்டாண்மைப் பதிவாளர்
மாவட்ட அட்சியர்
28.
கூட்டாண்மை பதிவு
கட்டாயம்
விருப்பத்தின் பேரில்
அவசியமில்லை
இவற்றில் ஏதுமில்லை
29.
கூட்டாண்மை உண்டாக்கப்படுவது
ஒப்பந்தத்தால்
கூட்டாளிகளிடையே உறவு
அரசின் வழிகாட்டல்
நட்பின் அடிப்படையில்
30.
புற ஒப்படைப்பின் முக்கிய நன்மை _______
உற்பத்திதிறன்
செலவு குறைப்பு
திறன்
அலகுகள்
31.
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தொழில் அமைப்பு இல்லாதது
கூட்டூப் பங்கு நீறுமம்
தனியாள் வணிகம்
அரசு நீறும்ம்
கூட்டூறவு
32.
33.
34.
மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.
மின்னணு வணிகம்
இணையதளம்
வலைதளம்
வர்த்தகம்
35.
வணிகம் என்பது எதனை உள்ளடக்கியது
பொருட்களை அளித்தல்,
பொருட்கள் விலையிடல்
பொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்
பொருட்களை தயாரித்தல்
36.
37.
பின்வருவனவற்றுள் எது கடல் சார் காப்பீடு வகையினைச் சார்ந்தது?
பணம் திருப்பத் திட்டாவணம்
மருத்துவ கோருரிமை
கப்பல் சார் காப்பீடு
காஸ்கோ காப்பீடு
38.
கீழ்கண்டவற்றுள் காப்பீடு ஒப்பந்தத்திற்கு பொருந்தாதது எது?
தன்னிச்சை ஒப்பந்தம்
நிபந்தனை ஒப்பந்தம்
ஈட்டுறுதி ஒப்பந்தம்
பகிர்ந்தளித்தல்
39.
40.
மிக வேகமான போக்குவரத்திற்கான வழி என்ன?
தொடர்வண்டி
சாலை
கடல்
விமானம்
41.
______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.
வழிச் சீட்டு
சரக்கு குறிப்பு
சார்ட்டர்
ஒப்பந்த இரசீது
42.
அன்பு மற்றும் பாசம் அல்லது சமூக சேவை உள்நோக்கம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
பொருளாதாரச் செயல்பாடுகள்
பண நடவடிக்கைகள்
பொருளாதாரக் சார்பற்ற செயல்பாடுகள்
நிதி நடவடிக்கைகள்
43.
44.
சரக்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆவணம் ______
பண்டக சான்றாணை
துறைமுக இரசீது
துறைமுக சான்றாணை
மேற்கூறிய அனைத்தும்
45.
பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆவணம்
தனியார்
குளிர் சேமிப்பு
கூட்டுறவு
46.
பிணைய அடிப்படையில் பொருட்கள் பாதுகாப்பதற்காக அரசால் உரிமம் வழங்கப்பட்ட பண்டகக் காப்பகங்கள் _______ ஆகும்.
பிணைய பண்டகக் காப்பகங்கள்
குளிர் சேமிப்பு
பொது
மேற்கூறிய அனைத்தும்
47.
இடத்தடை இதன் மூலம் நீக்கப்படுகிறது
போக்குவரத்து
பண்டகசாலை
விற்பனையாளர்
காப்பிடூ
48.
பொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்
அங்காடி
சந்தை
நாளங்காடி
அல்லங்காடி
49.
வாணிகம்’ என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பண்டய நூல்கள் யாவை ?
50.
ஜானகர் என்பவர் யார்?
51.
பன்னாட்டு நிறுமத்திற்கு ஏதேனும் இரண்டு உதாரணங்கள் தருக.
52.
பன்னாட்டு நிறுமம்- இலக்கணம் வரைக
53.
கடன் அட்டை(credit card) - சிறு குறிப்பு வரைக
54.
கடன் கூட்டுறவு விளக்குக?
55.
கூட்டுறவு வரையறு
56.
தொழிற்துறை வங்கிகள் பற்றி நீவீர் அறிவது யாது?
57.
சேவை தொழில்களில் உள்ள சேவைகள் யாவை?
58.
பட்டய (அ) சாசன நிறுமம் என்றால் என்ன?
59.
நிறுமத்தின் ஏதேனும் இரண்டு சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக
60.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு உதாரணங்களைக் குறிப்பிடுக.
அ)தனியார்துறை நிறுவனங்கள்
ஆ)பன்னாட்டு நிறுவனங்கள்
இ)பொதுத்துறை நிறுவனங்கள்
61.
துறைவாரி அமைப்புகளுக்கு இரண்டு உதாரணங்களை குறிப்பிடுக.
62.
உறங்கும் கூட்டாளி என்பவர் யார்?
63.
கூட்டாளி என்பவர் யார்?
64.
தொழில் செயல்முறை புறத் திறனீட்டல் (BPO) என்றால் என்ன?
65.
தனி உரிமையியல் இரண்டு தீமைகளை கூறுக.
66.
பின்வருவற்றுள் எவை தனியாள் வணிகத்திற்கு பொருந்தும்? ஏன்
1) மளிகை
2) மருந்துக்கடை
3) கைத் தொழில் மையம்
4) இணையதள அமைப்பு
67.
தனியாள் வணிகர் என்று அழைக்கப்படுவர் யார்?
68.
உற்பத்தித் தொழில் என்றால் என்ன?
69.
வணிகத்தை வரையறு.
70.
போக்குவரத்து மூலம் வழங்கப்படும் ஏதேனும் இரண்டு சேவைகளைப் பற்றிக் கூறுக.
71.
போக்குவரத்து -வரையறு.
72.
வேலை என்றால் என்ன?
73.
சிறப்புத் தொழில் என்றால் என்ன?
74.
இந்திய உணவுக் கழகம் பற்றி குறிப்பு வரைக.
75.
பண்டக சான்றாணை மற்றும் பண்டக இரசீது இடையே மூன்று வேறுபாடுகளைக் கூறுக.
76.
அல்லங்காடி என்றால் என்ன?
77.
பண்டமாற்றுமுறை என்றால் என்ன?
78.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் மதுரைக் காஞ்சிப் பகுதியில் பொருட்கள் விற்குமிடத்தை எவ்வாறு குறிப்பிடுகிறார்
79.
மின்னணு வங்கியியல் என்றால் என்ன?
80.
இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.
81.
வீட்டு வசதி கூட்டுறவு பற்றிச் சிறு குறிப்பு வரைக
82.
உள்ளூர் பகுதி வங்கிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.இரண்டு உதாரணங்களைத் தருக.
83.
இந்திய ரிசர்வ் வங்கியின் தோற்றம் பற்றிக் கூறுக.
84.
அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?
85.
பொதுத்துறையின் கீழ்வரும் சில நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடவும்.அவற்றை வகைப்படுத்தவும்.
86.
இரகசிய கூட்டாளி என்பவர் யார்?
87.
பெயர்ச்சியியலின் நன்மைகள் விவரி.
88.
தனியாள் வணிகம் -வரைவிலக்கணம் தருக
89.
வணிக்கத்தின் ஏதேனும் மூன்று சிறப்பியல்புகளை விவரி
90.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்கமைப்பு ஆணையம் (IRDAI) என்றால் என்ன?
91.
சார்ட்டர் நபர் என்றால் என்ன?
92.
தொழிலின் கருத்துக்களை விவரி
93.
பண்டகக் காப்பாளர் இரசீது -லிருந்து பண்டக சான்றாணை வேறுபடுத்துக.
94.
மருவுர்ப்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் விளக்குக
95.
இந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை?
96.
தொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும் யாவை ?
97.
வணிக வங்கிகளின் பல்வேறு வகையான இரண்டாம் நிலை செயல்பாடுகளை விளக்குக.
98.
கூட்டுறவுச் சங்கத்தின் வகைகளைக் கூறுக
99.
பல்வேறு வகையான வங்கிகளைச் செயல்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.உதாரணம் தருக.
100.
அமைப்பு முறையேட்டில் அடங்கியுள்ள பொருளடக்கங்கள் யாவை?
101.
துறைவாரி நிறுவனங்களின் நன்மைகள் விவரி.
102.
103.
மின்னணு வணிக மாதிரிகள் பற்றிக் குறிப்பு வரைக.
104.
105.
உற்பத்தித் தொழில் வணிகம் மற்றும் வியாபாரம் ஓர் ஒப்பிடூ செய்க
106.
காப்பீட்டின் கோட்பாடுகளை விவரி.
107.
தொழிலின் சிறப்பியல்புகள் யாவை?
108.
போக்குவரத்தின் பல்வேறு வகைகளை விவரிக்க.
109.
இந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.
1.
(a)
கட்டுமானத் தொழில்கள்
2.
(a)
அலாவுதீன் கில்ஜி
3.
(d)
காவிரிப் பூம்பட்டினம்
4.
(c)
காஞ்சிபுரம்
5.
(c)
1932
6.
(d)
1949
7.
(a)
தனியாள் வணிகம்
8.
(a)
பதிவு தேவையில்லை
9.
(d)
பொதுப் பண்டக சாலை
10.
(d)
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி
11.
(b)
பன்னாட்டு நிறுவனங்கள்
12.
(c)
ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டில் நிறுவனங்களை கொண்டுள்ளது
13.
(b)
எஸ்.பி.ஐ
14.
(c)
2 லட்சம்
15.
(d)
மேலே உள்ள அனைத்தும்
16.
(a)
இங்கிலாந்து
17.
(a)
கிராம சேமிப்பு
18.
(b)
சேவை நோக்கம்
19.
(c)
யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
20.
(a)
பொருளாதார வளர்ச்சி
21.
(a)
மைய வங்கி
22.
(d)
பங்குதாரர்கள்
23.
(d)
சட்டமுறை நிறுமம்
24.
(c)
25.
(b)
குடியரசுத் தலைவர்
26.
(b)
துறைவாரி அமைப்பு
27.
(c)
கூட்டாண்மைப் பதிவாளர்
28.
(b)
விருப்பத்தின் பேரில்
29.
(a)
ஒப்பந்தத்தால்
30.
(b)
செலவு குறைப்பு
31.
(b)
தனியாள் வணிகம்
32.
(a)
33.
(b)
34.
(a)
மின்னணு வணிகம்
35.
(c)
பொருட்களைகொள்முதல் செய்தல் மற்றும் விற்பனை செய்தல்
36.
(a)
37.
(c)
கப்பல் சார் காப்பீடு
38.
(a)
தன்னிச்சை ஒப்பந்தம்
39.
(b)
40.
(d)
விமானம்
41.
(a)
வழிச் சீட்டு
42.
(c)
பொருளாதாரக் சார்பற்ற செயல்பாடுகள்
43.
(d)
44.
(c)
துறைமுக சான்றாணை
45.
(c)
குளிர் சேமிப்பு
46.
(a)
பிணைய பண்டகக் காப்பகங்கள்
47.
(a)
போக்குவரத்து
48.
(a)
அங்காடி
49.
புறநானூறு மற்றும் திருக்குறள்
50.
தமிழர்களுடன் வர்த்தகம் செய்த அரேபியர்கள் ஜானகர் என்று அழைக்கப்பட்டனர்.
51.
பாட்டா, கோல்கேட் பாமொலிங், சோனி கார்ப்பரேசன், சுசூகி, டைமெக்ஸ்.
52.
பன்னாட்டு நிறுவனம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபாரத்தை நடத்துவதாகும்.
-நைல் H.ஜேகோபி.
"ஒரு பன்னாட்டு நிறுமம் என்பது ஒரு வியாபாரத்தைத் தொடங்கி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் மேலாண்மை செய்து வருவதாகும்.
53.
(i) வடிக்கையாளர்கள் மற்றும் பிற தகுதியுள்ள நபர்களுக்குக் கடன் அட்டைகளை வங்கிகள் வழக்குகின்றன.
(ii) இந்த அட்டை மூலம் இந்தியாவில் எந்த கடையிலும் பொருள்கள் மற்றும் சேவைகளை முன் பணம் செலுத்தாம் கடனாக வாங்க முடியும்.
54.
உறுப்பினர்கட்கு குறுகிய காலா கடன் வழங்குதல் தேர்ச்சி பெற்ற சங்கம் ஆகும். வேளாண்மையினர், கைவினைஞர்கள், தொழில் புரிபவர்கள் ஊதியம் ஈட்டுகிறவர்கள் போன்றோருக்கு கடனளிக்கும் உன்னத பணியை கடன் சங்கங்கள் நல்கி வருகின்றன. வங்கிகளிடமிருந்து கடன் பெற முடியாமல் உள்நாட்டு நபர்களிடமிருந்து அதிக வட்டியில் கடன் வாங்கி சீரழியும் பலரை குறைவான வட்டியில் கடன் ஈந்து அவர்களை இடைநிலையர் பிடியிலிருந்து மீட்டு வரும் உன்னதமான சங்கம் கடன் சங்கங்கள்.
55.
"கூட்டுறவு சங்கம் என்பது, உறுப்பினர்களின் பொருளாதார நலனைப் பெருக்கி கொள்வதற்காக, மனிதர்கள் என்ற முறையில் சமத்துவ அடிப்படையில் மக்கள் அவர்களாகவே ஒன்றுபடும் அமைப்பே கூட்டுறவு. H.C கால்வெர்ட் "கூட்டுறவு என்பது. சிறந்த விவசாயம். சிறந்த வணிகம் மற்றும் சிறந்த வாழ்க்கை முறையாகும். சர் ஹெரேஸ் ப்ளங்கெட்.
56.
தொழில்களுக்கான நிதிகளைப் பெரிய அளவில் வழங்குவது , அவைகளின் விரிவாக்கம் நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு நிதி அளிப்பது போன்ற சேவைகளைச் செய்வது வளர்ச்சி வங்கிகள் எனும் தனி வகை வங்கிகள் ஆகும்.மேலும் அவை தொழில்முறை வங்கிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
57.
(i) கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற சேவைத் தொழில்கள் பல நூற்றாண்டாக இருந்து வருகின்றன.
(ii) உலக வர்த்தகத்தில் சேவைத் தொழில்கள் 1970 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.
(iii) உலகப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த துறையாகச் சேவைத் துறை உருவாகியுள்ளது.
58.
ஒரு நாட்டின் அரசாலோ, அரசிடமோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிருமங்கள் பட்டய அல்லது சாசன நிருமங்கள்என்று அழைக்கப்படுகிறது. வழங்கப்பட்ட சாசனத்தில் கூறியுள்ள விதிமுறைகளின்படி. இவை செயல்படும். (எ.கா.) கிழக்கிந்திய நிறுமம் ஸ்டெண்டார்டு சார்ட்டடு வங்கி, இங்கிலாந்து வங்கி மற்றும் ஹைட்ட்சன்ஸ் பேநிறுமம் போன்றவை நிறுமச் சட்டம் இந்த நிறுமத்திற்கு பொருந்தாது. இவ்வகை வங்கிகளை இந்தியாவில் தோற்றுவிக்க இயலாது.
59.
(i) தனியான சட்ட நபர் தன்மையுடையது.
(ii) வரையறு பொறுப்பு
(iii) நீடித்த வாழ்வு
(iv) ஒரு பங்கு ஒரு வாக்கு
60.
அ)தனியார்துறை நிறுவனம்:
(i) CMS கம்பியூட்டர் பிரைவேட் லிமிடெட்
(ii) சத்யம் கம்பியூட்டர் பிரைவேட் லிமிடெட்
ஆ)பன்னாட்டு நிறுவனங்கள்:
(i) IBM இன்டர்நேஷனல் பிசினஸ் மெசின்
(ii) கோகோ கோலா கழகம்.
இ)பொதுத்துறை நிறுவனங்கள்:
(i) இந்திய உணவுக்கழகம் (FCI)
(ii) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC).
61.
(i) இறுதியான பொறுப்பு
(ii) அரசின் நிதியுதவி
(iii) கணக்கியலும் தணிக்கையும்
(iv) மேலாண்மை
(v) சட்டவிலக்களிப்பு.
62.
இத்தகைய 'கூட்டாளி' மூலதனத்தை வழங்குவதோடு நிறுவனத்தின் இலாபநட்டத்தில் மட்டுமே பங்கேற்று வியாபாரத்தின் மேலாண்மையின் பங்கேற்காமல் இருப்பர். வெளி ஆட்களுக்கு அவர் கூட்டாளி போன்று தோன்றாமலும் கூட்டாளிகளின் வரையறாப் பொறுப்பிற்கு அவரும் ஒரு பங்கேற்பாளராகும்.
63.
பல நபர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாண்மையை ஏற்படுத்தினால் அவர்கள் கூட்டாளிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
64.
சேவை சார்புடைய துறைகளில் தற்போது புறத்திறனீட்டல் முறை பெருகி வருகிறது.அதாவது வெளியாட்களிடம் பணியை ஒப்படைப்புச் செய்து அதை தன் நிறுவனத்தின் மூலம் எப்போதும் போல் சந்தையிடுதலை புற திறனீட்டல் அல்லது புற ஒப்படைப்பு என அழைக்கப்படுகிறது.
65.
(i) தனி உரிமம் கட்டணம்
(ii) நிலையான உரிமைத்தொகை செலுத்துதல்
(iii) தனி உரிமம் அளித்தவரின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துதல்
(iv) சுதந்திரமின்மை
(v) குறைந்த அளவு தயாரிப்பு பொருட்களையே கையாள முடியும்
66.
மளிகை கடை தனியாள் வணிகத்திற்கு பொருந்தும் ஏனென்றால் மளிகை கடை குறைந்த முதல் போதுமானது. தொடர்ந்த சட்டசிக்கல் ஏதுமில்லை. சிற்றளவு வியாபாரம் ஆகும்.
67.
தனியாள் வணிகம் என்பது வியாபார அமைப்பு வடிவங்களில் ஒன்றாகும். தனிநபர் தன மூலதனத்தைக் கொண்டு தனது சொந்த திறமை மற்றும் அறிவைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளைத் தனது சொந்தப் பொறுப்பில் மேலாண்மை செய்து நடத்துபவர் தனியாள் வணிகர் ஆவார்.
68.
வளங்கள், இயந்திரம் மற்றும் தொழிநுட்பத் திறமையுடன் உபயோகிக்கவில்லை பொருளாக மாற்றத் கூடியவை உற்பத்தித் தொழில் என்கிறோம்.
69.
எவ்லின் தாமஸ் அவர்களின் கூற்றுப்படி "வணிக நடவடிக்கைகள் பொருட்கள் வழங்குதலும் விற்றலும் முடிவற்ற பொருட்கள் வழங்குதலும் பரிமாற்றமும் கொண்டதே ஆகும்".
70.
(i) உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது : பொருளின் உற்பத்தி நோக்கம் நுகர்வு ஆகும்.பயனுள்ள போக்குவரத்து முறை காலம் மற்றும் இட வசதிகளை உருவாக்குவதன் மூலம் பொருட்களின் தேவை மற்றும் பொருட்களின் மதிப்பு குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.
(ii) பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது : மூலப் பொருட்கள்,எரிபொருள்,உழைப்பு மற்றும் முடிந்த தயாரிப்புகள் மற்றும் மூலதன பயன்பாடு மற்றும் தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது போன்றவைகளுக்கு உதவுகிறது.
71.
கே.கே.செக்சேனா அவர்கள் "ஒரு இருட்டறையில் மெழுகுவர்த்தியின் ஒளிபரவுவது போல் போக்குவரத்து அந்தந்த பகுதிகளில் தனது பணியைச் செய்கிறது" என்று வரைவிலக்கணம் தந்துள்ளார்.
72.
வேலை என்பது கூலி அல்லது ஊதியத்திற்காக மற்றவர்களுக்கு பணி ஆற்றுவது ஆகும். மற்றவர்களை பணியமர்த்துபவர் பணியமர்த்துநர் என்றும் அவரால் பணியமர்த்தப்பட்டவர்கள் பணியாளர்கள் மற்றும் வேலையாட்கள் என்று அழைக்கப்படுகிறது.
73.
சிறப்புத் தொழில் என்பது அந்தந்த துறையால் அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட உயர்கல்வித் தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால் வழங்கப்படும் சிறப்பான பணிகள் ஆகும். வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காளர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் வழங்கும் பணியினை சிறப்பு தொழில் எனலாம்.
74.
(i) உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வசதியை வழங்குகிறது.
(ii) இந்நிறுவனம் பொருட்களை பாதுகாக்கும் வசதியை மாநில, மத்திய பண்டக காப்பகங்கள், மாநில அரசுகள் மற்றும் தனியார்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்கிறது.
(iii) 1964 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் அமைக்கப்பட்டது.
75.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iii) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
76.
இரவில் வியாபாரம் நடைபெறுவதை அல்லங்காடி என அழைக்கப்படுகிறது.
77.
ஒரு பொருள் மற்றொரு பொருளுக்கு மாற்றாகப் பரிமாற்றம் செய்யப்படும் முறையைப் பண்டமாற்று முறை எனலாம்.
78.
பல பொருள்கள் விற்குமிடம் அங்காடி என அழைக்கப்பட்டுள்ளது.
பகலில் நடப்பதை நாளங்காடி எனவும்
இரவில் நடப்பதை அல்லங்காடி எனவும் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் மதுரை ஒரு இரு பெரு நியாமத் எனப்படும் தூங்காநகரம் எனக் குறிப்பிடுகிறார்.
அதாவது இடைவெளியின்றி 24 மணி நேரமும் வியாபாரம் நடந்ததாகக் கூறுகிறார்.
79.
தற்போது அனைத்து வங்கிகளும் வங்கி பரிவார்த்தைக்கான நேரம் மற்றும் செலவை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை இணையம் மூலம் வழங்குகின்றன.
(i) தேசிய மின்னணு நிதி [பரிமாற்றம் (NEFT)
(ii) உண்மை நேர மொத்தத் தீர்வக அமைப்புகள் (RTGS)
(iii) மின்னணு தீர்வக சேவைகள் (Electronic Clearing System)
(iv) கூட்டிணைப்பு வங்கியியல் தீர்வுகள்.
(v) இணைய வங்கியியல்
(vi) கைபேசி வங்கியியல்
(vii) தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்.
80.
(i) உள்ளூர் தொழில்களுக்கு அபாயம் : பன்னாட்டு நிறுவனங்களின் மிகப்பெரிய பொருளாதாரச் சக்தி உள்நாட்டுத் தொழில்களின் முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்துகிறது.
(ii) வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை மாற்றுதல்: வழக்கொழிந்த தொழில்நுட்பத்தை வளரும் நாடுகளுக்கு மாறுவதன் மூலம் இந்த நாடுகளின் தொழில் முன்னேற்றம் தடைபடும்.
(iii) ஏழை மக்களுக்கு நன்மையில்லை: பணக்காரர்களால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை வாங்க முடிகிறது.
(iv) தனிமனித சுதந்திற்கு அபாயம்: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்காமல் தடை ஏற்படுகிறது.
(v) உள்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு: உள்நாட்டு மக்களுக்கு கணிசமான அளவில் வேலைவாய்ப்பு பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்குவதில்லை.
(vi) வலுவான தகுதி நிலையை தவறாக பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் பேரளவு பொருளாதார நிறுவனங்கள் ஆகும்.
(vii) இயற்கை வளங்களைச் சுயநலத்திற்குப் பயன்படுத்துதல் : பன்னாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு இயற்கை வளங்களை தன சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.
(viii) அயல் நாட்டின் சுயநல வளர்ச்சிப் போக்கு: பன்னாட்டு நிறுமங்களின் கலாச்சாரத்தால் உள்ளூர் மக்கள் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது.
(ix) உள்நாட்டு தொழில், மற்றும் பொருளாதார முன்னேற்றம் புறக்கணிப்பு: உள்நாட்டு வணிகம் முன்னேற்றம் ஏற்படுவதில்லை.
81.
உறுப்பினர்கட்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ வீடுகளை பெற்றுத் தரும் சங்கங்களே வீட்டு கூட்டுறவு சங்கங்கள் எனப்படுகின்றன. சொந்தமாக வீடு கட்ட விழையும் அன்பர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வீடுகட்ட கூட்டுறவு சங்கங்களை நிறுவுகின்றன. இச்சங்கங்கள் உறுப்பினர்க்கு சுமார் 10 முதல் 20 ஆண்டுகள் தவணையில் வீட்டு கடன் ஈந்து அவர்களை சொந்த வீடு கட்டிக் கொள்ள உதவுகின்றன.
82.
(i) உள்ளூர் பகுதி வங்கி (LAB) திட்டம் ஆகஸ்ட் 1996 இல் இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
(ii) கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புறப் பகுதிகளில் சிறிய தனியார் வங்கிகளாக உள்ளூர் பகுதி வங்கிகள் அமைக்கப்படுகின்றன.
(iii) ஒவ்வொரு வங்கியும் அருகில் உள்ள இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களை இணைத்துச் சேவை செய்கிறது.
(iv) கரையோர உள்ளூர் பகுதி வங்கி, விஜயவாடா ஆந்திரப்பிரதேசம்.
(v) கிருஷ்ணா பீமா ஸ்ம்ருதி உள்ளூர் பகுதி வங்கி மஹபூப் நகர், ஆந்திரப்பிரதேசம்.
83.
(i) இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியா பண வெளியீடு மற்றும் மைய வங்கிக்கான பிற கடமைகளை ஆற்றி வந்தது.
(ii) 1926 ஆம் ஆண்டில் ஹில்டன் யங் ஆணையம் அல்லது இந்திய நாணய மற்றும் நிதியில் தொடர்பான இராயல் ஆணையம் ஒரு மைய வாங்கி உருவாக்க பரிந்துரைத்தது.
(iii) அதன் விளைவாக இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-இல் உருவாக்கப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1 1935 முதல் செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால் நாட்டுடைமையாக்கப்பட்டது. ஏப்ரல் 1 1949 ஆம் ஆண்டு ஆகும்.
84.
ஒரு நிறுமம் இந்தியாவிற்கு அப்பால் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் தொழிலிடம் உள்ள நிறுமம் அயல்நாட்டு நிறுமம் எனப்படும். இந்தியாவில் நிருமத்தை அமைப்பதற்குப் பின்வரும் ஆவணங்களை கண்டிப்பாக 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவைகள்
(i) சாசனத்தின் சான்றிதழ் நகல் அல்லது கூட்டுருவாத்தின் சான்றிதழ் (அ) அமைப்பு முறையேடு மற்றும் சங்க நடைமுறை வழிகள் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
(ii) நிறுமம் பதிவு அலுவலகம் உள்ள இடம்
(iii) இயக்குநர் மற்றும் செயலரின் பட்டியல்.
(iv) இந்தியாவின் தலைமை வியாபார அலுவலகத்தின் முகவரி.
(v) நிறுமச் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்கிய இந்திய குடிமகனின் பெயர் மற்றும் முகவரி.
85.
(i) அனைத்திந்திய வானொலி - துறைவாரி அமைப்பு
(ii) இந்திய ரிசர்வ் வங்கி - சட்டமுறை நிறுமம்
(iii) அரசுப் போக்குவரத்துக் கழகம் - அரசு நிறுமம்.
86.
இரகசிய கூட்டாளி என்பவர் பொதுமக்களுக்குத் தெரியாமல் அந்நிறுவன உறுப்பினராக இருப்பவர் மற்ற கூட்டாளிகளுக்கு உள்ளதைப் போன்றே இவரும் கடனிற்கு பொறுப்பாளியாவார்.
87.
(i) பொருட்களின் தயாரிப்பு , வடிவமைப்பு,
(ii) தளவாட அமைவிடம், சந்தை மூலங்களை தெரிவுசெய்தல்,உற்பத்தி கட்டமைப்பு,
(iii) விநியோகஸ்தர் அல்லது வணிகர் வலையமைப்பு,வடிவமைப்பு,பண்டகசாலை அமைவிடம்,தளவாட வரைபடம் மற்றும் பெயர்ச்சி பங்கீட்டு வடிவமைப்பு,உற்பத்தி திட்டம்,
(iv) சரக்கிருப்பு மேலாண்மை,சரக்கிருப்பின் நிலைகள் போக்குவரத்து வகையைச் தேர்வு செய்தல் சரக்கை கப்பலில் ஈற்றுதலின் அளவு,
(v) வழித்தடத்தை முடிவு செய்தல் மேலும் போக்குவரத்து ஒப்பந்தவியல் தொகுப்பு மூலப் பொருளை கையாளுதல் ஆகும்.
88.
தனியாள் வணிகம் என்பது வியாபார அலகின் ஒரு வகையாகும். அதில் ஒரு நபர் தனது சொந்த பொறுப்பில் மூலதனத்தை ஏற்படுத்தி நிறுவனத்தின் இடர்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு வியாபாரத்தை மேலாண்மை செய்வதாகும்.
89.
(i) வணிகம் ஒரு பொருளாதாரச் செயல்: பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடத்திலிருந்து நுகரும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
(ii) பொருட்கள் பரிமாற்றம்: பொருட்களை வாங்குதலும் விற்றலும் ஆகிய பணியைச் செய்வது வணிகம்.
(iii) இலாபநோக்கம் : வணிகத்தின் மிக முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவது.
(iv) தங்கு தடையின்றி பொருட்கள் கிடைக்கச் செய்தல், வணிகத்தின் முக்கியப் பணி ஆகும்.
90.
(i) இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் Insurance Regulatory Development Authority of India): இந்தியாவிலுள்ள காப்பீட்டு நிலையங்கள் யாவும் மேற்பார்வை செய்து ஒழுங்குபடுத்த ஓர் உயரிய தலைமை அமைப்பாக தனித்துச் செயல்படும் சட்டப்படியான ஆணையம் இந்தியக் காப்பீட்டு வளர்ச்சி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆகும்.
(ii) இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட(IRDAI Act 1999) சட்டத்தின் படி 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.இதன் தலைமை அலுவலகம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் உள்ளது.
(iii) IRDAI அமைப்பு முறை : இந்தியக் காப்பீடு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் அமைப்பு முறையில் பத்து பேர் கொண்ட குழுவில்,
1.நடுவண் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர் (ஐந்து ஆண்டுகளுக்கு,உயர்ந்தபட்ச வயது 60).
2.ஐந்து முழு நேர உறுப்பினர்கள் (உயர்ந்த பட்ச வயது 62).
3.நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் (5 ஆண்டுகளுக்கு மிகாமல் என்ற அடிப்படையில்) உருவாக்கப்பட்டது.
91.
(i) கப்பல் இரசீது என்பது ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும்.இது கப்பல் நிறுவனத்தால் வழங்கப்படுவது மற்றும் கப்பலின் மாலுமியால் கையெழுத்திடப்பட்டிருக்கும்.
(ii) கப்பலில் வைத்துள்ள பொருட்களைத் திரும்பி பெற்றுக் கொள்வதற்காக விவரிக்கப்பட்ட ஒப்புக் கொள்ளும் இரசீதை இது குறிக்கிறது.இது பொருட்களின் உத்தியோகபூர்வ ரசீதுகளாகவும் செயல்படுகிறது.இது ஒரு மாற்றுமுறை ஆவணமாகும்.
(iii) முக்கிய உள்ளடக்கங்கள் : ஏற்றும் இடம்,கப்பலில் ஏற்றப்பட்ட பொருள்களின் விவரங்கள்,இறக்க வேண்டிய துறைமுகத்தின் பெயர்,சரக்குகள் வழங்கப்படும் அல்லது செலுத்தப்பட வேண்டிய பொருட்கள்,யாருக்காக ஏற்றப்பட்டதோ தேதி வாரியாக ஒப்படைத்தல் போன்றவை இதில் இடம் பெற்றிருக்கும்.
92.
தொழில் நடவடிக்கைகள் பொருட்களை உற்பத்தி செய்வது அல்லது தயாரிப்பு நிலைகள் வழியே செலுத்துவதுடன் தொடர்புடையது ஆகும். உற்பத்தி தொழில் மூலம் நுகர்வு பொருட்களுக்கு மூலப் பொருட்களை வாங்குவது மூலம் பயன்பாடு உருவாகிறது. இறுதியாக நுகர்வோரை சென்றடைகிறது.
93.
| பண்டக சான்றாணை | பண்டக காப்பாளர் இரசீது |
|---|---|
| (i) உரிமை மாற்றம் ஏற்படுத்தும் ஆவணம். | உரிமை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆவணமல்ல. |
| (ii) சரக்கை பெற்று கொண்டதற்கான ஒரு அத்தாட்சி மட்டுமல்லாது சரக்கை பெறுவதற்கான அதிகாரத்தை தரும் ஆவணமாகும். | சரக்கை பெற்று கொண்டவதற்கான ஒரு அத்தாட்சி ஆகும். |
| (iii) மற்றவருக்கு இதை மாற்ற இயலும். | இதை மாற்றி தர இயலாது. |
| (iv) இதை பிணையமாக வைக்க முடியும். | இதை பிணையமாக வைக்க முடியாது. |
| (v) பண்டகச் சான்ராணையை மேலெழுதி கொடுப்பதன் மூலம் பொருட்களை பண்டக காப்பிலிருந்து பெற்று கொள்ளலாம். | இந்த இரசீதையும் பொருட்களின் உரிமையாளர் கடிதத்தையும் இணைத்தால் மட்டுமே பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். |
94.
மருவூர்பாக்கம்:
(i) பூம்புகார் போன்ற பெரிய நகரங்கள் மருவூர்பாக்கம் (உள்நாட்டு நகரம்) என அழைக்கப்பட்டன. உணவுப் பொருள்கள் மற்றும் இதரபொருள்கள் வியாபாரம் செய்யக் கூடிய இடங்களில், அங்காடிகளையும் பெரும் வியாபாரிகளையும் கொண்டிருந்தன.
(ii) எ.கா. : தொண்டி, கொற்கை, பூம்புகார், முசிறி ஆகும்.
பட்டினப்பாக்கம்:
(i) பட்டினப்பாக்கம் என்பது கடலோர நகரம் ஆகும்.
(ii) எ.கா. முத்துக்கள், பவளங்கள், மீன் பிடிப்பதிலும், உப்பு உற்பத்தியிலும் இடம் பெற்றுள்ளன.
95.
(i) அரசின் வங்கியர் மற்றும் நிதி ஆலோசகராகச் செயல்படுதல்.
(ii) ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடுவதில் முற்றுரிமை.
(iii) வங்கியர்களின் வங்கி.
(iv) கடன் மற்றும் பணப்புழக்கத்தின் கட்டுப்பாட்டாளர். ரொக்க இருப்புவீதம், சட்டப்படியான நீர்மைத் தன்மை விகிதம், திறந்த சந்தை செயல்பாடுகள், கடன் தரத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்.
(v) இறுதிநிலைக் கடன் ஈட்டுவோர்.
(vi) தீர்வக அமைப்பு சேவைகள்
(vii) அந்நியச் செலாவணிகளின் பாதுகாப்பாளர்.
(viii) அந்நிய செலாவணி விகிதத்தின் பராமரிப்பு.
(ix) நம்பகத் தன்மையுள்ள தகவல் சேகரிப்பு மற்றும் வெளியீடு.
96.
பண்டங்கள் மற்றும் பணிகள் பரிமாற்றத்தினூடே ஏற்படும் தடைகளும் இடையூறுகளும் அவற்றை நீக்கும் வழி வகைகளும் பின் வருமாறு :-
1. ஆள்சார் தடை
பொருள்கள் தேவைப்படும் நபர்களையும் நியாயமான விலையில் வாங்க விரும்புபவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பே கிடையாது. இக்குறைபாடே ஆள்சார் தடை எனப்படும். உற்பத்தியின் அளவு அதிகரிக்க நுகர்வோரை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. வணிகத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது.
2. இடத் தடை
பொருட்கள் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில், விமானம், கடல் மற்றும் நில போக்குவரத்து போன்றவை நுகர்வோர்களுக்கு பொருட்களை கொண்டு செல்லமுக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.
3. காலத் தடை
நுகர்வுத் தேவைப்படும் பொழுதும் வாங்கவிரும்பும் பொழுதும் பொருட்கள் கிடைக்க வேண்டும். தேவையைக் கணக்கில் கொண்டு பேரளவு உற்பத்தி செய்யப்படுவதும் நுகர்வோரிடம் விற்கத் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்டகாலத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள்ஆண்டு முழுவதும் தேவைஏற்படும். எனவே பொருட்களைப் பண்டகக் காப்பகங்களில் சேகரித்துக் வைத்துக் கொள்வதன் மூலம் நுகா; பொருள் தொடர்ந்து கிடைக்கவழி ஏற்படும்.
4. இடர் மற்றும் பொருட்கள் தரம் கெடாமல் இருக்கத் தடை: பொருட்கள்முறையானசிப்பம் கட்டுதல் மற்றும் நவீனகுளிர்சாதனவசதி கொண்டபண்டகசாலைகள்ஆகியவற்றால் பொருட்களின் தரம் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது. பொருட்கள்பூச்சிகள், எலிகள், ஆவியாதல் போன்றவைகளுக்கு எதிராக பாதுகாக்கப்படுகின்றன.
5. இடர்பாட்டுத் தடை
போக்குவரத்துக் கட்டுமம் உள்ளிட்டவைகள் மூலம் சரக்குகள் கொண்டு சென்றாலும், ஆட்களாலும், இயற்கையாலும் ஏற்படக்கூடிய நட்டங்களைத் தவிர்க்கமுடிவதில்லை, இந்நட்டத்தைஈடுகட்டக் காப்பீடு செய்யப்படுகிறது. தீக்காப்பீடு, கடல்சார் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு ஆகியவற்றின் வழியாக நட்டத்தைப் சரிக்கட்டமுடியும்.
6. அறிவுசார் தடை
சந்தை நிலவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாததால் நுகர்வோர் தரமான பொருட்களை நியாயமான விலையில் வாங்க இயலாமல் போய் விடக்கூடும். இத்தடைக்கு அறிவுசார் தடை என்கிறோம். நல்ல விளம்பரம் மற்றும் விற்பனையாளர் சேவைகள் மூலம் அத்தடையை நீக்கலாம்.
7. பண்டப் பரிமாற்றத் தடை
பணம் பண்டப் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகுக்கிறது. பொருட்களுக்கு உண்டான சரியான விலையை செலுத்துவதன் மூலம் எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவையையும் வாங்குதல் மற்றும் விற்பது ஆகியவற்றை செயல்படுத்துகிறது.
8. நிதித் தடை
உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் அவசியமான நேரத்தில் தேவையான நிதி கிடைப்பதில்லை. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் நிதியை வணிக ரீதியாக செயல்படுத்துவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் நிதி உதவுகிறது.
9.பொருட்களைத் துல்லியமாக தயாரிப்பதில் தடை: ஆராய்ச்சிகளின் மூலம் நுகர்வோரின் தேவையை அறிந்து அவர்களுக்கு தரமான பொருட்களை வழங்க முடிகிறது.
10.பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடத்திலிருந்து நுகர்வோருக்கு நேரடி வீட்டிற்கு கொண்டு செல்லுதல் மின்னணு வணிகம் மூலம் பொருட்களை வீட்டிலிருந்தே வாங்கல் ஆணை பிறப்பிக்கலாம். பொருட்களை பெற்றுக்கொண்ட பின் அதற்குண்டான தொகையினை செலுத்தலாம்.
97.
அடிப்படை அல்லது முதன்மை செயல்பாடுகளைத் தவிர வணிக வங்கிகள் பல்வேறு வகையான பிற சேவைகளையும் வழங்குகின்றன.அவை இரண்டாம் நிலை செயல்பாடுகள் எனப்படுகின்றன.இந்தச் சேவைகளைப் பொதுவாக முகமை செயல்பாடுகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு செயல்பாடுகள் என வகைப்படுத்தலாம்.
முகமைகள் பணிகள்:
(i) நிதிப் பரிமாற்றம்: வங்கிகள் கேட்பு வரைவோலைகள் காசோலைகள் பயணிகள் காசோலைகள் போன்றவைகளை வெளியிடுவதுடன் ஒரு இடத்திலிருந்த இன்னொரு இடத்திற்கு நிதிகளை மாற்ற உதவுகிறது.
(ii) காலமுறையில் செலுத்தும் முனைமம் வாடகை முதலியன:
வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் அறிவுறுத்தலின்படி காப்பீட்டு முனைமம் வாடகை தொலைபேசி கட்டணம் போன்றவை.
(iii) காசோலைகள் பெறுதல் மற்றும் செலுத்தல்: வாடிக்கையாளர்களின் சார்பாக வங்கிகள் மற்ற வங்கிகளின் காசோலைகளை வசூலித்து வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கிறது.
(iv) பங்கு சந்தை பரிவர்த்தனைகள் நடத்துதல்: ஒரு டீமேட் மின்னணு கணக்கு வைப்பாளரால் தொடங்கப்பட வேண்டடும்.
(v) வருமான வரிக் கணக்கைத் தயாரித்தல்: வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் வருமானக் கணக்கினை ஆண்டு தோறும் தயாரிக்கின்றன.
(vi) அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் ஈடுபடுதல்: வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் வெளிநாட்டு நாணய மதிப்பை வாங்குதல் மற்றும் விற்றல் பணியை செய்கிறது.
(vii) தொடர்பாளராகச் செயல்படுதல்: வாடிக்கையாளர்களுக்கு தொடர்பாளராக செயல்பட்டு பயணசீட்டு, கடவுச்சீட்டு போன்றவைகளைப் பெறுகிறது.
98.
(i) நுகர்வோர் கூட்டுறவு
(ii) உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் (அ) தயாரிப்பாளர் கூட்டுறவுச் சங்கம்
(iii) கூட்டுறவு கடன் சங்கங்கள்
(iv) வீட்டுவசதி கடன் சங்கம்
(v) உழவர் கூட்டுறவுச் சங்கம்.
99.
வங்கிகளின் வகைகள் :
வங்கிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
(i) செயல்பாடுகளின் அடிப்படையில்
(ii) இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட தகுதி அடிப்படையில்
(iii) உரிமையாளர் முறை அடிப்படையில்
செயல்பாடுகளின் அடிப்படையில் வங்கிகளை வகைப்படுத்தல்:
(i) மைய வங்கி : ஒரு நாட்டின் பண மற்றும் வங்கிக் கட்டமைப்பின் உச்சநிலைமையாகவும், தேசிய பொருளாதார நலனுக்காகவும்சிறந்த முறையில் செயல்படும் வங்கி அந்த நாட்டின் மைய வங்கி எனப்படும்.என டிகாக் அவர்கள் இலக்கணம் வகுத்துள்ளார்.
(ii) வணிக வங்கிகள்: இவ்வகை வங்கிகள் பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்று இலாபம் சம்பாதிப்பதற்காக வர்த்தகர்கள்,தனிநபர்கள் ஆகியோருக்கும் விவசாயம்,தொழிற்சாலைகள் போக்குவரத்து போன்ற துறைகளுக்கும் கடன்களை வழங்குகின்றன.(எ.கா) ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கரூர் வைஸ்யா வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டடு வங்கி.
(iii) வளர்ச்சி வங்கிகள்: தொழில்களுக்கான நிதிகளைப் பெரிய அளவில் வழங்குவது,அவைகளின் விரிவாக்கம் நவீனமயமாக்கல் ஆகியவற்றிற்கு நொய்தி அளிப்பது போன்ற சேவைகளைச் செய்வது வளர்ச்சி வங்கிகள் எனும் தனி வகை வங்கிகள் ஆகும்.(எ.கா) இந்தியத் தொழில் நிதிக் கழகம் IFCI, இந்தியச் சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி SIDBI,முத்ரா வங்கி(குறுந்தொழில் வளர்ச்ச்சிக்காக)
(iv) கூட்டுறவு வங்கிகள்: இந்தியாவில் உள்ள அனைத்துக் கூட்டுறவு வங்கிகளும் அதன் வாடிக்கையாளர்கள் அல்லது அதன் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் சிறிய வர்த்தகர்கள் போன்றவர்களுக்குச் சொந்தமானது.இந்தியக் கூட்டுறவு வங்கிகள் நகரப்புறங்களை அல்லது கிராமப்புறங்களை அடிப்படையாக கொண்டவை.(எ.கா) தேசிய வேளாண் கூட்டுறவு சந்ததைப்படுத்தல் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி - தலைமை அலுவலகம் சென்னை.
(v) வெளிநாட்டு வங்கிகள் : வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தையும் இந்தியவில் கிளை அலுவலகத்தையும் கொண்ட வங்கிகள் வெளிநாட்டு வங்கிகள் என்று அழைக்கப்படுகின்றன.(எ.கா) பாங்க் ஆஃப் அமெரிக்கா - அமெரிக்கா , பார்க்லேஸ் பாங்க் - இங்கிலாந்து).
(vi) வட்டராக் கிராமிய வங்கிகள்: வட்டார கிராமிய வங்கிச் சட்டம் 1976 இன் படி மத்திய அரசு , மாநில அரசு மற்றும் ஒரு பங்களிப்பு வங்கி ஆகியோர் கூட்டாக இணைந்து இது அமைக்கப்படுகிறது.50:15:35 என்ற விகிதத்தில் இவர்கள் பங்கு மூலதனம் வழங்குகின்றனர்.(எ.கா) பாண்டியன் கிராம வங்கி - மதுரை,பல்லவன் கிராம வங்கி - சேலம்.
(vii) சிறப்பு வங்கிகள்: அரசாங்கத்தில் சிறப்பு நோக்கங்களுக்காகச் சில வங்கிகள் உருவாக்கப்படுகின்றன.1982-ல் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி உருவாக்கப்பட்டது.அதன் முக்கிய நோக்கம் இந்திய வணிகர்களின் சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதாகும்.(எ.கா) இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி EXIM வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி(NHB).
(viii) உள்ளூர் பகுதி வங்கிகள்: உள்ளூர் பகுதி வங்கி LAB திட்டம் ஆக்ஸ்ட் 1996 இந்திய ரிசர்வ் மற்றும் சிறு நகரப்புறப் பகுதிகளில் சிறிய தனியார் வங்கிகளாக உள்ளூர் பகுதி வங்கிகள் அமைக்கப்படுகின்றன.(எ.கா) கரையோர உள்ளூர் பகுதி விஜயவாடா, ஆந்திரப்பிரதேசம்.
(ix) சிறிய நிதி வங்கிகள்: சிறிய நிதி வங்கிகள் SFB, வங்கிகள் இல்லாத பகுதிகளிலும் வங்கி சேவை குறைவாக உள்ள பகுதிகளிலும் நிதி உதவி வழங்க ஏற்படுத்தப்பட்ட தனியார் வங்கிகள் ஆகும்.(எ.கா)
ESAF SFB திருவனந்தபுரம், கேரளா.
(x) செலுத்தல் வங்கிகள்: சிறுதொழில்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கும் பணம் செலுத்தல் மற்றும் நிதி சேவைகள் பரவலாக்கப்படுவதை விரிவுப்படுத்துவதற்காகச் செலுத்தல் வங்கி அமைக்கப்பட்டன.(எ.கா) ஏர்டெல் செலுத்தல் வங்கி லிமிடெட்.
(xi) பன்முகத்தன்மை கொண்ட மேம்பட்ட வங்கிகள் : பன்முகத்தன்மை கொண்ட மேம்பட்ட வங்கிகள் பல நாடுகளைச் சார்ந்தஅரசாகங்களாலால் உருவாக்கப்பட்டுள்ளது.(எ.கா) உலக வங்கி , ஆசிய வளர்ச்சி வங்கி.
100.
(i) பெயர் குறித்த உட்பிரிவு: பெயர் குறித்த உட்பிரிவில் ஒரு நிறுவனத்திற்குச் சட்டப்பூர்மாக அங்கீகரித்த பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிறுமத்தின் பெயரை ஓத்திருத்தல் கூடாது. அமைப்பு முறையேட்டில்உறுப்பினர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளதால் நிறுமத்தின் பெயருடன் வரையறுக்கப்பட்டது என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும்.
(ii) இடங்குறித்த உட்பிரிவு: இப்பிரிவு நிறுமத்தின் பதிவு அலுவலகம் எங்கு அமைந்துள்ளது என்பது பற்றித் தெரிவிக்கிறது. தொழில் தொடங்குவதற்கு முன்பே நிறுமத்தின் பதிவு அலுவலகம் இருக்கும் இடத்தை தெரிவிக்க வேண்டும்.
(iii) நோக்கம் குறித்த உட்பிரிவு: நிறுமத்தால் செயல்படுத்தக்கூடிய நோக்கங்கள் அனைத்தும் இதில் குறிப்பிடபட்டிருக்கும் பங்குதாரர்களின் தேவைகளையும் மற்றும் நிதி ஆதாரத்தையும் பயன்படுத்துவது குறித்தும் இதில் விவரங்கள்இருக்கும்.
(iv) பொறுப்புக் குறித்த உட்பிரிவு: பொறுப்பு குறித்த உட்பிரிவு என்பது பொறுப்புறுதி நிறுமமாயின் அது கலைப்பிற்குள்ளாக நேரிடும்போது அதன் நிறுமச் சொத்துக்கள் அந்த நிறுமத்தின் நிதிகள் பொறுப்புகளை தீர்க்க இயலாத நிலையில் ஒவ்வோர் உறுப்பினரும் வழங்குவதாக உத்திரவாதம் அளித்த தொகை இங்குக் குறிப்பிடப்படும்.
(v) முதல் குறித்த உட்பிரிவு: முதல் பிரிவு என்பது நிறுமத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு முதல், பங்குகளின் வகைகள் மற்றும் பெயரளவு முதல் ஆகியவைப் பற்றி விவரிக்கிறது. நிறுமத்தின் சொத்துக்கள் பற்றியும் இப்பிரிவு விவரிக்கிறது.
(vi) அமைப்பு உட்பிரிவு: பங்குதார்கள் தாங்கள் ஒன்றிணைந்து நிறுமமாக செயல்பட விரும்பும் தங்களின் விருப்பத்தை இப்பிரிவு வெளிப்படுத்துகிறது. பொது நிறுமம் எனில் ஏழு நபர்களும், தனி நிறுமம் இரண்டு நபர்களும் சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இட வேண்டும்.
101.
நன்மைகள்:
(i) எளிமையான அமைப்பு: துறைவாரி நிறுவனங்களை அமைப்பது எளிது. இவ்வமைப்புகளை நிர்வாக முடிவெடுத்து அரசு அமைப்பது எளிய முறையாகும்.
(ii) பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாடு: துறைவாரி நிறுவனங்களின் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தின் மூலமாக மட்டுமே நேரடியாக கட்டுப்படுத்தப்படும். அதற்கு அத்துறை அமைச்சரே பொறுப்பாவார்.
(iii) இரகசியம் காத்தல்: பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறைகள் போன்றவை அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அத்துறைகளில் பணியாளர்கள் தங்களது பணிகள் கொள்கைகள் மற்றும் செயல்பாட்டினைப் பற்றிய இரகசியங்களை பாதுகாத்து வைக்க இயலும்.
(iv) பொதுமக்களுக்கு வரிச்சுமை குறைவு: இத்தொழில் நிறுவனங்கள் தங்களது வருமானத்தை அரசு கருவூலங்கள் மூலம் செலுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு குறைந்த வரியே விதிக்கப்படும்.
(v) சமூக மாற்றத்திற்கான கருவி: அரசாங்கம் பொருளாதாரம் மற்றும் சமூக நீதியை அரசுத் துறை நிறுவனங்கள் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
(vi) பொதுமக்களின் நிதியை தவறாகப் பயன்படுத்துவதினால் ஏற்படும் இடர்ப்பாடு குறைவு.
(vii) அமைச்சகத்தின் விதிகள் மற்றும் செயல்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படும்.
குறைகள்:
(i) தாமதமும், சிகப்பு நாடா போக்கும்: அரசின் நெகிழ்வற்ற நடைமுறைகளையும் மரபுகளையும் வழுவாது பின்பற்றுவதும் காலதாமதமும் மிகப்பிபெரிய குறைபாடாகும். வணிக நிறுவனங்கள் காலதாமாக முடிவெடிப்பது ஏற்கத்தக்கது அல்ல.
(ii) கூடுதல் வரிச்சுமை: துறைவாரி நிறுவனங்களில் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட அரசின் கருவூலத்திலிருந்து தொகையை வழங்க வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மீது மேலும் வரியை சுமத்தி வரிச்சுமை கூட்டுகிறது.
(iii) போட்டியின்மை: வணிக அனுபவமோ அல்லது வியாபார வெளிப்பார்வையோ இல்லாத அரசு அலுவலர்கள் துறைவாரி நிறுவனங்களை நிர்வாகம் செய்வதினால் அவர்களால் துறைவாரி நிறுமங்களை செய்வதினால் அவ்ர்களால் துறைவாரி நிறுமங்களை முறையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.
(iv) பணியில் சராசரி அணுகுமுறை: அரசு அலுவலர்கள் தங்களது பணியில் சராசரி அணுகுமுறை போன்றே இந்நிறுவன பணியிலும் ஈடுபடுகிறார்கள்.
(v) அரசின் தலையீடு: துறைவாரி நிறுவனங்களின் மீது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு விதிகள் ஆகியவற்றை அரசு சுமத்துகிறது. இத்துறைவாரி நிறுவனங்கள் தன்னாட்சியுடன் செயல்பட விடுவதில்லை.
(vi) மேலாண்மைத் திறமைக்குறைவு என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகும் அச்சம். துறைவாரி அமைப்பின் மேலாளர்கள் அரசு அலுவலராக இருப்பதால் அவர்களின் மெத்தனப்போக்கு அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பதில்லை.
(vii) நிதி சார்பு: துறைவாரி நிறுவனங்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் அரசின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டை சார்ந்தும் இருக்க வேண்டும்.
102.
103.
(i) தொழில் நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான வணிகம் (B2C) இம்முறையில் தொழில் நிறுவனம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு நேரடியாக பொருளை விற்கின்றது.
(ii) தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான வணிகம் (B2B) வியாபார நிறுவனங்கள் தங்களுக்கிடையேயான பொருள் வாங்கல் விற்றல்களை மின்னணு வர்த்தகத்தின் மூலம் செய்து கொள்வது இம்முறையில் அடங்கும் (எ.கா) ஸ்னாப் டீல் ப்பிளிகார்ட் அலிபாபா இன்டாமார்ட் டிரேட் இந்தியாகாம் போன்றவை.
(iii) நுகர்வோர்களுக்கு இடையேயான வணிகம் (C2C) இம்முறையில் கைபேசி மூலமாகவோ,இணையதள விளம்பரத்தைப் பார்த்தோ, மின்னணு ஏலமுறையிலோ அல்லது ஒரு இடத்தில் இருக்கும் வாடிக்கையாளருக்கோ பொருள்களை விற்க முடியும்.(எ.கா) இந்தியன் வென்ஸ்சர்ஸ் என்னும் கிராப்ட்லி அப்பிளிகேசன் (பொருளை விற்பது வாங்குவது) மூலம் கையால் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பரந்த அளவில் பரிமாற பய்னபடுத்தப்படுகிறது.'ஒன்ஸ் அகெயின் ஸ்டார் டாட் காம்' என்பது பெண்களுக்கான நவீன பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வாங்குவதற்கான இணையதளம், மற்றவர்கள் குயிக்கர்,ஒ.எல்.எக்ஸ்,'ஈ.பே' மூலம் பயன் பெறலாம்.
(iv) வாடிக்கையாளருக்கும் தொழில் நிறுவனத்திற்கும் இடையேயான வணிகம் (C2B) தனியங்கிகள், மின்னணு பொருட்கள் அறைகலன் மற்றும் இதர பொருட்கள் இணையதளம் மூலம் வாடிக்கையாளரால் தேவைப்படும் தொழில்களுக்கு விற்கப்படுவது இம்முறையில் அடங்கும்(எ.கா) நாக்ரி டாட் காம் மற்றும் மான்ஸ்டர் டாட் காம் போன்றவை இந்திய நிறுமங்களால் நடத்தப்படும் மாதிரிகளாகும்.
(v) தொழிற் நிறுவனத்திற்கும் அரசுக்கும் இடையேயான வணிகம் (B2G) பொருள் மற்றும் சேவைகள் அரசுத்துறைக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்கின்றனர்.(எ.கா) டி.சி.எஸ் நிறுமம் கடவுச் சீட்டு உரிம விண்ணப்ப நடைமுறையினை வெளிநாட்டு உரிமம் வழங்கிட இந்திய அரசுக்காக தன்னுடைய மென்பொருள் மூலம் பணியை முடித்து வழங்குகிறது.
104.
105.
| உற்பத்தி தொழில் | வணிகம் | வியாபாரம் |
| 1. பொருள்: உற்பத்தி தொழில் என்ற சொல் பிரித்து எடுத்தல், மறு உற்பத்தி மாற்றுதல் பயனுள்ள பொருட்களை தயாரித்தல் போன்ற செயல்களைக் குறிக்கின்றது. |
வணிகம் என்ற சொல் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவதை குறிக்கின்றது. | வியாபாரம் என்ற சொல் பொருட்கள் மற்றும் சேவைகள் கொள்முதல் மற்றும் விற்பனையைக் குறிக்கின்றது. |
| 2.உள்ளடக்கம்: கச்சா பொருட்கள் பகுதியாக முடிவுற்ற பொருட்களை முழு இறுதிப் பொருளாக மாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. | வியாபாரம் மற்றும் அதன் தொடர்புடயவற்றை உள்ளடக்கிறது. | பொருட்கள் மற்றும் சேவை பரிமாற்றம் இவற்றை உள்ளடக்கியது. |
| 3.முதல்: பொதுவாக உற்பத்தி தொழிலுக்கு அதிக முதலீடு என்பது தேவைப்படுகிறது. | வணிகத்திற்கு முதல் குறைந்த அளவே தேவைப்படுகிறது. | போதுமான சரக்கிருப்பை வைத்திருக்கவும் கடன் அளிக்கவும் போதுமான முதல் தேவைப்படும். |
| 4. இடர்பாடு: அதிக இடர்பாட்டைக் கொண்டது. | குறைவான இடர்பாட்டை கொண்டது. | குறைவான இடர்பாட்டை கொண்டது |
| 5. பரிமாணம்: பொருட்கள் மற்றும் சேவையின் வழங்கல் அளிப்பு பக்கத்தை பிரதிபலிக்கிறது. | பொருட்கள் மற்றும் சேவையின் தேவை பக்கத்தை பிரதிபலிக்கிறது. | இது அளிப்பு மற்றும் தேவை பக்கத்தை பிரதிபலிக்கிறது. |
| 6. பயன்பாடு உருவாக்கம் : பொருட்களின் உருவத்தையும் வடிவத்தையும் மாற்றி அமைப்பதால் இது உருவப்பயன்பாட்டை உருவாக்குகிறது. | பொருட்களைத் தயாரிப்பாளரிடமிருந்து நுகர்வோருக்கு செல்வதன் மூலம் இடர் பயன்பாட்டை உருவாக்குகிறது. | பரிவர்த்தனை மூலம் உடைமைப் பயன்பாட்டை உருவாக்குகிறது. |
106.
இடரை பலரால் பகிர்ந்து கொள்ளப்படுவதற்காக காப்பீடு ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு காப்பீடு ஒப்பந்தமும் கூட்டுறவு தத்துவத்தின் அடிப்படையில் உருவாகிறது.
(i) மிக்க நம்பிக்கை : இக்கோட்பாட்டின்படி காப்பீடு பெறுநர் மிக்க நம்பிக்கை அடிப்படையில் ஒப்பந்தத்தில் ஈடுபடுகின்றனர்.காப்பீடு பெறுநர் கருப்பொருள் பற்றிய அனைத்து உண்மைகளையும் காப்பீடு தருநகருக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
(ii) காப்பீடு பெறுநலன் ; காப்பீடு பெறுநருக்கு காப்பீடு செய்யப்பட்டு கருப்பொருள் மீது காப்பீடு பெறுநலன் இருக்க வேண்டும்.காப்பீடு பெறுநலன் என்பது காப்பீடு செய்யப்படும் கருப்பொருள் மீது நிதி சார்ந்த அக்கறை இருத்தலை குறிக்கிறது.
(iii) ஈட்டுறுதி : ஒருவருக்கு ஏற்பட்ட உண்மையான நட்டத்தை ஈடு செய்வதே ஈட்டுறுதியாகும்.காப்பீடு பெறுநருக்கு உண்மையில் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த இழப்புக்கு ஈடான தொகை மட்டுமே இழப்பீடாக அளிக்கப்படும்.
(iv) அண்மைக் காரணம் : ஒரு இழப்பு ஏற்பட இரண்டு அதற்கு மேற்பட்ட காரணங்கள் இருப்பின் அதற்குரிய அண்மைக் காரணம் எதுவென காண வேண்டியதை பற்றி குறிப்பிடுவது இக்கோட்பாடு ஆகும்.
(v)பகிர்ந்தளித்தல் : ஒரு கருப்பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீடு செய்யப்பட்டிருப்பின் அதற்கு இரட்டை காப்பீடு என்று பெயர்.காப்பீடு பெறுநருக்கு ஏற்படும் இழப்பினை சம்மந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் அவரவர் செய்திருக்கின்ற காப்பீட்டு ஒப்பந்த தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படியில் அவரவர்களுக்குள்ள பங்கினை பகிர்ந்து அளித்தல் வேண்டும்.
(vi) பகர உரிமை : 'பகர உரிமை' என்பது ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பை காப்பீடு தருநர் ஈடு செய்த பின் காப்பீடு பெருநர் தனக்குள்ள உரிமைகளை காப்பீடு தருநருக்கு மாற்றிக் கொடுப்பது ஆகும்.காப்பீடு பெறுநர் தனக்கு ஏற்பட்ட உண்மையான இழப்பைக் காட்டிலும் கூடுதலாக ஆதாயம் அடைந்து விடக் கூடாது.
(vii) இழப்பை மட்டுப்படுத்தல்: காப்பீடு பெறுநர் காப்பீடு செய்த கருப்பொருளுக்கு விபத்து நேரும் போது காப்பீடு தருநருக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்கும் அல்லது மட்டுப்படுத்தும் வண்ணம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
107.
பொருட்களை உற்பத்தி செய்தல்/திரட்டுதல்: மனித தேவையை பூர்த்தி செய்ய பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது ஒன்று திரட்டல் வேண்டும்.
விற்பனை அல்லது பரிமாற்றம்: தொழிலின் மிக முக்கிய தன்மை என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல் அல்லது பரிமாற்றம் செய்தல் ஆகும். தனிநபர் தன்னுடைய சுய தேவைக்காக துணி நெய்தல் அது தொழில் செயல்பாடு ஆகாது.
பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்புடையது :
பொருட்கள் உற்பத்தி செய்தல்/திரட்டுதல் என்பது நுகர்வு பொருட்களை துணி, பேனா, பிரஷ், பைகள் ஆகியவற்றையும் உற்பத்தி பொருட்களான இயந்திரம் சார்ந்ததாகும். சேவைகள் என்பது மின்சாரம், எரிவாயு, குடிநீர் வழங்குதல் போக்குவரத்து, வங்கி, காப்பீட்டு தொடர்புடையதாகும்.
ஒழுங்கு முறையில் தொடர்புடையது: தனிப்பட்ட முறையில் வாங்கி விற்பது என்பது தொழில் ஆகாது. தொழில் நடவடிக்கைகள் தொடர்ச்ச்சியாக நடைபெற வேண்டும்.
இலாப நோக்கம் : தொழிலின் மிக முக்கிய நோக்கம் இலாபம் ஈட்டுவது ஆகும். மனித இனம் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தினால் தொழில் எனலாம்.
இடர்பாட்டிற்கான கூறு: தொழில் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றதாகும். ஒரு வகையில் தன்னுடைய தொழிலை திறம்பட நிர்வாகம் செய்தாலும் இலாபம் என்பது மற்ற காரணிகளை சார்ந்து உள்ளது. அவையாவன, நுகர்வோர் விருப்பு, வெறுப்பு, மூலப்பொருள் பற்றாக்குறை, போக்குவரத்து சிக்கல் மின்சாரம் பற்றாக்குறை ஆகியன ஆகும். இதன் மூலம் இலாபம் ஈட்டுதல் என்பது நிச்சயமற்றது ஆகும்.
108.
போக்குவரத்து வகைகள் - நிலப் போக்குவரத்து , நீர் போக்குவரத்து , விமான போக்குவரத்து.
நிலப் போக்குவரத்து :
(i) நில வாகனப் போக்குவரத்து மூலம் மக்கள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை நிலப் போக்குவரத்து என்றழைக்கிறோம்.
(ii) பொதி விலங்குகள் : மலை , காடு மற்றும் பாலைவனம் போன்ற பின் தங்கிய பகுதிகளிலும் சிறு சிறு சுமைகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும்.
(iii) குதிரை கோவேறு கழுதை, கழுதை ஒட்டகம் மற்றும் யானை போன்ற விலங்குகளை பொதி விலங்குகள் என்றழைக்கின்றோம்.
(iv) மாட்டு வண்டிகள்: இந்தியாவில் பொருள் மற்றும் மக்களை ஏற்றிச் செல்வதற்குக் கிராமப் பகுதிகளில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் சாலைப் போக்குவரத்து மாட்டு வண்டிகளே ஆகும்.
(v) சாலை போக்குவரத்து : சாலை போக்குவரத்து என்பது குறுகிய மற்றும் நடுத்தர தூரத்திற்கு ஏற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது.பல்வேறு இடங்களில் சாலைகள் அமைப்பதன் மூலம் நாட்டிலுள்ள பிரதான தேசிய வழியில் இணையாமல் தொலை தூரத்தில் உள்ள கிராமப் புறங்களில் வாழும் பெரும்பாலான மக்களை இணைத்து அடிப்படை உள் கட்டமைப்புகளை இது வழங்குகிறது.
(vi) இயந்திர சரக்கேற்றிகள் மற்றும் பேருந்துகள்: நகரத்தின் தொடக்கத்தில் இருந்தே மக்களை சாலைகள் அமைத்தும் சக்கரம் பூட்டிய வண்டிகளைப் பயன்படுத்தியும் பொருள்கள் மற்றும் மக்களை ஏற்றிச் சென்று போக்குவரத்தினை எளிமைப்படுத்தியுள்ளனர்.
(vii) டிராம் வண்டிகள் : =டிராம் வண்டிகள் முதலில் குதிரைகளாலும் பின்னர் நீராவி சக்தியாலும் இப்போது மின்சாரத்தினாலும் இயக்கப்படுகிறது.
(viii) தொடர் வண்டிப் போக்குவரத்து : ஜேம்ஸ் வாட் அவர்களின் கண்டுபிடிப்பான நீராவி இயந்திரம் உலகெங்கிலும் உள்ள போக்குவரத்து முறையில் மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தியது.நீண்ட தூரத்திற்கு மேல் கனரக சரக்குகளைச் சுமந்து செல்வதற்குத் தொடர் வண்டிகள் மலிவான மற்றும் விரைவான வழிவகைகளாக இருக்கின்றன.
நீர் போக்குவரத்து :
(i) நீர் இயற்கை கொடுத்த வெகுமதி ஆகும்.மனித நாகரீகம்,அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் படிப்படியான பயன்பாடு மூலம் பொருளாதார அரசியல் மற்றும்இராணுவ நடவடிக்கைகளுக்கு தண்ணீர் வளங்களைப் பயன்படுத்துகிறது.
(ii) நீர் போக்குவரத்து இரண்டு வகைகள் : உள்நாட்டு நீர் வழி, பெருங்கடல் நீர் வழி.
விமான போக்குவரத்து :
(i) விமான போக்குவரத்து வேகமான மற்றும் விலையுயர்ந்த போக்குவரத்து முறை ஆகும்.
(ii) உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள்.
போக்குவரத்து சமீபத்திய வளர்ச்சிகள்:
மெட்ரோ இரயில் , மோனோ இரயில், புல்லட் இரயில், குழாய் போக்குவரத்து ,கன்வேயர் போக்குவரத்து , கயிறு வழிப் போக்குவரத்து , உயர் சுழற்சி வளையப் போக்குவரத்து.
109.
(i) இந்தியா ஒரு விவசாய நாடு என்றாலும் 1950 ஆண்டு வரை பண்டக காப்பகத்தின் முக்கியத்துவத்தை உணரவில்லை.
(ii) அகில இந்திய கிராமப்புற கடன் கணக்கீட்டு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விவசாய பண்டக (வளர்ச்சி மற்றும் பண்டககாப்பு) கழகச் சட்டம் 1956,தேசிய கூட்டுறவு வளர்ச்சி மற்றும் பண்டகசாலை வாரியம் அமைக்க அரசுக்கு அதிகாரம் வழங்கியது.பொதுத்துறையில் பேரளவு பண்டக காப்பக வசதிகளை நடத்திவரும் மூன்று பெரிய முகமைகளாவன:
இந்திய உணவுக் கழகம் FCI:
(i) இது உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வசதிகளை வழங்கியது.இந்நிறுவனம் பொருட்களை பாதுகாக்கும் வசதியை மாநில அரசுகள் மற்றும் தணியாளர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்கிறது.
(ii) இந்திய உணவுக் கழகம் 746 மில்லியன் டன்கள் சரக்குகளை சேமிக்கும் திறன் பெற்றுள்ளது.
(iii) விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் குறைந்த வாடகையில் பொருட்களை பாதுகாத்தல்.
மத்திய பண்டக காப்பக கழகம் CWC :
(i) இது 1957 ஆண்டு நிறுவப்பட்டது.
(ii) மத்திய பண்டக காப்பக கழகத்தின் மொத்த சேமிப்புத் திறன் 11.17 மில்லியன் டன்கள் ஆகும்.
மத்திய பண்டக காப்பகத்தின் பணிகள்:
(i) வேளாண் பொருட்கள்,விதைகள்,உரங்கள் விவசாய கருவிகள் மற்றும் பிற பொருட்களின் சேமிப்பிற்கான முகமைகள் ஏற்படுத்துவது.
(ii) பொருட்களின் உரிமையாளர்களிடம் கடன் வாங்குவதற்கான மாற்றத்தக்க பண்டக இரசீதுகள் வழங்குதல்.
(iii) தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களை கவனமாக பாதுகாத்து எலிகள்.பூச்சிகள் மற்றும் ஈரத்தன்மை மழை இவற்றிலிருந்து பாதுகாப்பது.
(iv) கொள்முதல் மற்றும் விற்பனை,சேமித்து வைத்தல் விநியோகத்தல் மற்றும் பொருட்களின் போக்குவரத்து ஆகியவற்றிற்கும் அரசாங்கத்திற்கும் ஒரு முகவராக செயல்படும்.
(v) முறையாக பொருட்களை தரவரிசைப்படுத்துவதன் மூலம் சேமித்தல் சந்தையிடுதல் செலவினங்களைக் குறைக்கிறது.
மாநில பண்டக காப்பக கழகம் SWC :
(i) மத்திய பண்டக காப்பக கழகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு ஒவ்வொரு மாநில அரசும் அதன் சொந்த பண்டக காப்பக கழகத்தை நிறுவ முடியும்.
(ii) இதை நிறுவுவதற்கான நிதியை 50 விழுக்காடு மாநில அரசும் தருகிறது.
தமிழ்நாடு பண்டக காப்பக கழகங்கள் TNWC:
(i) 1959-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட்டது.தற்போது பண்டக காப்பக கழகத்தின் சேமிப்பு திறன் 6.83 லட்சம் மெட்ரிக் டன் ஆகும்.7 பிராந்திய அலுவலங்கள் மற்றும் 256 கோட்டங்கள் உள்ளன.இது மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards