6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test

1.
மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.
இந்தியர்கள்
ஐரோப்பியர்கள்
சீனர்கள்
எகிப்தியர்கள்
2.
காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்
பயன்படுத்தப்படுவதால்
பாதுகாப்பாக வைத்திருப்பதால்
சுத்தியல் தட்டுவதால்
சுத்தப்படுத்துவதால்
3.
உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.
நன்னீர்
தூயநீர்
உப்பு நீர்
மாசடைந்த நீர்
4.
பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?
ஆவியாதல்
ஆவி சுருங்குதல்
மழை பொழிதல்
காய்ச்சி வடித்தல்
5.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.
விரைவாக கெட்டித்தன்மையடைய
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
கடினமாக்க
கலவையை உருவாக்க
6.
பீனால் என்பது ________
கார்பாலிக் அமிலம்
அசிட்டிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
7.
உற்பத்தியாளர் எனப்படுபவை
விலங்குகள்
பறவைகள்
தாவரங்கள்
பாம்புகள்
8.
காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.
மறுசுழற்சி
மீண்டும் பயன்படுத்துதல்
மாசுபாடு
பயன்பாட்டைக் குறைத்தல்
9.
பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?
உருளைக்கிழங்கு
கேரட்
முள்ளங்கி
டர்னிப்
10.
இந்தியாவின் தேசிய மரம் எது?
வேப்பமரம்
பலா மரம்
ஆலமரம்
மாமரம்
11.
பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.
12.
இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.
13.
வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.
14.
நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.
15.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _______ ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாப்படுகிறது.
16.
உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத் தூளும் தரப்படுகிறது. இதனை கொண்டு
அ) காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
ஆ) காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன ஏன்?
17.
மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.
18.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்ததால் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.
19.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
20.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?
21.
எவையேனும் ஐந்து தாவரங்களையும் அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.
22.
உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?
23.
மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?
24.
குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும்.
25.
இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.
26.
மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.
27.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
28.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?
29.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
30.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
31.
வெள்ளம்
32.
ஜிப்சம்
33.
செயற்கை உரங்கள்
34.
ஏலக்காய்
35.
கம்பு
36.
நாகரிகங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது.
37.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?
38.
பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
39.
சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
40.
சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?
41.
மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
42.
மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?
43.
மரக்கட்டைகளின் பயன்பாடுகள் யாவை?
44.
மாம்பழம் : கனி :: மக்காசோளம் : __________
1.
(c)
சீனர்கள்
2.
(c)
சுத்தியல் தட்டுவதால்
3.
(c)
உப்பு நீர்
4.
(d)
காய்ச்சி வடித்தல்
5.
(b)
கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
6.
(a)
கார்பாலிக் அமிலம்
7.
(c)
தாவரங்கள்
8.
(c)
மாசுபாடு
9.
(a)
உருளைக்கிழங்கு
10.
(c)
ஆலமரம்
11.
( )
காந்தக் கல்லை
12.
( )
0.3%
13.
( )
பிரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு
14.
( )
ஆபத்தான
15.
( )
16
16.
அ) கொடுக்கப்பட்ட காந்தத்தை இரும்புத் தூளில் புரட்டும்போது காந்தத்தின் எப்பகுதியில் இரும்புத்தூள்கள் அதிகம் ஒட்டுகின்றதோ அது காந்தத்தின் துருவங்கள் ஆகும்
ஆ) காந்தத்தின் துருவப்பகுதிகளில் இரும்புத் தூள்கள் அதிகம் ஒட்டிக்கொள்கின்றன. ஏனெனில் துருவங்களில் காந்த வலிமை அதிகம்.
17.
| மேற்பரப்பு நீர் | நிலத்தடி நீர் |
| புவியின் மேற்பரப்பில் காணப்படுகிறது. | புவிப்பரப்பிற்கு கீழ் மண்ணில் நிறைந்திருக்கும். |
| ஆறு, ஏரி, சதுப்பு நிலநீர், குளம் போன்றவை மேற்பரப்பு நீர் ஆதாரங்களாகும். |
நீருற்று. கிணறு, ஆழ்துளைக்கிணறு போன்ற வை நிலத்தடி நீர் ஆதாரங்கள் |
| மொத்த தண்ணீரில் 0.3% மேற்பரப்பு நீராகும். | மொத்த நன்னீரில் 30% நிலத்தடி நீராகும். |
18.
கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்தாமல் வெளியேற்றினால் ஆறுகளும், கடலும் மாசடைந்து அந்நீரில் வாழும் உயிர்கள் இறக்க நேரிடும். ஆற்று நீரை குடிக்கும் மக்களுக்கு நோய்கள் தொற்றும் ஆபத்து அதிகம். எனவே கழிவுநீரை மறுசுழற்சி செய்து கழிவுகளை நீக்கிய பின் நீர் நிலைகளில் வெளியேற்ற வேண்டும்.
19.
1. உரமாகப் பயன்படுகிறது.
2. சிமெண்ட் தயாரிப்பில் பயன்படுகிறது
3. பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
20.
சிலவகைக் கழிவுகள் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் சிறு பூச்சிகளின் செயல்பாடுகளால் மண்ணோடு மண்ணாக மக்கிப் போகும். இத்தகைய கழிவுகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எனப்படும்.
(எ.கா) காய்கறி மற்றும் பழக் கழிவுகள், உணவு மற்றும் தோட்டக் கழிவுகள்.
21.
1. கரும்பு-தண்டு
2. அரிசி - விதை
3. கத்தரி - காய்
4. தக்காளி -கனி
5. கேரட்-வேர்
22.
1. ஒரு சட்டக காந்தத்தை எடுத்து அதன் ஒரு முனையை இரும்பு ஊசியின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை தேய்க்க வேண்டும்.
2. காந்த முனையை மாற்றக் கூடாது.
3. இரும்பு ஊசியின் எந்த முனையில் இருந்து ஆரம்பித்தோமோ அதே முனையில் இருந்தே மீண்டும் மீண்டும் தேய்க்க வேண்டும்.
4. இதே போல் 30- 40 முறை தேய்க்க வேண்டும்.
5. இப்போது இரும்பு ஊசி காந்தத்தன்மையை பெற்றுள்ளதா என பார்க்க குண்டூசி அல்லது இரும்பு துகள்களை ஈர்க்கிறதா என பார்க்க வேண்டும். அது ஈர்க்கும்
6. இல்லையெனில் இதே முறையை பின்பற்றி மீண்டும் சில முறை தேய்த்தால் இரும்பு ஊசி காந்தத் தன்மையை பெறும்.
23.
மின்காந்தத் தொடர்வண்டியில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன. இவற்றின் வழியே மின்சாரம் பாயும்போது மட்டுமே காந்தத்தன்மை பெறுகின்றன. மின்சாரத்தின் திசை மாறும்போது இதன் துருவங்களும் மாறுகின்றன. தொடர்வண்டியின் அடியிலும், தண்டவாளத்திலும் உள்ள காந்தங்களின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்குவதன் காரணமாக இத்தொடர்வண்டிகள் தண்டவாளத்திலிருந்து 10 செ.மீ உயரத்தில் அந்தரத்தில் நிறுத்தப்படுகின்றன. காந்தத்தின் விலக்கு விசை மற்றும் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி தொடர்வண்டி முன்னோக்கி செலுத்தப்படுகிறது. மின்னோட்டத்தின் மூலம் இக்காந்தங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இத்தொடர்வண்டியில் உராய்வு விசை கிடையாது. அதனால் மணிக்கு 300 கி.மீ வேகத்திற்கு மேல் எளிதாகச் செல்லலாம்.
24.
1. குடிநீர் என்பது மனிதன் குடிப்பதற்கும் உணவு சமைப்பதற்கும் பாதுகாப்பான நீராகும்.
2. உணவு செரிக்கவும், கழிவுப் பொருளை வெளியேற்றவும் நீர் அவசியம்.
3. மனித உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் தினமும் சராசரியாக 2 - 3 லிட்டர் குடிநீர் தேவை.
4. குடிநீரில் இயற்கையான கனிமங்கள் உள்ளதாக இருக்க வேண்டும்.
5. குடிநீர் என்பது சுத்தமானதாகவும் அபாயகரமான மாசுக்கள் மற்றும் கிருமிகள் இல்லாததாக இருக்க வேண்டும்.
6. தூய்மையான குடிநீரில் அமிலத்தன்மை இல்லாமல் pH அளவு சரியாக இருக்க வேண்டும்.
7. குடிநீர் இயற்கையான சுவையுடன் இருக்க வேண்டும்.
25.
1. இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் ஆவார்.
2. இவர் மழைநீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4500 தடுப்பணைகளையும், குளங்களையும் கட்டினார்.
3. இத்திட்டத்தின் மூலம் இறந்து கொண்டிருந்த பல ஆறுகளுக்கு புத்துயிர் தந்தவர்.
4. 2001 ம் ஆண்டு ராமன் மகசேசே விருதையும். 2005ம் ஆண்டு ஜம்னா லால் பஜாஜ் விருதையும் பெற்றார்.
5. இவர் இந்தியாவின் 'ஜல் புருஷ்' (தண்ணீர் மனிதர்) என அழைக்கப்படுகிறார்.
26.
1. மழை நீரை நேரடியாகச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதலே மழைநீர் சேகரிப்பு எனப்படும்.
2. கட்டிடங்களில் மேல்தளத்திலிருந்து விழும் மழை நீரை சேகரித்து குழாய் வழியாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகளில் விடுதல்.
3. இத்தொட்டிகளில் கருங்கல், கரி, மணல் போன்றவை இடப்பட்டிருக்கும்.
4. மேலும் இத்தொட்டியிலிருந்து நேரடியாக நிலத்திற்குள் விட்டு நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்யலாம்.
5. இத்தொட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட மழைநீரை கிணற்றில் விட்டும் பயன்படுத்தலாம்.
27.
இரும்புக்கம்பிகள் (அல்லது) எஃகு வலைகளை கற்காரையுடன் சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரை' எனப்படும்.
1. இது வலுவானது மற்றும் உறுதியானது.
2. அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல் தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்கும் குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் அமைப்பதற்கும். இது பயன்படுகிறது.
28.
செயல் - சோப்பு தயாரித்தல்.
தேவையான பொருள்கள்:
i) 35 மி.லி நீர்
ii) 10 மி.லி நீர் NaOH
iii) 60 மி.லி தேங்காய் எண்ணெய்
செயல்முறை:
1. சோப்பு தயாரிக்கக் கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக்கொள்ளவும்.
2. கண்ணாடி குவளையில் நீர் நிரப்ப வேண்டும்.
3. அதனுடன் 10 கி NaOH சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
4. பின் 60 மிலி தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாகச் சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
5. நன்கு உலரவைக்கும் போது, சோப்பு படிகமாகிறது.
29.
| உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் | உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் |
| இயற்கை காரணிகளான நீர் ஆக்ஸிஜன்,சூரியனின் புற ஊதாக்கதீர்கள் மற்றும் நுண்ணுயிரிகளால் சிதைவுறும் கழிவுகள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் எனப்படும். | நுண்ணுயிரிகள் மற்றும் இயற்கைக் காரணிகளால் எளிய மூலக்கூறுகளாக சிதைவுற முடியாத பொருள்கள் உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள் எனப்படும். |
| இக்கழிவுகள் மண்ணிற்கு வளமளிக்கின்றன. (எ.கா) காய்கறி மற்றும் பழக்கழிவுகள்,தோட்டக்கழிவுகள்,உணவுக் கழிவுகள் |
இக்கழிவுகளால் மண்ணின் வளம் கெடுகிறது. (எ.கா) நெகிழிப் பொருள்கள், உலோகங்கள்,அலுமினியக் கேன்கள் மற்றும் கண்ணாடிப் பாட்டில்கள் |
30.
1. அதிகமான ஒலி அல்லது சத்தமான ஒலி இரைச்சலை ஏற்படுத்துகின்றது. இத்தகைய இரைச்சலையே ஒலி மாசுபாடு என்கிறோம்.
2. சத்தமான இசை, மோட்டார் வாகனங்களில் வெளிவரும் இரைச்சல், பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் இரைச்சல், இயந்திரங்களின் ஓசை போன்றவை இரைச்சலை உருவாக்குகின்றன.
3. இதனால் தூக்கம் கெடுகிறது. படிக்க முடிவதில்லை மன அழுத்தம் ஏற்படுவதோடு செவிகள் பாதிப்படைகிறது
4. நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளும், பறவைகளும், கடலுக்கடியில் திமிங்கலங்களும் பாதிக்கப்படுகின்றன.
குறைக்கும் வழிமுறைகள்
1. தொலைக்காட்சி மற்றும் மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்து கேட்கலாம்.
2. ஓட்டுநர்கள் வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. பட்டாசு வெடிப்பதையும், சத்தமாக பேசுவதையும் தவிர்க்கவும்.
31.
அதிகளவு மழை
32.
CaSO4.2H2O
33.
நில மாசுபாடு
34.
நறுமணப் பொருள்
35.
தானியம்
36.
நகரங்களிலும், கிராமங்களிலும் பல்வேறு தேவைகளுக்கு கால்வாய்கள், குளங்கள், ஆறுகள், கிணறுகள், நீர்த்தேக்கங்கள், ஆழ்துணைக் கிணறுகள், நீர்த் தொட்டிகளிலிருந்து நீர் பெறப்படுகிறது.
37.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட முகவையை மேசையில் வைக்கும் போது காற்றிலுள்ள நீராவி முகவையின் மீது பட்டு குளிர்ந்து நீராக மாறி பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும்.
38.
i. வீரியம் குறைந்த அமிலம்
ii. ஆவியாகும் தன்மையுடைய, வெண்ணிறப் படிகம்
iii. நிறமற்றது. ஆனால், மாசு காரணமாக இளஞ்சிவப்பு நிறமாக மாற்றமடையும்.
39.
1. சிமெண்டுடன் நீர் சேர்க்கும் போது சில நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது.
2. எனவே, சிமெண்டின் கெட்டிபடும் நேரத்தைத் தாமதமாக்குவது அவசியமாகிறது
3. இதற்காகவே சிமெண்டுடன் ஜிப்சம் சிறிதளவு சேர்க்கப்படுகிறது.
40.
1. இயற்கை சூழ்நிலை மண்டலம்
2. செயற்கை சூழ்நிலை மண்டலம்
41.
அ) காற்று மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) நில மாசுபாடு
ஈ) ஒலி மாசுபாடு என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
42.
நம்மைச் சுற்றி காணப்படும் தாவரங்களில் சில தாவரங்கள் நமது நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன. இவை மருத்துவத் தாவரங்கள் எனப்படுகின்றன.
43.
மரக்கட்டைகள் வீடு கட்டவும், மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகின்றன.
44.
விதை
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards