7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 7th Standard Social Science Tamil Medium Important questions 2019-2020 )
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மிசிசிபி என்பது ஒரு _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
மலை
நீர்வீழ்ச்சி
ஆறு
கடற்கரை
2.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________
குற்றாலம்
வேம்பநாடு
கார்ரி
மியாமி
3.
ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _________
ஆற்று வளைவு
காயல்
கழிமுகம்
முகத்துவாரம்
4.
உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை _________.
மவுனாலோ
செயின்ட் ஹெலன்
ஸ்டாராம்போலி
பினாடுபோ
5.
பேரென் தீவு கடைசியாக _________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
1997
2007
2017
1987
6.
வெளிப்புற புவிக்கருவில் _________ மிகுதியாக உள்ளது.
சிலிக்கா
மக்னீசியம்
இரும்பு
நிக்கல்
7.
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
1556
1526
1625
1562
8.
சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்
ஆலம்ஷா
முகமது ஷா
முபாரக் ஷா
கிசிர்கான்
9.
தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
1398
1368
1389
1498
10.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
மார்க்கோபோலோ
மெகஸ்தனிஸ்
அல்பரூனி
யுவான் சுவாங்
11.
பாண்டியர்களின் தலைநகர்
உறையூர்
மதுரை
கொற்கை
தஞ்சாவூர்
12.
சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.
புத்த சமயம்
சமணமதம்
சைவ சமயம்
வைஷ்ணவம்
13.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
பால்பன்
இல்டுமிஷ்
நாசிர் உதீன்
குத்புதீன் ஐபக்
14.
கஜினி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்ட ஷாகி அரசர்
ஜெயச்சந்திரா
ஜெய பாலர்
ராஜ்ய பாலர்
ஜெய சுந்தர்
15.
தேவபாலர் ஆதரித்த மதம்
சீக்கிய மதம்
இந்து மதம்
பௌத்த மதம்
சமண மதம்
16.
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
மார்க்கோபோலோ
அல் பரூனி
இபன் பதூதா
நிகோலா கோண்டி
17.
தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்
சேரர்கள் காலம்
சோழர்கள் காலம்
பாண்டியர் காலம்
பல்லவர்கள் காலம்
18.
பிராமணரல்லாத உடமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்
வேளாண்வகை
பிரம்ம தேயம்
சாலபோகம்
தேவதானம்
19.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று _____________
கடல் ஓங்கல்கள்
கடல் வளைவுகள்
கடல் தூண்கள்
கடற்கரை
20.
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அமெரிக்கா
இந்தியா
சீனா
பிரேசில்
21.
_______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
ரஸ்ஸியா
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
பால்பன்
22.
குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
லாகூர்
புனே
தொலைதாபாத்
ஆக்ரா
23.
எரிமலைக் குழம்பு மலைகளின் கூம்பில் உள்ள அழுத்தத்திற்கு _________ என்று பெயர்
எரிமலைப் பள்ளம்
லோப்போலி
எரிமலைக் கொப்பரை
சில்
24.
நில நடுக்கத்தின் ஆற்றல் செறிவின் அளவினை _______________ மூலம் அளக்கலாம்.
சீஸ்மோகிராஃப்
ரிக்டர் அளவு கோல்
அம்மீட்டர்
ரோட்டோ மீட்டர்
25.
சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
கண்ணாயிரம்
உறையூர்
காஞ்சிபுரம்
தஞ்சாவூர்
26.
பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?
விஜயாலயன்
முதலாம் ராஜராஜன்
முதலாம் ராஜேந்திரன்
அதிராஜேந்திரன்
27.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
சிலை வழிபாட்டை ஒழிப்பது
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.
28.
பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?
முதலாம் போஜா
முதலாம் நாகபட்டர்
ஜெயபாலர்
சந்திரதேவர்
29.
அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ___________ ஆவார்.
மார்க்கோபோலோ
அல் -பரூனி
டோமிங்கோ பயஸ்
இபன் பதூதா
30.
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.
அயினி அக்பரி
தாஜ் - உல் – மா -அசிர்
தசுக்-இ-ஜாஹாங்கீரி
தாரிக் – இ - பெரிஷ்டா
31.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
32.
வீழ்ச்சி குளம் என்றால் என்ன?
33.
பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
34.
‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
35.
செயலிழந்த எரிமலைக்கு உதாரணம் கொடு.
36.
சியால் என்றால் என்ன ?
37.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
38.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
39.
தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக
40.
ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக
41.
இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.
42.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?
43.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?
44.
1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
45.
எரிமலை என்றால் என்ன?
46.
புவிக்கரு பற்றி சுருக்கமாக எழுதவும்
47.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
48.
சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).
49.
டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
50.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
51.
எரிமலை வெடிப்பின் விளைவுகள் யாவை?
52.
சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.
53.
பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?
54.
சான்றுகளை வகைப்படுத்தி, அவற்றை விவரிக்கவும்.
1.
(c)
ஆறு
2.
(b)
வேம்பநாடு
3.
(d)
முகத்துவாரம்
4.
(a)
மவுனாலோ
5.
(c)
2017
6.
(c)
இரும்பு
7.
(b)
1526
8.
(d)
கிசிர்கான்
9.
(a)
1398
10.
(a)
மார்க்கோபோலோ
11.
(b)
மதுரை
12.
(c)
சைவ சமயம்
13.
(d)
குத்புதீன் ஐபக்
14.
(b)
ஜெய பாலர்
15.
(c)
பௌத்த மதம்
16.
(c)
இபன் பதூதா
17.
(b)
சோழர்கள் காலம்
18.
(a)
வேளாண்வகை
19.
(d)
கடற்கரை
20.
(c)
சீனா
21.
(c)
இல்துமிஷ்
22.
(a)
லாகூர்
23.
(a)
எரிமலைப் பள்ளம்
24.
(b)
ரிக்டர் அளவு கோல்
25.
(d)
தஞ்சாவூர்
26.
(a)
விஜயாலயன்
27.
(b)
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
28.
(b)
முதலாம் நாகபட்டர்
29.
(d)
இபன் பதூதா
30.
(b)
தாஜ் - உல் – மா -அசிர்
31.
1. கடற்கரையிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாக பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.
2. எ.கா: ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி, தமிழ்நாட்டிலுள்ள பழவேற்காடு ஏரி மற்றும் கேரளாவில் உள்ள வேம்பநாடு ஏரி.
32.
வீழ்ச்சி குளம் (அல்லது) வீழ்ச்சி உட்பாய்த்தேக்கம்:
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் வீழ்ச்சி உட்பாயத்தேக்கம் (அல்லது) வீழ்ச்சிக் குளம் எனப்படும்.
33.
அ). விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தும் பல நீர்ப்பாசன கால்வாய்களை வெட்டியும் வேளாண்மையை மேம்படுத்தினார்.
ஆ). பிரோஷாபாத், ஜான்பூர், ஹிசார், பிரோஷ்புர் ஆகிய புதிய நகரங்களை அவர் நிர்மாணித்தார்.
இ). ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகளை நிறுவினார். கல்லூரிகள்,மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை கட்டினார்.
ஈ). மனிதாபமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார். இஸ்லாமிய சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார்.
34.
1. இல்துமிஷ் ஆட்சி காலத்தில் மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்.
2. செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை மறுத்தது மூலம் மங்கோலிய ஆபத்தைத் தவிர்த்தார்.
3. மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்ள துருக்கிய பிரபுக்கள் 40 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அதுவே சகல்கானி அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
35.
மியான்மரின் போப்பா, ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சரோ மற்றும் கென்யா செயலிழந்த எரிமலைகள் உதராணங்களாகும்.
36.
அ) புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது.
ஆ) கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது.
இ) இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது.
ஈ) இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம்.
37.
அ) சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது.
ஆ) நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
இ) மகசூலில் மூன்றில் ஒரு பகுதி நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
ஈ) இவற்றில் பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது.
38.
சந்தனம், கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபர்ணக் கற்கள், மிளகு, நெல், தானியங்கள், உப்பு.
39.
"உமையத்துக்களும்” “அப்பாசித்துகளும்" தொடக்கக்கால கலீஃபாத்துகளாகும்.
40.
1. பிரதிகாரர்கள்
2. சௌகான்கள்
3. சாளுக்கியர்கள்
4. பரமாரர்கள்
41.
(i) மார்கோபோலோ
(ii) அல் -வரூனி
(iii) இபன் பதூதா
(iv) நிகோலோ கோண்டி
(v) அப்துல் ரஸாக்
(vi) டோமிங்கோ பயஸ்
42.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் “தசுக் - இ ஜஹாங்கீர்".
43.
நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார்.
44.
1. பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ‘தாமர்லைன்' என்று அழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.
2. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவின் மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
3. இந்தியாவின் வலிமையை சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து 1398 டிசம்பரில் டெல்லியைக் கொள்ளையடித்தனர்.
4. தைமூர் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
5. தைமூர் தங்கம், வெள்ளி நகைகள் என பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி சாமகண்டில் நினைவுச் சின்னங்களை கட்டுவதற்காக தச்சு வேலை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள், போன்ற கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
45.
எரிமலை
புவியின் மேற்பரப்பில் உள்ள பிளவு அல்லது துளை வழியே வெப்பம் மிகுந்த மாக்மா என்னும் பாறைக் குழம்பு வெளியேறுவதையே எரிமலை என்கிறோம்.
46.
அ) புவியின் மையப்பகுதியை புவிக்கருவம் என குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது.
ஆ) வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது.
இ) புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவை திரவ நிலையில், இரும்பு குழம்பாலான வெளிப்புற புவிக்கரு 2900 முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.
ஈ) திடநிலையில் உள்ள நிக்கல் (Ni) மற்றும் இரும்பால் (Fe) ஆன நைஃப் (Nife) என்ற உட்புற புவிக்கரு 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம் வரை பரந்துள்ளது. இதன் அடர்த்தி 13.0 கிராம்/ செ.மீ ஆகும்
47.
உள்ளாட்சி நிர்வாகம்:
1. சோழ ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
2. இக்குழுக்கள் நீர்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மதவிழாக்கள் போன்ற பணிகளை மேற்கொண்டன.
நீர்ப்பாசனம்:
1. சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
2. கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கலை மற்றும் ஒலியம்:
சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் சுட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள் செப்புச்சிலைகள். ஓவியங்கள். படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன.
இலக்கியப்பணி:
உன்னதமான இலக்கியங்களான பெரியபுராணமும், கம்பராமாயணமும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.
குடவோலை முறை:
சோழர்கள் ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சியில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை பின்வருமாறு. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு ஓலைத்துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடவோலை முறை என அழைக்கப்பட்டது.
48.
1. அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
2. வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாக சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
3. 0 முதல் 9 வரைரிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அது வரையிலும் மேலை நாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.
4. ஐரோப்பியர்கள். கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர்.
5. பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
49.
1. முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்க செய்திருந்தார்.
2. இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத் தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
3. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள 'ஜிட்டல்' என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன,
4. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும். வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலாக பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்தது.
50.
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
நீர்: 'V' வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு வரி.
காற்று: காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்.
பனி: பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரெட்டுகள்) 'U' வடிவ பள்ளத்தாக்கு.
கடல் அலை: கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.
51.
எரிமலை வெடிப்பின் விளைவுகள்
1. புவியின் உள் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பமானது 35 மீட்டருக்கு 10 செ.மீ. ஆக உயர்ந்து கொண்டே வருகிறது.
2.வெப்பத்துடன் அழுத்தமும் அதிகரிக்கின்றது. 15 கிலோமீட்டர் ஆழத்தில் அழுத்தமானது சதுர சென்டி மீட்டருக்கு 5 டன்கள் என்ற அளவில் உயர்கின்றது.
3. இத்தகைய நிலையில் புவியின் உள்ளே பாறைக் குழம்பு மிதமான இளகிய நிலையில் உள்ளது. இதுவே மாக்மா ஆகும். மிகுதியான அழுத்த நிலையில் மாக்மாவானது எளிதில் பற்றக் கூடிய வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் திறன் கொண்டதாக காணப்படுகிறது.
4. இத்திறன் காரணமாகவே ஆற்றலற்ற புவிப்பகுதிகளில் மாக்மா பாறைக்குழம்பு வெடித்து வெளியேறுகிறது.
52.
1. உள்ளாட்சி நிர்வாகம் ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகள் மூலம் செயல்பட்டது.
2. விவசாயிகளின் குடியிருப்புகள் ஊர்கள் என அழைக்கப்பட்டன.
3. பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் நீதி, நிதி மற்றும் பொது நிர்வாகங்களை மேற்கொண்டனர்.
4. வணிகர்களின் குடியிருப்பை நகரத்தார் நிர்வகித்தனர்.
5. கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்க வேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.
6. ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
53.
1. பாலர்கள் பௌத்த கோயில்களையும், புகழ் பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களையும் ஆதரித்தனர்
2. பாலர்கள் மூலம் பௌத்த சமயம் திபெத்தில் நிறுவப்பட்டது.
3. சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த அரசுகளுடன் பாலர்கள் சுமூகமான உறவு கொண்டிருந்தனர்.
4. தனித்தன்மை வாய்ந்த பாலர்களின் கலை உருவானது.
5. செப்புச் சிலைகளிலும் பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வெளியிடப்பட்டன.
54.
1. கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதற்கு உதவக்கூடிய ஆதாரங்களான ஆவணங்கள் அல்லது பதிவுகளே சான்றுகள் எனப்படும்.
2. சான்றுகள் முதல் நிலைச் சான்றுகள் மற்றும் இரண்டாம் நிலைச் சான்றுகள் என இருவகைப்படும்.
முதல்நிலைச் சான்றுகள்:
பொறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள், ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறும் செய்திகளும் முதல் நிலைச் சான்றுகள் ஆகும்.
இரண்டாம் நிலைச் சான்றுகள்:
இலக்கியங்கள், கால வரிசையிலுள்ள நிகழ்வுப் பதிவுகள், பயணக் குறிப்புகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள், சுய சரிதைகள் ஆகியவை இரண்டாம் நிலைச் சான்றுகள் ஆகும்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards