7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Social Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மிசிசிபி என்பது ஒரு _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
மலை
நீர்வீழ்ச்சி
ஆறு
கடற்கரை
2.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________
குற்றாலம்
வேம்பநாடு
கார்ரி
மியாமி
3.
டார்ன் ஏரி என்பது _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
ஆறு
பனியாறு
கடல்
காற்று
4.
பேரென் தீவு கடைசியாக _________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
1997
2007
2017
1987
5.
கொலம்பியா பீடபூமி _________ ல் உள்ளது.
வட அமெரிக்கா
தென் அமெரிக்கா
ஆஸ்திரேலியா
கனடா
6.
வெளிப்புற புவிக்கருவில் _________ மிகுதியாக உள்ளது.
சிலிக்கா
மக்னீசியம்
இரும்பு
நிக்கல்
7.
சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்
ஆலம்ஷா
முகமது ஷா
முபாரக் ஷா
கிசிர்கான்
8.
தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
1398
1368
1389
1498
9.
இபன் பதூதா _________ நாட்டுப் பயணி
சீனா
கிரீஸ்
மொராக்கோ
போர்ச்சுக்கல்
10.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
மார்க்கோபோலோ
மெகஸ்தனிஸ்
அல்பரூனி
யுவான் சுவாங்
11.
பாண்டியர்களின் தலைநகர்
உறையூர்
மதுரை
கொற்கை
தஞ்சாவூர்
12.
சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.
புத்த சமயம்
சமணமதம்
சைவ சமயம்
வைஷ்ணவம்
13.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
பால்பன்
இல்டுமிஷ்
நாசிர் உதீன்
குத்புதீன் ஐபக்
14.
பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்
தர்ம பாலர்
தேவ பாலர்
கோபாலர்
மகி பாலர்
15.
கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்
ஹரிச்சந்திரா
வத்சராஜா
நாகபட்டர்
தேவ பாலர்
16.
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
மார்க்கோபோலோ
அல் பரூனி
இபன் பதூதா
நிகோலா கோண்டி
17.
தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்
சேரர்கள் காலம்
சோழர்கள் காலம்
பாண்டியர் காலம்
பல்லவர்கள் காலம்
18.
வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்
சோழர்கள்
முகலாயர்கள்
விஜயநகரப் பேரரசர்கள்
டெல்லி சுல்தான்கள்
19.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் _____________ ஆகும்.
சர்க்
அரெட்டுகள்
மொரைன்
டார்ன் ஏரி
20.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.
உட்பாயத் தேக்கம்
வண்டல் விசிறி
வெள்ளச் சமவெளி
டெல்டா
21.
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
முகமதுபின் துக்ளக்
பிரோஷ் ஷா துக்ளக்
ஜலாலுதீன்
கியாசுதீன்
22.
குத்புதீன் தனது தலைநகரை ______________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
லாகூர்
புனே
தொலைதாபாத்
ஆக்ரா
23.
_________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.
பசிபிக் வளை யம்
மத் திய அட்லாண்டிக்
மத்திய-கண்டம்
அண்டார்ட்டிக்
24.
நைஃப் (Nife)________ ஆல் உருவாக்கப்பட்டது.
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
சிலிக்கா மற்றும் அலுமினியம்
சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
இரும்பு மற்றும் மெக்னீசியம்
25.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த இந்தியப் பகுதிக்கு மார்க்கோபோலோ 13ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்றார்?
சோழமண்டலம்
பாண்டிய நாடு
கொங்குப்பகுதி
மலைநாடு
26.
சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
கண்ணாயிரம்
உறையூர்
காஞ்சிபுரம்
தஞ்சாவூர்
27.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
சிலை வழிபாட்டை ஒழிப்பது
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.
28.
‘பிருதிவிராஜ ராசோ’ எனும் நூலை எழுதியவர் யார்?
கல்ஹணர்
விசாகதத்தர்
ராஜசேகர்
சந்த் பார்தை
29.
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.
அயினி அக்பரி
தாஜ் - உல் – மா -அசிர்
தசுக்-இ-ஜாஹாங்கீரி
தாரிக் – இ - பெரிஷ்டா
30.
கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ______________ ஆகும்.
வேளாண்வகை
சாலபோகம்
பிரம்மதேயம்
தேவதானம்
31.
பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை கூறிப்பிடவும்.
32.
வீழ்ச்சி குளம் என்றால் என்ன?
33.
கி.பி.(பொ.ஆ)12ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
34.
முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயரென்ன?
35.
சியால் என்றால் என்ன ?
36.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக
37.
‘காணிக்கடன்’ பற்றி எழுதுக.
38.
சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
39.
தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக
40.
கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக
41.
இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.
42.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கொட்டைகளையும் பட்டியலிடவும்.
43.
‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?
44.
1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
45.
சீஸ்மோகிராஃப் என்றால் என்ன?
46.
புவிக்கரு பற்றி சுருக்கமாக எழுதவும்
47.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
48.
சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).
49.
டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
50.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
51.
'கண்டத்தட்டு நகர்வுகள்' குறித்து எழுதுக.
52.
முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் பெருமைகளை விளக்குக.
53.
பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?
54.
சமயச் சார்பற்ற இலக்கியங்கள் பற்றி ஒரு விளக்கம் தருக.
1.
(c)
ஆறு
2.
(b)
வேம்பநாடு
3.
(b)
பனியாறு
4.
(c)
2017
5.
(a)
வட அமெரிக்கா
6.
(c)
இரும்பு
7.
(d)
கிசிர்கான்
8.
(a)
1398
9.
(c)
மொராக்கோ
10.
(a)
மார்க்கோபோலோ
11.
(b)
மதுரை
12.
(c)
சைவ சமயம்
13.
(d)
குத்புதீன் ஐபக்
14.
(c)
கோபாலர்
15.
(a)
ஹரிச்சந்திரா
16.
(c)
இபன் பதூதா
17.
(b)
சோழர்கள் காலம்
18.
(d)
டெல்லி சுல்தான்கள்
19.
(c)
மொரைன்
20.
(b)
வண்டல் விசிறி
21.
(d)
கியாசுதீன்
22.
(a)
லாகூர்
23.
(a)
பசிபிக் வளை யம்
24.
(a)
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
25.
(b)
பாண்டிய நாடு
26.
(d)
தஞ்சாவூர்
27.
(b)
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
28.
(d)
சந்த் பார்தை
29.
(b)
தாஜ் - உல் – மா -அசிர்
30.
(d)
தேவதானம்
31.
பனியாறு, அரெட்டுகள், 'U' வடிவ பள்ளதாக்கு.
32.
வீழ்ச்சி குளம் (அல்லது) வீழ்ச்சி உட்பாய்த்தேக்கம்:
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் வீழ்ச்சி உட்பாயத்தேக்கம் (அல்லது) வீழ்ச்சிக் குளம் எனப்படும்.
33.
கி.பி (பொ.ஆ) 12 ம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சியை முகம்மது கோரி நிறுவினார்.
34.
1. இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோருக்கு இக்தாக்களை வழங்கினார்.
2. இக்தா என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலமாகும்.
35.
அ) புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது.
ஆ) கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது.
இ) இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது.
ஈ) இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம்.
36.
அ) புவியின் வெளிப்புற அடுக்கு புவி மேலோடு ஆகும்.
ஆ) புவி மேலோடு கண்டங்களின் மேற்பகுதியை சியால் என்றும் கடல் தரைக்களை சிமா என்றும் அழைக்கின்றோம்.
37.
அ) சோழ அரசின் பொது வருவாய் முக்கியமாக நிலவரி மூலம் பெறப்பட்டது.
ஆ) நிலவரியானது காணிக்கடன் என அழைக்கப்பட்டது.
இ) மகசூலில் மூன்றில் ஒரு பகுதி நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
ஈ) இவற்றில் பெரும்பாலும் தானியமாகவே வசூல் செய்யப்பட்டது.
38.
சந்தனம், கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபர்ணக் கற்கள், மிளகு, நெல், தானியங்கள், உப்பு.
39.
"உமையத்துக்களும்” “அப்பாசித்துகளும்" தொடக்கக்கால கலீஃபாத்துகளாகும்.
40.
மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர். இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.
41.
(i) மார்கோபோலோ
(ii) அல் -வரூனி
(iii) இபன் பதூதா
(iv) நிகோலோ கோண்டி
(v) அப்துல் ரஸாக்
(vi) டோமிங்கோ பயஸ்
42.
மசூதிகள்:
1. குவ்வத் - உல் - இஸ்லாம் மசூதி
2. மோத் - கி - மசூதி
3. ஜமா மசூதி
4. பதேப்பூர் சிக்ரி தர்கா
5. சார்மினார்
கோட்டைகள்:
1. ஆக்ரா கோட்டை
2. சித்தூர் கோட்டை
3. குவாலியர் கோட்டை
4. டெல்லி செங்கோட்டை மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்).
43.
தசுக் என்பது பாரசீகச் சொல் இதன் பொருள் சுயசரிதை எனப்படும்.
44.
1. பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ‘தாமர்லைன்' என்று அழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.
2. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவின் மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
3. இந்தியாவின் வலிமையை சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து 1398 டிசம்பரில் டெல்லியைக் கொள்ளையடித்தனர்.
4. தைமூர் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
5. தைமூர் தங்கம், வெள்ளி நகைகள் என பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி சாமகண்டில் நினைவுச் சின்னங்களை கட்டுவதற்காக தச்சு வேலை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள், போன்ற கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
45.
நிலநடுக்க மையத்திலிருந்து அதிர்வுகள் பல்வேறு திசைகளுக்கு பயணிக்கின்றன. புவி அதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவியை நில அதிர்வு மானி (Seismograph) என குறிப்பிடுகின்றனர்.
46.
அ) புவியின் மையப்பகுதியை புவிக்கருவம் என குறிப்பிடுகின்றனர். இது பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது.
ஆ) வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவத்திற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது.
இ) புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. அவை திரவ நிலையில், இரும்பு குழம்பாலான வெளிப்புற புவிக்கரு 2900 முதல் 5,150 கிலோமீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.
ஈ) திடநிலையில் உள்ள நிக்கல் (Ni) மற்றும் இரும்பால் (Fe) ஆன நைஃப் (Nife) என்ற உட்புற புவிக்கரு 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் ஆழம் வரை பரந்துள்ளது. இதன் அடர்த்தி 13.0 கிராம்/ செ.மீ ஆகும்
47.
உள்ளாட்சி நிர்வாகம்:
1. சோழ ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
2. இக்குழுக்கள் நீர்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மதவிழாக்கள் போன்ற பணிகளை மேற்கொண்டன.
நீர்ப்பாசனம்:
1. சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
2. கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கலை மற்றும் ஒலியம்:
சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் சுட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள் செப்புச்சிலைகள். ஓவியங்கள். படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன.
இலக்கியப்பணி:
உன்னதமான இலக்கியங்களான பெரியபுராணமும், கம்பராமாயணமும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.
குடவோலை முறை:
சோழர்கள் ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சியில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை பின்வருமாறு. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு ஓலைத்துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடவோலை முறை என அழைக்கப்பட்டது.
48.
1. அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
2. வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாக சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
3. 0 முதல் 9 வரைரிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அது வரையிலும் மேலை நாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.
4. ஐரோப்பியர்கள். கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர்.
5. பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
49.
1. முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்க செய்திருந்தார்.
2. இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத் தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
3. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள 'ஜிட்டல்' என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன,
4. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும். வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலாக பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்தது.
50.
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
நீர்: 'V' வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு வரி.
காற்று: காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்.
பனி: பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரெட்டுகள்) 'U' வடிவ பள்ளத்தாக்கு.
கடல் அலை: கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.
51.
கண்டத்தட்டு நகர்வுகள்
1. கற்கோள் உடைப்பால் ஏற்படும் தட்டுகளை கற்கோள தட்டுகள் என்கிறோம்.
2. கற்கோள தட்டுகளின் (கண்டத்தட்டுகள் அல்லது கடற் தட்டுகள்) நகர்வுகளே கண்டத்தட்டு நகர்வுகளாகும்.
3. புவியின் உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பமானது இத்தட்டுகளின் இயக்க சக்தியாக செயல்படுகிறது. இத்தட்டுகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன.
4. சிற்சில பகுதிகளில் தட்டுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகிச் செல்கின்றன. சிற்சில பகுதிகளில் ஒன்று மற்றொன்றின் அருகாமையில் நெருங்கிவரும்போது மோதிக் கொள்கின்றன.
5. ஒரு கடற்தட்டு கண்டத்தட்டின் மீது மோதும் போது கண்டத்தட்டுகளின் விளிம்பு பகுதியில் எரிமலைகளாக உருவெடுக்கின்றது. சமயங்களில் தட்டுகள் ஒன்றின் மீது மற்றொன்று மோதும் போது வளைந்து மடிப்புகளை உருவாக்குகின்றன. இமய மலைச் சிகரங்கள் உருவானது இவ்வகையில்தான்.
6. புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றல் அக உந்து சக்திகள்.
7. புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் புற உந்து சக்திகள் என புவியின் நகர்வுகளை ஆக்க சக்தியின் அடிப்படையில் பிரிக்கலாம்.
52.
முதலாம் ராஜராஜன்
1. சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற அரசர் முதலாம் ராஜராஜன் ஆவார்.
2. இவர் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை வென்றார்.
3. இலங்கை வரை சோழர்களின் ஆட்சியை விரிவடையச் செய்தார்.
4. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தைக் கட்டினார்.
முதலாம் ராஜேந்திரன்
1. முதலாம் ராஜேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு தென்னிந்தியாவில் ஒரு வலுவான சக்தியாக விளங்கியது.
2. இவர் கங்கைப் பகுதியை வென்றார். இதனால் கங்கை கொண்டான் என்ற பட்டம் பெற்றார்.
3. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைக் கட்டினார்.
4. ஸ்ரீ விஜயப் பேரரசைக் கைப்பற்றினார்.
5. இவரது காலத்தில் கடல்கடந்த வணிகம் சிறப்பாக நடைபெற்றது.
53.
1. பாலர்கள் பௌத்த கோயில்களையும், புகழ் பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களையும் ஆதரித்தனர்
2. பாலர்கள் மூலம் பௌத்த சமயம் திபெத்தில் நிறுவப்பட்டது.
3. சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த அரசுகளுடன் பாலர்கள் சுமூகமான உறவு கொண்டிருந்தனர்.
4. தனித்தன்மை வாய்ந்த பாலர்களின் கலை உருவானது.
5. செப்புச் சிலைகளிலும் பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வெளியிடப்பட்டன.
54.
1. மதுரா விஜயம், அமுக்த மால்யதா ஆகியவை சமய சார்பற்ற இலக்கியங்கள் ஆகும். இவை விஜய நகரப் பேரரசைப் பற்றி அறிய உதவுகின்றன.
2. மதுரா விஜயம் கங்காதேவியாலும், அமுக்த மால்யதா என்ற நூல் கிருஷ்ண தேவராயராலும் எழுதப்பட்டன.
3. இராஜபுத்திர அரசர்களைப் பற்றிய பிருத்வி ராஜ ராசோ என்ற நூலை சந்த் பார்தை என்பவர் எழுதினார்.
4. கல்ஹணரின் ராஜதரங்கிணி இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து தெரிவிக்கிறது.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards