7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - தகவல் செயலாக்கம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - வடிவியல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set C

Published on: 27/02/2020
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 7th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions All Chapter 2019-2020 )
7ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மிசிசிபி என்பது ஒரு _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
மலை
நீர்வீழ்ச்சி
ஆறு
கடற்கரை
2.
வட சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _________
கோபி
கலஹாரி
தார்
சஹாரா
3.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு _________
குற்றாலம்
வேம்பநாடு
கார்ரி
மியாமி
4.
பேரென் தீவு கடைசியாக _________ ம் ஆண்டில் எரிமலைக் குழம்பை வெடித்து வெளியேற்றியது.
1997
2007
2017
1987
5.
வெளிப்புற புவிக்கருவில் _________ மிகுதியாக உள்ளது.
சிலிக்கா
மக்னீசியம்
இரும்பு
நிக்கல்
6.
புவியின் கொள்ளளவில் கவசம் _________ கொண்டுள்ளது.
1%
84%
51%
ஒன்றுமில்லை
7.
சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்
ஆலம்ஷா
முகமது ஷா
முபாரக் ஷா
கிசிர்கான்
8.
இபன் பதூதா _________ நாட்டுப் பயணி
சீனா
கிரீஸ்
மொராக்கோ
போர்ச்சுக்கல்
9.
மாம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்
எஜமான்
அடிமை
சக்தி
வெற்றி
10.
மார்க்கோபோலோ _________ லிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
சீனா
வெனிஸ்
கிரீஸ்
போர்ச்சுக்கல்
11.
பாண்டியர் காலத்துக் கடல்சார் வணிகம் பற்றி புகழ்ந்துள்ளவர்
மார்க்கோபோலோ
மெகஸ்தனிஸ்
அல்பரூனி
யுவான் சுவாங்
12.
சோழ மன்னர்கள் மிகுதியாகப் பற்று கொண்டிருந்தது.
புத்த சமயம்
சமணமதம்
சைவ சமயம்
வைஷ்ணவம்
13.
முகமது கோரியின் திறமை வாய்ந்த தளபதி
பால்பன்
இல்டுமிஷ்
நாசிர் உதீன்
குத்புதீன் ஐபக்
14.
பாலர் வம்சத்தினைத் தோற்றுவித்தவர்
தர்ம பாலர்
தேவ பாலர்
கோபாலர்
மகி பாலர்
15.
கூர்ஜரப் பிரதிகாரர் மரபினைத் தோற்றுவித்தவர்
ஹரிச்சந்திரா
வத்சராஜா
நாகபட்டர்
தேவ பாலர்
16.
இந்தியாவில் நிலவிய சதி எனும் பழக்கம் பற்றி கூறியுள்ளவர்
மார்க்கோபோலோ
அல் பரூனி
இபன் பதூதா
நிகோலா கோண்டி
17.
வளைவுகள் மற்றும் குவி மாடங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவர்கள்
சோழர்கள்
முகலாயர்கள்
விஜயநகரப் பேரரசர்கள்
டெல்லி சுல்தான்கள்
18.
உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் தெரிவிப்பவை
நீதி நிர்வாகம்
நிதி நிர்வாகம்
கிராம நிர்வாகம்
இராணுவ நிர்வாகம்
19.
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அமெரிக்கா
இந்தியா
சீனா
பிரேசில்
20.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் _____________ ஆகும்.
உட்பாயத் தேக்கம்
வண்டல் விசிறி
வெள்ளச் சமவெளி
டெல்டா
21.
_______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
ரஸ்ஸியா
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
பால்பன்
22.
_______ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
முகமதுகோரி
ஜலாலுதீன்
குத்புதீன் ஐபக்
இல்துமிஷ்
23.
_________ பகுதி "பசிபிக் நெருப்பு வளையம்" என்று அழைக்கப்படுகிறது.
பசிபிக் வளை யம்
மத் திய அட்லாண்டிக்
மத்திய-கண்டம்
அண்டார்ட்டிக்
24.
நைஃப் (Nife)________ ஆல் உருவாக்கப்பட்டது.
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
சிலிக்கா மற்றும் அலுமினியம்
சிலிக்கா மற்றும் மெக்னீசியம்
இரும்பு மற்றும் மெக்னீசியம்
25.
சோழர்களின் கட்டடக்கலைக்கான எடுத்துக்காட்டை எங்குக் காணலாம்?
கண்ணாயிரம்
உறையூர்
காஞ்சிபுரம்
தஞ்சாவூர்
26.
விஜயாலயன் வழி வந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
வீர ராஜேந்திரன்
ராஜாதிராஜா
அதி ராஜேந்திரன்
இரண்டாம் ராஜாதிராஜா
27.
கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?
சிலை வழிபாட்டை ஒழிப்பது
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.
இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.
28.
கஜினி என்னும் ஒரு சிறிய அரசு எங்கு அமைந்திருந்தது?
மங்கோலியா
துருக்கி
பாரசீகம்
ஆப்கானிஸ்தான்
29.
முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ________________ ஆகும்.
அயினி அக்பரி
தாஜ் - உல் – மா -அசிர்
தசுக்-இ-ஜாஹாங்கீரி
தாரிக் – இ - பெரிஷ்டா
30.
________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.
சோழர்
பாண்டியர்
ராஜபுத்திரர்
விஜயநகர அரசர்கள்
31.
பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை கூறிப்பிடவும்.
32.
அரித்தல் வரையறு
33.
பிரோஷ் ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
34.
கி.பி.(பொ.ஆ)12ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
35.
சியால் என்றால் என்ன ?
36.
புவியின் மேலோட்டின் பெயரை எழுதுக
37.
’சதுர்வேதி மங்கலம்’ என எது அழைக்கப்பட்டது?
38.
கண்டுபிடிக்கவும்:
| பிரம்மதேயம் | |
| தேவதானம் | |
| பள்ளிச்சந்தம் | |
| வேளாண்வகை |
39.
தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக
40.
கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக
41.
இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.
42.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட முக்கிய மசூதிகளையும், கொட்டைகளையும் பட்டியலிடவும்.
43.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் என்ன?
44.
1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
45.
நில நடுக்கம் வரையறு.
46.
மெல்லிய புறத்தோல் (அ) கவசம் என்றால் என்ன?
47.
சோழர்களின் ஆட்சித்திறம் பற்றிய ஐந்து முக்கிய அம்சங்களை விவரித்து எழுதவும்.
48.
சிந்துவை அராபியர் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை? (ஏதேனும் ஐந்தைக் குறிப்பிடவும்).
49.
டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.
50.
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விவரி.
51.
மத்திய தரைக்கடல் - இமயமலை நிலநடுக்கம் பகுதி குறித்து எழுது. மேலும் இப்பகுதியில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்கள் பற்றி கூறுக.
52.
சோழர்கள் காலத்து உள்ளாட்சி நிர்வாகம் பற்றி கூறு.
53.
பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு யாது?
54.
இந்தியாவுக்கு வருகை தந்த அந்நிய நாட்டுப் பயணிகள் பற்றி விரிவாக எழுதவும்.
1.
(c)
ஆறு
2.
(a)
கோபி
3.
(b)
வேம்பநாடு
4.
(c)
2017
5.
(c)
இரும்பு
6.
(b)
84%
7.
(d)
கிசிர்கான்
8.
(c)
மொராக்கோ
9.
(b)
அடிமை
10.
(b)
வெனிஸ்
11.
(a)
மார்க்கோபோலோ
12.
(c)
சைவ சமயம்
13.
(d)
குத்புதீன் ஐபக்
14.
(c)
கோபாலர்
15.
(a)
ஹரிச்சந்திரா
16.
(c)
இபன் பதூதா
17.
(d)
டெல்லி சுல்தான்கள்
18.
(c)
கிராம நிர்வாகம்
19.
(c)
சீனா
20.
(b)
வண்டல் விசிறி
21.
(c)
இல்துமிஷ்
22.
(c)
குத்புதீன் ஐபக்
23.
(a)
பசிபிக் வளை யம்
24.
(a)
நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்
25.
(d)
தஞ்சாவூர்
26.
(c)
அதி ராஜேந்திரன்
27.
(b)
இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.
28.
(d)
ஆப்கானிஸ்தான்
29.
(b)
தாஜ் - உல் – மா -அசிர்
30.
(a)
சோழர்
31.
பனியாறு, அரெட்டுகள், 'U' வடிவ பள்ளதாக்கு.
32.
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.
33.
அ). விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தும் பல நீர்ப்பாசன கால்வாய்களை வெட்டியும் வேளாண்மையை மேம்படுத்தினார்.
ஆ). பிரோஷாபாத், ஜான்பூர், ஹிசார், பிரோஷ்புர் ஆகிய புதிய நகரங்களை அவர் நிர்மாணித்தார்.
இ). ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கான அறக்கட்டளைகளை நிறுவினார். கல்லூரிகள்,மருத்துவமனைகள், மசூதிகள் ஆகியவற்றை கட்டினார்.
ஈ). மனிதாபமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார். இஸ்லாமிய சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார்.
34.
கி.பி (பொ.ஆ) 12 ம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சியை முகம்மது கோரி நிறுவினார்.
35.
அ) புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது.
ஆ) கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது.
இ) இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமினியம் தாதுக்களால் ஆனது.
ஈ) இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம்.
36.
அ) புவியின் வெளிப்புற அடுக்கு புவி மேலோடு ஆகும்.
ஆ) புவி மேலோடு கண்டங்களின் மேற்பகுதியை சியால் என்றும் கடல் தரைக்களை சிமா என்றும் அழைக்கின்றோம்.
37.
அரசர்களும் உள்ளூர் தலைவர்களும் மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம் எனும் பிராமணர் குடியிருப்புகளை நீர்ப்பாசன வசதிகளோடு உருவாக்கினர்.
38.
| பிரம்மதேயம் | பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் |
| தேவதானம் | கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இடம் |
| பள்ளிச்சந்தம் | ஜெயின் நிறுவனங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இடம் |
| வேளாண்வகை | பிராமணர் அல்லாத சொத்துக்கான நிலம் |
39.
"உமையத்துக்களும்” “அப்பாசித்துகளும்" தொடக்கக்கால கலீஃபாத்துகளாகும்.
40.
மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர். இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும்முனைப் போட்டியில் இம்மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.
41.
(i) மார்கோபோலோ
(ii) அல் -வரூனி
(iii) இபன் பதூதா
(iv) நிகோலோ கோண்டி
(v) அப்துல் ரஸாக்
(vi) டோமிங்கோ பயஸ்
42.
மசூதிகள்:
1. குவ்வத் - உல் - இஸ்லாம் மசூதி
2. மோத் - கி - மசூதி
3. ஜமா மசூதி
4. பதேப்பூர் சிக்ரி தர்கா
5. சார்மினார்
கோட்டைகள்:
1. ஆக்ரா கோட்டை
2. சித்தூர் கோட்டை
3. குவாலியர் கோட்டை
4. டெல்லி செங்கோட்டை மேலும் தௌலதாபாத் (ஔரங்காபாத்).
43.
ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பின் பெயர் “தசுக் - இ ஜஹாங்கீர்".
44.
1. பிரோஷ் ஷா துக்ளக் மரணமுற்று பத்தாண்டுகள் கழிந்த நிலையில் ‘தாமர்லைன்' என்று அழைக்கப்பட்ட தைமூர் டெல்லியைத் தாக்கி சூறையாடி மாபெரும் மனிதப் படுகொலையை அரங்கேற்றினார்.
2. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த தைமூர் வட இந்தியாவின் மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
3. இந்தியாவின் வலிமையை சாதகமாக்கிக் கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து 1398 டிசம்பரில் டெல்லியைக் கொள்ளையடித்தனர்.
4. தைமூர் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
5. தைமூர் தங்கம், வெள்ளி நகைகள் என பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி சாமகண்டில் நினைவுச் சின்னங்களை கட்டுவதற்காக தச்சு வேலை செய்வோர், கட்டிடக் கலைஞர்கள், போன்ற கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றார்.
45.
புவியின் மேலோட்டின், ஒரு பகுதியில் ஏற்படும் எதிர்பாராத நகர்வானது. நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும் ஏற்படுத்துவதே நிலநடுக்கம் என்கிறோம்.
46.
அ) புவி மேலோட்டின் கீழ் அடுக்கு கவசம் என அழைக்கப்படுகிறது.
ஆ) கவசமானது கமார் 2900 கி.மீ தடிமனாக காணப்படுகிறது.
இ) கவசத்தை இரண்டாக பிரிக்கலாம்
i) மேல் கவசம்
ii) கீழ்க்கவசம்.
47.
உள்ளாட்சி நிர்வாகம்:
1. சோழ ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
2. இக்குழுக்கள் நீர்பாசனம், சாலைகள், கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மதவிழாக்கள் போன்ற பணிகளை மேற்கொண்டன.
நீர்ப்பாசனம்:
1. சோழர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் வழங்கினர்.
2. கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட பதினாறு மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கலை மற்றும் ஒலியம்:
சோழர்கள் காலத்தில் பிரமாண்டமான கோவில்கள் சுட்டப்பட்டன. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோவில்கள் சோழர்களின் கலைகளான கட்டடங்கள், சிற்பங்கள் செப்புச்சிலைகள். ஓவியங்கள். படிமவியல் ஆகியவற்றின் களஞ்சியமாக உள்ளன.
இலக்கியப்பணி:
உன்னதமான இலக்கியங்களான பெரியபுராணமும், கம்பராமாயணமும் இக்காலப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.
குடவோலை முறை:
சோழர்கள் ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சியில் உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை பின்வருமாறு. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம் ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு ஓலைத்துண்டுகளை எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இந்த தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடவோலை முறை என அழைக்கப்பட்டது.
48.
1. அராபிய அறிஞர்கள் சிந்துவிற்கு வந்து பல இந்திய இலக்கியங்களைக் கற்றனர்.
2. வானியல், தத்துவம், கணிதம், மருத்துவம் தொடர்பாக சமஸ்கிருத மொழியிலிருந்த பல நூல்களை அவர்கள் அராபிய மொழியில் மொழியாக்கம் செய்தனர்.
3. 0 முதல் 9 வரைரிலான எண்களை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர் அது வரையிலும் மேலை நாட்டினர் பூஜ்யத்தின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை.
4. ஐரோப்பியர்கள். கணிதம் தொடர்பான அதிக அறிவை அராபியர் வாயிலாகப் பெற்றனர்.
5. பூஜ்யத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இந்தியாவிலிருந்தே கற்றுக்கொண்டனர்.
49.
1. முகமதுகோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத் தனது பெயரையும் பொறிக்க செய்திருந்தார்.
2. இந்நாணயம், இந்தத் தொடக்ககாலத் துருக்கியப் படையெடுப்பாளர் மதவிசயங்களில் தாராளத் தன்மையுடன் நடந்துகொண்டார் என்பதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளையும் உணர்த்துகிறது.
3. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள 'ஜிட்டல்' என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன,
4. இல்துமிஷ் அறிமுகம் செய்த 'டங்கா' எனப்படும். வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள் போன்றவை நாணயங்கள் பரவலாக பயன்பாட்டில் இருந்ததையும் நாட்டின் பொருளாதார வளம் அல்லது நலிவு ஆகியவற்றைச் சுட்டுவதாகவும் அமைந்தது.
50.
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புக்கள் உருவாகின்றன.
கடல் ஓங்கல்:
கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.
கடற்குகைகள்:
கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படும்.
கடல் வளைவுகள்:
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும்போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை (Sea Arches) தோற்றுவிக்கின்றது.
கடல் தூண்கள்:
கடல் அலைகள் மேற்கூரையை மேலும் அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் (Sea Stacks) எனப்படும்.
கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை (Beach) எனப்படும்.
மணல் திட்டுகள்:
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் (Sand Bars) எனப்படும்.
காயல்கள் (அல்லது) உப்பங்கழிகள்:
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.
51.
மத்திய தரைக்கடல் - இமயமலை நிலநடுக்கம் பகுதி
1. உலகின் 31% நிலநடுக்கங்கள் ஆசியா கண்டத்தில் உள்ள இமயமலைப் பகுதிகளிலும் வடமேற்கு சீனாவிலிருந்து மத்திய தரைக்கடல் பகுதி வரையிலும் ஏற்படுகின்றன.
2. இந்தியாவின் இமயமலைப் பகுதிகள், கங்கை பிரம்மபுத்திரா சமவெளிகள் நிலநடுக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
3. அதிக எண்ணிக்கையிலுள்ள நிலநடுக்கங்கள் இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. மோசமான மற்றும் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டதாக உணரப்பட்டுள்ளது.
அ) உத்திரகாசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1991)
ஆ) சாமோலியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1999)
4. நிலநடுக்கப் பாதிப்புகள் அற்ற பகுதிகளாக சொல்லப்பட்ட தக்காண பீடபூமியிலேயே இரண்டு மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அ) கெய்னாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1967)
ஆ) லாத்தூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் (1993)
52.
1. உள்ளாட்சி நிர்வாகம் ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகள் மூலம் செயல்பட்டது.
2. விவசாயிகளின் குடியிருப்புகள் ஊர்கள் என அழைக்கப்பட்டன.
3. பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் நீதி, நிதி மற்றும் பொது நிர்வாகங்களை மேற்கொண்டனர்.
4. வணிகர்களின் குடியிருப்பை நகரத்தார் நிர்வகித்தனர்.
5. கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்க வேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.
6. ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில் இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள் மூலம் பணிகளை மேற்கொண்டனர்.
53.
1. பாலர்கள் பௌத்த கோயில்களையும், புகழ் பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா பல்கலைக்கழகங்களையும் ஆதரித்தனர்
2. பாலர்கள் மூலம் பௌத்த சமயம் திபெத்தில் நிறுவப்பட்டது.
3. சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த அரசுகளுடன் பாலர்கள் சுமூகமான உறவு கொண்டிருந்தனர்.
4. தனித்தன்மை வாய்ந்த பாலர்களின் கலை உருவானது.
5. செப்புச் சிலைகளிலும் பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் வெளியிடப்பட்டன.
54.
1. மார்க்கோபோலோ என்ற வெனிஸ் நகரப் பயணி பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழகத்திற்கு வந்தார். அவர் காயல் துறைமுகம் பற்றியும் அரேபியாவிலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் கடல் வழியாக குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்.
2. கற்றறிந்த அறிஞரான அல்பரூனி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்திய மக்களைப் பற்றி அறிய முயன்றார். இவர் சமஸ்கிருத மொழியைக் கற்றார். இந்தியத் தத்துவங்களைக் கற்றார். அவர் எழுதிய தாகுயூக் - இ - ஹிந்த் என்ற நூலில் இந்தியாவின் நிலைகளையும், அறிவு முறையினையும், சமூக விதிகளையும் மதத்தையும் குறித்து விவாதித்துள்ளார்.
3. மொராக்கோ நாட்டு அறிஞரான இபன் பதூதாவின் பயணநூல் ரிக்ளா பயணங்கள் என்பதாகும். அவர் இந்தியாவின் சமூக நிலை, சாதி, சதி என்ற உடன் கட்டை ஏறும் பழக்கம் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்திய வணிக நடவடிக்கைகள் பற்றியும் இவரது நூல் தெரிவிக்கிறது.
4. இவர்கள் தவிர நிகோலா கோண்டி, அப்துர் ரஸாக், டோமிங்கோ பயஸ் ஆகிய அந்நியப் பயணிகளும் இந்தியாவுக்கு வந்தனர். இவர்கள் விஜயநகரப் பேரரசின் சிறப்பு பற்றி தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
7th Standard Syllabus & Materials
7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - இயற்கணிதம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW7th Standard
Tamilnadu 7th Standard Maths T2 - அளவைகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards