12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

ANSWER ALL THE QUESTIONS
1.
சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன?
2.
3.
நம்புறுதி என்றால் என்ன?
4.
மாற்று முறை ஆவணம் என்றால் என்ன?
5.
மாற்றுச்சீட்டு வரையறு.
6.
காசோலை என்றால் என்ன?
7.
மேலெழுதுதல் வரையறு.
8.
தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள் இரண்டினை குறிப்பிடுக.
9.
தொழில் முனைவோரின் மேலாண்மை பணிகளை பட்டியலிடுக. (ஏதேனும் 2)
10.
அகத்தொழில் முனைவோர் இலக்கணம் தருக.
11.
வேளாண் தொழில் முனைவோர் என்பவர் யார்?
12.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வினைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
a. இலாப நோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட வினை
b. அரசால் துவங்கப்பட்ட வினை
c. தனியாரும் அரசும் இணைந்து துவங்கும் தொழில் முனைவு
d. குடும்ப வியாபாரமாகத் துவங்கப்பட்ட வினை
13.
டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
14.
நிறுமம் உருவாக்கத்தில் உள்ள நான்கு நிலைகள் யாவை?
15.
பங்கு என்றால் என்ன?
16.
முன்னுரிமைப் பங்குகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.
17.
பணியாளர் நலன் சாதாரணப் பங்குகள் (Sweat) என்றால் என்ன?
18.
ஊக்கப் பங்குகள் என்றால் என்ன?
19.
உரிமைப் பங்குகள் என்றால் என்ன?
20.
பங்குச் சான்றிதழ் என்றால் என்ன?
21.
கடன் பத்திரங்கள் என்றால் என்ன?
22.
இயக்குனர் என்பதை வரையறுக்க.
23.
மேலாண்மை இயக்குநர் என்று யாரை அழைக்கிறோம்?
24.
செயலர் என்பவர் யார்?
25.
”கூட்டம்” என்றால் என்ன ?
26.
தீர்மானம் என்றால் என்ன?
27.
"பகராள்" சிறு குறிப்பு வரைக.
28.
ANSWER ALL THE QUESTIONS
29.
விற்பனை உடன்பாடு என்றால் என்ன?
30.
தற்போதைய / இருக்கின்ற சரக்கு என்றால் என்ன?
31.
மாற்றுச்சீட்டின் சிறப்பு இயல்புகளை கூறுக. (ஏதேனும் 3)
32.
மாற்றுச் சீட்டு மற்றும் கடனுறுதிச்சீட்டினை வேறுபடுத்துக.
33.
இரண்டு வகை கீறல்களின் வரைபடத்தை வரைக.
34.
தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்தி காட்டுக. (ஏதேனும் 3)
35.
தொழில் முனைவோர் மற்றும் அகத்தொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.
36.
அரசியல் சூழல் என்றால் என்ன?
37.
ஸ்டார்ட்டப் இந்தியா என்றால் என்ன?
38.
பங்குகளை வட்டத்தில் வெளியிடுவது என்றால் என்ன? அப்படி வெளியிட நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் யாவை?
39.
பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாக கூறுக. (ஏதேனும் 3)
40.
எப்பொழுது மாற்று இயக்குநர்களை நியமிக்கலாம்?
41.
முதல் இயக்குனர் என்றால் என்ன?
42.
எப்பொழுது இயக்குனர் தனது அலுவலகத்திலிருந்து நீக்கப்படுகிறார்.
43.
சிறப்பு தீர்மானம் என்றால் என்ன?
44.
சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன?
45.
ANSWER ALL THE QUESTIONS
46.
விற்பனை மற்றும் விற்பனை உடன்பாடு இடையேயுள்ள வேறுபாடுகளை தருக.
47.
சரக்கு விற்பனைச் சட்டத்தில் சரக்கினை வகைப்படுத்திக் காட்டுக.
48.
நிபந்தனை மற்றும் நம்புறுதிகளை வேறுபடுத்துக.
49.
காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
50.
காசோலையின் இயல்புகள் கூறி விளக்குக. (ஏதேனும் 5)
51.
பல்வேறு மேலெழுத்திடும் முறையின் பிரிவுகளை விவரிக்க.
52.
தொழில் முனைவோரின் சிறப்பு இயல்புகள் யாவை? (ஏதேனும் 5)
53.
மகளிர் தொழில் முனைவோர் சந்திக்கும் பிரச்சனைகளை விவரி. (ஏதேனும் 5)
54.
ஊரக மற்றும் நகர்ப்புற தொழில்முனைவோரை வேறுபடுத்திக் காட்டுக.
55.
பங்குகளுக்கும், கடனீட்டுப் பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)
56.
கடன் பத்திரங்களின் வகைகள் யாவை? (ஏதேனும் 5)
57.
பங்குச் சான்றிதழ்களுக்கும் பங்கு உரிமை ஆணைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
58.
இயக்குனரின் தகுதிகள் பற்றி கூறுக.
59.
இயக்குனர்களின் தகுதியின்மைகளை பட்டியலிடு.
60.
ஒரு நிறுமத்தின் இயக்குனரை அவரது அலுவலகத்தில் இருந்து எவ்வாறு நீக்கலாம் என்பது பற்றி விளக்குக.
61.
இயக்குனரின் அதிகாரங்களை கூறுக.
62.
இயக்குனர்களின் குற்றவியல் சார்ந்த பொறுப்புகளைப் பற்றி எழுதுக.
63.
நிறுமச் செயலரின் பணிகளை விளக்கு?
64.
பலவகையான நிறும கூட்டங்களை விளக்குக.
65.
தீர்மானத்தின் வகைகளை விளக்கி தேவைப்படும் செயல்பாடுகளை தருக.
ANSWER ALL THE QUESTIONS
1.
சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்பது எந்த ஒப்பந்தத்தின் வாயிலாகப் பொருளை விற்பவர் வாங்குநருக்கு விலை என்ற மறுபயன் பெற்றுக் கொண்டு பொருளின் மீதான உரிமையை மாற்றித் தருகிறாரோ அதுவே சரக்கு விற்பனை ஒப்பந்தமாகும்.
2.
3.
1. ஒப்பந்தத்தில் ஒரு பொருளுக்கு துணையாக உள்ள கூற்று நம்புறுதி எனப்படும்.
2. நம்புறுதிகளை மீறுதல் நட்ட ஈடு தருவதற்கு வழிகோலும்.
4.
மாற்றுமுறை ஆவணம் என்பது ஒரு குறிப்பிட்ட நபருக்கு குறிப்பிட்ட தொகையை உரிமை வழங்குவதும் மற்றும் மேலெழுதுதல் அல்லது கையில் கொடுப்பது மூலம் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு அதன் உரிமையை மாற்ற ஏதுவான ஆவணம் ஆகும்.
5.
ஆவணத்தை கொணர்பவருக்கோ அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவருக்கோ அல்லது அவரது ஆணைக்கோ, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு, குறிப்பிட்ட ஒருவரை ஆணையிடும் விடுப்பவரால் கையொப்பம் இடப்பட்ட எழுத்தாலான நிபந்தனையற்ற ஆணை ஆவணமே மாற்றுச்சீட்டு - மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 பிரிவு (5).
6.
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881ன் பிரிவு 6ன்படி வெளிப்படையாக கேட்டாலன்றி வேறு எப்போதும் பணம் தரக்கூடாது என வாடிக்கையாளரால் வங்கியின் மீது எழுதப்படும் மாற்றுச் சீட்டே காசோலை எனப்படும்.
7.
"மாற்றுமுறை ஆவணத்தை எழுதியவர் அல்லது வைத்திருப்பவர் ஆவண மாற்று செய்ய வேண்டி, எழுதியவர் என்ற நிலையில் அதன் முன்புறமோ அல்லது பின்புறமோ அத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தாளிலோ கையொப்பம் இடுதலை மேலெழுதுதல் எனப்படும்."
- மாற்று முறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு (5)
8.
(i) தொழில் துணிகர உணர்வு : தொழில் முனைபவர் தாம் மேற்கொண்ட தொழிலில் ஏற்படும் இடர்களை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.
(ii) தன்னம்பிக்கை : தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு அழகு ஏற்படுத்துகிறது. எதிர்மறை உணர்வுகளான அசௌகரியங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் தொல்லைகள் தொழில் முனைபவரது மன உறுதியை குலைக்கக்கூடாது.
9.
1. திட்டம் தீட்டல்
2. அமைப்புப்பணி
3. கட்டளையிடல்
4. கட்டுப்பாடு காத்தல்
5. ஒருங்கிணைப்பு
10.
(i) ஒரு தொழில் முனைவோர் ஆரம்பித்த பணியில் பணிபுரிபவர்.
(ii) இவர் தனக்கு வழங்கப்பட்ட பணியில், நிறுவனத்தில் கிடைக்கக்கூடிய வளங்களைக் கொண்டு, தனது ஆற்றலை பயன்படுத்தி புதிய எண்ணங்களை புகுத்துபவர்.
11.
(i) வேளாண் தொழில் முனைவோர் வேளாண் பொருட்களை விளைவித்து சந்தையிடும் தொழிலை முனைகின்றனர்.
(ii) இவர்கள் பல்வேறு இயற்கை சார்ந்த உள்ளீட்டு பொருட்களான உரம், விதை, தண்ணீர், பூச்சிக்கொல்லி மருந்துகள், உழைப்பு போன்ற இடுபொருட்களை கொண்டு உணவு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்.
12.
a. இலாப நோக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட வினை - தனி உரிமை தொழில் முனைவு
b. அரசால் துவங்கப்பட்ட வினை - அரசு தொழில் முனைவு
c. தனியாரும் அரசும் இணைந்து துவங்கும் தொழில் முனைவு - இணை தொழில் முனைவு
d. குடும்ப வியாபாரமாகத் துவங்கப்பட்ட வினை - தனி உரிமை தொழில் முனைவு
13.
இத்திட்டத்தின் மூலம் அனைத்து அரசின் சேவைகளும் பயனாளிகளுக்கு மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் மின்னணு பொருளாதாரமாக மாறி வருகிறது. உலகெங்கும் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை மக்கள் மின்னணு முறையில் பெற வகை செய்திடும் அறிவு பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் மாறி வருகிறது என்றால் மிகையாகாது.
14.
நிறுமத்தை உருவாக்குதல் என்பது நான்கு நிலைகளை கொண்டது.
i) நிர்வாகம் (Promotion)
ii) பதிவு செய்தல்
iii) முதல் போடுதல்
iv) வியாபாரத்தை தொடங்குதல்
15.
நிறுமத்தின் பங்கு முதலின் சிறு (பகுதி) பங்கு எனப்படும்.
எ.கா : நிறுமத்தின் பங்கு முதல் = Rs.10,000
பங்கு முதலை திரட்ட பங்குகளை பிரிக்க வேண்டும்.
Rs.10 க்கு வெளியிட்டால் 1,0000 பங்குகள் எனவும்
Rs 100க்கு வெளியிட்டால் 100 பங்குகள் எனவும் வெளியிடலாம்.
16.
ஒரு நிறுமம் பங்காதாயம் வழங்கும் பொழுது அதை வாங்க முன்னுரிமை பெற்ற பங்குகள் முன்னுரிமை பங்குகள் எனப்படும்.
17.
பணியாளர்கள் அல்லது இயக்குநர்களுக்காக, ஒரு தள்ளுபடியில் அல்லது ரொக்கமற்ற மறுபயனுக்கு அவர்கள் அளித்த அறிவிப்பிற்கு அல்லது அறிவாற்றல் சார்ந்த சொத்துரிமைக்கு அல்லது அவர்கள் கூட்டிய மதிப்பிற்கு அளிக்கப்படுவது பணியாளர் நலன் சாதாரண பங்குகள் எனப்படும்.
18.
செயல்முறை விதிகளின்படி ஒரு நிறுமமானது தனது முதலில் ஏற்பட்ட இலாபத்தை பெருக்கும் நோக்கில் முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை ஊக்கப்பங்காக வெளியிடுகிறது. இது நிறுமத்தின் பொதுவான இயல்புகளுக்காக வெளியிடப்படுகிறது. குறிப்பாக சொன்னால் நிறுமத்தின் உபரிகளையும் மற்றும் காப்புகளையும் முறையாக பயன்படுத்துதல் ஆகும்.
19.
(i) நிறுமத்தின் பங்களிப்பு மற்றும் பங்கு முதலை உயர்த்தும் நோக்கில் வெளியிடப்படும் பங்குகள் உரிமைப் பங்குகள் எனப்படும்.
(ii) இந்த உரிமைப் பங்குகளின் வெளியீடு செயல்முறை விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்.
20.
(i) நிறுமத்தின் குறிப்பிட்ட பங்குகளுக்கு சொந்தக்காரர் என்று வழங்கப்படும் சான்றிதழ் பங்குச் சான்றிதழ் எனப்படும்.
(ii) இதில் நிறுமம் பொது இலட்சினை, இயக்குனர் மற்றும் செயலரின் கையொப்பம் இருக்கும்.
(iii) பங்கு சான்றிதழ் என்பது உரிமைக்கு சாட்சியமே தவிர உரிமை இல்லை.
21.
நிறுமச்சட்டம் 2013, பிரிவு 2(30) ன்படி "கடன் பத்திரம்" என்பது நிறுமத்தின் சொத்துக்களின் மீது பற்றுப் பொறுப்பு ஏற்படுத்தியோ (அ) ஏற்படுத்தாமலோ நிறுமம் வெளியிடும் பிணையமாகும். கடன் பத்திரத் தொகுதி, பாண்டு முதலான பிணையங்களும் கடன் பத்திரம் என்பதில் அடங்கும்.
22.
" ஒரு நிறுமத்தை நிர்வகிக்கும் குழுவிற்காக நியமிக்கப்பட்டவர் இயக்குனர் ஆவார்".
23.
இயக்குனராக நிறுமத்தில் பணி புரியும் ஒருவர் அதிகபட்சமான அதிகாரங்களை கொண்டவருமாக, கம்பெனியின் நிர்வாகத்தில் அதிக ஆர்வம் அதிகபட்சமான சுதந்திரமும் உடையவர் கம்பெனியை வழிநடத்துவதற்கும் இயக்குநர்களை கட்டுப்படுத்தும் உரிமையும் இவருக்கு உண்டு.
24.
நிறுமக் கொள்கைகள் குறித்த ரகசியங்களை காத்தல், நிதிச் சார்ந்த முடிவுகள் எடுத்தல் மற்றும் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற முக்கிய பொறுப்புகள் நிறும செயலருக்கு உண்டு. நிறுமத்தின் ஒட்டுமொத்த நிறுமச் செயல்பாடுகளை இயக்கும் நபரே, நிறுமச் செயலர் என அழைக்கப்படுகிறார்.
25.
ஒரு நிறுமத்தின் கூட்டம் என்பது பல வகையான சட்டவிதி கூறுகளுக்கு உட்பட்டு முறையான வகையில் ஒருங்கிணைக்கப்படும் நபர்களின் குழுவை கூட்டம் எனலாம். ஒரு நிறுமம் தனது செயல்பாடுகள் குறித்து பல முடிவுகளை எடுக்க, பல வகையான கூட்டங்களை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை கூட்ட வேண்டியது அவசியமாகிறது.
26.
இயக்குநரவையால் எடுக்கப்பட்ட ஒரு முடிவை நடைமுறைப்படுத்த, சட்டப்படி குறைந்தளவு எண்ணிக்கை கொண்ட பங்குனர்களின் கூட்டத்தில், ஓட்டுப்பதிவு நடத்தியோ அல்லது வேறு முறையின் மூலமாக பங்குனர்களால் அளிக்கப்படும் ஒப்புதல் தீர்மானம் எனப்படும்.
27.
கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க முடியாத உறுப்பினர்கள் அவர்களுக்கு பதிலாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகராள்களை நியமிக்கலாம். பகராள் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பகராள் கூட்டம் தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் நிறும பதிவு அலுவலகத்தில் தெரிவித்து பதியப்பட வேண்டும்.
28.
ANSWER ALL THE QUESTIONS
29.
விற்பனை ஒப்பந்தம் என்ற சொல்லில் விற்பனையும் மற்றும் விற்பனை உடன்பாடும் உள்ளடக்கியது.
1. விற்பனை -பொருளின் உரிமையை உடனே மாற்றிவிடக்கூடிய நடவடிக்கைகள்.
2. விற்பனை உடன்பாடு - பொருளின் உரிமையை எதிர்காலத்தில் மாற்றும் நடவடிக்கைகள்.
30.
ஒப்பந்தம் செய்யும் போது விற்பனையாளரின் கைவசம் உள்ள சரக்கு இருக்கின்ற சரக்கு. விற்பனை செய்ய முகவரின் வசம் ஒப்படைக்கப்பட்ட சரக்கும் அல்லது அடமானம் பெற்றவர் விற்கும் அடமான சொத்தும் இருக்கின்ற சரக்கு என்ற பொருளில் உள்ளடக்கம் பெறும்.
இருக்கின்ற சரக்கு: ஒப்பிய சரக்கு, உறுதி செய்யப்பட்ட சரக்கு, உறுதியிடா சரக்கு.
1. ஒப்பிய சரக்கு - விற்பனை ஒப்பந்தம் செய்யும் போது இனம் கண்டு ஒப்புக் கொள்ளப்பட்ட சரக்கு ஒப்பிய சரக்கு.
2. உறுதி செய்யப்பட்ட சரக்கு - ஒப்பிய சரக்கைப் போன்ற பொருள் உடையது தான் உறுதி செய்யப்பட்ட சரக்கு. அதாவது விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பு இன்னதுதான் என்று உணரப்பட்ட சரக்கு உறுதி செய்யப்பட்ட சரக்கு.
3. உறுதியிடா சரக்கு - ஒப்பந்தம் செய்யும் முன்பாக இவைதான் என இனம் காணப்படாத சரக்கு.
31.
மாற்றுச்சீட்டின் சிறப்பியல்புகள் :
(i) மாற்றுச்சீட்டு எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.
(ii) மாற்றுச்சீட்டில் “கொடுக்க” என்ற கட்டளை இருக்க வேண்டும்.
(iii) கட்டளை நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்.
(iv) மாற்றுச்சீட்டை விடுநர் அல்லது எழுதுபவர் கையொப்பம் இடவேண்டும்.
(v) காலச்சீட்டாயின் (time bill) அதனை விடப் பெறுபவர் ஏற்பு செய்ய வேண்டும்.
32.
| வ. எ | வேறுபாடுகளின் இயல்புகள் | மாற்றுச்சீட்டு | கடனுறுதி சீட்டு |
| 1 | உறுதிமொழி தன்மை | நிபந்தனையற்ற முறையாவணம் | நிபந்தனையற்ற பணம் தருவதற்கான கடன் உறுதிமொழி பத்திரம் |
| 2 | தரப்பினர் | மூன்று நபர்கள் இருப்பார்கள் 1. வரைபவர் 2. வரையப் பெற்றவர் 3. பணம் பெறுபவர் |
இரண்டு தரப்பினர் மட்டுமே இருப்பர் 1. வரைபவர் 2. பணம் பெறுபவர். |
| 3 | வரைபவர் | கடனாளர் | கடனாளி |
| 4 | தரப்பினர் அடையாளம் | எழுதுபவரும் பணம் பெறுபவரும் ஒரே நபராக இருக்கலாம். | இதனை எழுதுபவரே பணம் பெறுபவராக இருக்க முடியாது. |
| 5 | பொறுப்பாக்கப்படும் வரிசை | மாற்றுச்சீட்டை எழுதியவரின் பொறுப்பு இரண்டாம் பட்சமானது மாற்றுச் சீட்டை ஏற்றவர் பணம் தராமல் மறுக்கும் போது மட்டுமே வரைபவரின் பொறுப்பு எழும். | கடனுறுதி சீட்டை எழுதியவரின் பொறுப்பு முதன்மையானது. |
| 6 | கொணர்பவர் பத்திரம் | இதை கொணர்பவருக்கு கொடுக்கும்படி வரையலாம். | இதை கொணர்பவருக்கு தருவதாக வரைய சட்டம் தடை செய்கிறது. |
| 7 | ஏற்பு | இதனை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும் | இதை கடனாளியே எழுதுவதால் ஏற்க அவசியமில்லை |
| 8 | படிகள் (வடிவம்) | அயல்நாட்டு மாற்றுச் சீட்டு மூன்று படிகளில் தயாரிக்கப்படுகிறது | கடனுறுதி சீட்டு ஒரு படியில் மட்டுமே எழுதப்படுகிறது |
| 9 | நிபந்தனைக்கு உட்படுதல் | மாற்றுச் சீட்டினை நிபந்தனைக்கு உட்படுத்தலாம் | இதனை நிபந்தனைக்கு உட்படுத்த இயலாது |
| 10 | அவமதிப்பு அறிவிப்பு | மேலெழுதியவருக்கு (அ) வரைந்தவருக்கு மாற்றுச் சீட்டு அவமதிக்கப்பட்ட செய்தியை அறிவிக்க வேண்டும். | அவமதிப்பு அறிவிப்பு தேவையில்லை |
33.

34.
| வ.எண் | அடிப்படை | தொழில் முனைபவர் | மேலாளர் |
| (i) | நோக்கு | ஒரு அமைப்பினை தேர்ந்தெடுத்து தன்னுடைய வினையை துவக்குவது. | துவக்கிய வினையில் செவ்வனே பணியாற்றுவது இவரின் நோக்கு. |
| (ii) | தகுநிலை | தொழில் முனைபவர் தான் துவங்கிய அமைப்பின் உரிமையாளர். | மேலாளர் ஊதியம் பெறும் உழைப்பாளி. |
| (iii) | இடர் ஏற்றல் | தொழில் முனைபவர் தான் துவங்கிய வினையினால் ஏற்படும் இடர்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மையை தாங்குபவர். |
மேலாளர்கள் வினையின் இடரில் பங்கு பெறுவது இல்லை. மாறாக இடர் ஏற்படும்போது வேறு நிறுமத்திற்கு தாவி விடும் பருவகால நண்பர்கள். |
| (iv) | வெகுமதி | தொழில் முனைபவர் தன்னுடைய இடர் ஏற்பிற்கு வெகுமதியாக இலாபத்தை பெறுகின்றனர். | மேலாளர்கள் இலாபத்தில் பங்கு பெறுவது இல்லை. ஊதியம் மேல் ஊதியம், படிகள், ஊக்க ஊதியம் பெறுபவர்கள். |
| (v) | ஆற்றல் | தொழில் முனைபவர்கள் படைப்பாற்றல். உள்ளுணர்வு மற்றும் எதையாவது புதியதாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் பெற்றவர்கள். | மேலாளர்கள் நல்ல கோட்பாட்டு அறிவும், மனித உறவு திறனும் பெற்றவர்களாக இருக்கவேண்டும். |
35.
| அடிப்படை | தொழில் முனைபவர் | அகத்தொழில் முனைவோர் |
| சிந்தனை | தடையற்ற சிந்தனையாளர் | தன்னிசையான சிந்தனையாளர் ஆனால் தொழில் நிறுமத்தின் உள் செயல்படுபவர் |
| சார்பு நிலை | தன்னிசையான நபர் | தொழில் முனைவோரை சார்ந்து இருப்பவர் |
| நிதி தோற்றத்தால் | தன் சொந்த முயற்சியில் தொழிலுக்கான நிதியை திரட்ட வேண்டும் | நிதி திரட்டும் பொறுப்பில்லை. ஆனால் நிதியை கையாளும் பொறுப்பு உள்ளது. |
| வெகுமதி | இலாபம் என்ற வெகுமதியைப் பெறுகிறார் | இலாபத்தில் பங்கில்லை, ஊதியம், ஊக்க ஊதியம் மற்றும் மேம்படிகள் பெற வாய்ப்புண்டு |
| இடர் ஏற்றல் | கட்டாயம் இடர் ஏற்க வேண்டும் | இடர்பாட்டில் பங்கு பெறுவதில்லை. செயல்திட்டம் தோல்விக்கு பொறுப்பேற்பதில்லை |
| தகுநிலை / தரநிலை | உரிமையாளர் | ஊழியர் |
| செயல்பாடு | தொழிலுக்குப் புறத்தே நின்று பெரும்பாலும் செயல்படுபவர் | முழு நிறுமத்திற்கு உட்பட்டு இயங்கும் நபர் |
36.
1. எந்த ஒரு அரசியல் காரணங்கள் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தவும், பாதிக்கவும் செய்கிறதோ அதுவே அரசியல் சூழல் எனப்படும்.
2. அந்த ஊக்கம் அல்லது பாதிப்பு ஊரக, தேசிய அளவில் கூட இருக்கலாம்.
3. தொழில் முனைவோர் அந்த அரசியல் காரணிகளை நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
37.
(i) தொடக்க நிலையில் உள்ள தொழில்கட்கு ஆலோசனை வழங்குவது, வளர்ப்பது ஆதரவு அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவற்றை வளர்க்கும் திட்டத்தினை 2016ம் ஆண்டு ஜனவரியில் துவங்கியது.
(ii) துவக்கக் காலம் முதலே பல தொழில் முனைவோர்கள் பலதரப்பட்ட தொழில் வினைகளை துவக்கி வெற்றி கண்டனர். நிதிகளின் நிதி (Fund of Fund) என்ற நிதியின் மூலம் தொடக்க நிலை தொழில் வினைகளுக்கு நிதி வசதி செய்து தரப்பட்டு வருகிறது.
38.
1. பங்குகளின் வெளியீட்டு விலை முகமதிப்பை விட குறைவாக இருந்தால் அது வட்டத்தில் (தள்ளுபடியில் வெளியிடுதல் என அழைக்கப்படுகிறது.
(எ.கா) Rs.10 முகமதிப்புடைய பங்குகளை Rs.8க்கு வெளியிட்டால் தள்ளுபடி Rs.2.
2. நிறுமச் சட்டம் 2013 பிரிவு (53)ன் படி தள்ளுபடி பங்குகளை வெளியிடுதல்.
39.
(i) குவிவு முன்னுரிமைப் பங்குகள்: அனைத்து பங்காதாய நடவடிக்கைகள் ஒரு சிறப்பான முறையில் செலுத்தி இறுதி வரையிலும் குறிப்பிட்ட காலம் முடியும் வரை பயன்படுத்தப்படும்.
(ii) குவியா முன்னுரிமைப் பங்குகள்: ஒருங்கிணைக்கப்பட்ட முன்னுரிமைப் பங்குகளுக்கு எதிராக இருப்பது ஒருங்கிணைக்கப்படாத முன்னுரிமைப் பங்குகள் ஆகும்.
(iii) மீள்தகு முன்னுரிமைப் பங்குகள் : ஒரு நிலையான காலம் (அ) தவணை நாள் முடிந்து பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(iv) மீள்தகா முன்னுரிமைப் பங்குகள்: நிறுமத்தை கலைக்கும் போது (அ) சொத்துக்களை விற்று நீர்மைத் தன்மை ஆக்கும் போது பெறக் கூடிய பங்குகள் ஆகும்.
(v) மாற்றக் கூடிய முன்னுரிமைப் பங்குகள்: ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சாதாரண பங்குகளை மாற்றக் கூடிய தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
(vi) மாற்ற முடியாத முன்னுரிமைப் பங்குகள்: எந்த சூழ்நிலையிலும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலாத தன்மை கொண்ட பங்குகள் ஆகும்.
40.
(i) ஒரு இயக்குநர் இந்தியாவில் குறைந்தது மூன்று மாதத்திற்கு மேல் இல்லையென்றால் அவருக்கு பதிலாக கூடுதல் இயக்குநர்களை இயக்குநர் குழு நியமிக்கலாம். இவ்வாறு நியமிப்பதற்கு கம்பெனியின் செயல்முறை ஏட்டில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது பொதுக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் இயற்றி அதன் வாயிலாக நியமிக்கலாம்.
(ii) இந்த மாற்று இயக்குநர் உண்மையான இயக்குநருக்கு முகவராக அல்லது பதிலாக கருதப்படமாட்டார்.
41.
(i) நிறுவனம் கூட்டுருவாக்கம் செய்யப்பட்ட தேதி முதல் அலுவலகத்தை இயக்குபவர் முதல் இயக்குனர் ஆவார்.
(ii) முதல் இயக்குனரின் பெயர் வழக்கமாக நிறுமச் செயல்முறை ஏட்டில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.
(iii) பிரிவு 152 ன் படி இயக்குனர்கள் புதிதாக நியமிக்கப்படும் வரை இவர் முதல் இயக்குனராக கருதப்படுவோர்.
42.
(i) பங்குதாரர்களால் நீக்கம் - பிரிவு(169)
1. இயக்குனர்கள் பின்பற்றிய கொள்கைகள் பொருத்தமானதல்ல என பங்குதாரர்கள் கருதினால்,
2. சிறப்பு அறிவிப்பை வழங்குவதன் மூலமும், சாதாரண தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமும் இயக்குனரின் பதவிக்காலம் முடியும் முன் இயக்குனரை பதவியிலிருந்து நீக்கலாம்.
(ii) மத்திய அரசால் நீக்கப்படுதல் :
1. பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோசடி.
2. விவேகமான வர்த்தக நடைமுறையின்மை.
3. கடுமையான வியாபார பாதிப்பு.
4. பொது நலனுக்கு சேதமளிக்கும் வகையில் நிர்வாகம் நடத்தப்படுவது.
போன்ற காரணங்களால் மத்திய அரசு இயக்குனரை நீக்கலாம்.
(iii) நிறும /கம்பெனி சட்ட வாரியத்தால் நீக்கப்படுதல் :
ஒரு இயக்குனர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று கம்பெனி சட்டவாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்தால் இயக்குனர் நீக்கப்படலாம்.
43.
ஒரு முடிவை நிறைவேற்ற கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள பங்குனர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதம் நபர்கள் முடிவிற்கு சாதகமாக வாக்களித்தால் அது சிறப்பு தீர்மானம் ஆகும். அதாவது முடிவிற்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை போல மூன்று மடங்கு அதிகமான எண்ணிக்கையில் முடிவு சாதகமாக வாக்களித்து முடிவை நிறைவேற்றினால் அது சிறப்பு தீர்மானம் ஆகும்.
(i) சிறப்பு தீர்மானம் தேவைப்படும் நடவடிக்கைகள்
(ii) நிறுமத்தின் பதிவு அலுவலகத்தை ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு மாற்றம் செய்ய.
(iii) நிறுமத்தின் நோக்கத்தை மாற்ற
(iv) நிறுமத்தின் பெயரை மாற்ற
(v) சட்ட நடைமுறை விதிகளை திருத்தம் செய்ய
(vi) நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி நிறும பங்கு முதல் தொகையை குறைக்க.
(vii) புதிய தொழிலைத் தொடங்க
(viii) தணிக்கையாளரை பணியமர்த்த.
(ix) மொத்த விற்பனை முகவர்களை பணியமர்த்த
(x) இயக்குநர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்களின் ஊதியத்தை தீர்மானிக்க.
44.
சட்டமுறை கூட்டம் (Statutory Meeting)
நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது. ஒரு பொது நிறுமத்தின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கூட்டப்படும் கூட்டம் சட்டமுறை கூட்டம் ஆகும். பங்கு முதல் இல்லாத பொது மற்றும் தனி நிறுமங்கள் இத்தகைய கூட்டத்தை கூட்ட தேவையில்லை.
45.
ANSWER ALL THE QUESTIONS
46.
| வேறுபாட்டு அடிப்படை | விற்பனை | விற்பனை ஒப்பந்தம் | |
| 1 | உரிமை மாற்றம் | பொருளின் உரிமை உடனடியாக மாறிவிடுகிறது. | பொருளின் உரிமை எதிர்காலத்தில் மாறும் தன்மை உடையது. |
| 2 | நட்ட இடர்பாடு | விற்கப்பட்ட பொருள் சேதமுற்றால் அதனால் ஏற்பட்ட நட்டம் வாங்குபவரை சாரும். | விற்கப்பட்ட சரக்கு வாங்குபவர் கைவசம் இருந்தால் கூட பொருள் சேதமுற்றால் அல்லது அழிவுற்றால் நட்டத்தை விற்பனையாளர்தான் ஏற்க வேண்டும். |
| 3 | ஒப்பந்த மீறுகையின் விளைவுகள் | விலையை செலுத்த வாங்குநர் மறுத்தால் சரக்கு விற்குனரிடமே இருந்தாலும் கூட வாங்குபவர் மீது விலைதரக் கோரி வழக்கு தொடர முடியும். | வாங்குனர் ஒப்பந்தத்தை மீறி செயல்படும் பொழுது விற்பவர் பொருளை வாங்குனரிடமிருந்து கைப்பற்றிக்கொள்ள முடியும். மேலும் வாங்குனர் மீது வழக்கு தொடர முடியும். |
| 4 | ஒப்பந்தத்தின் தன்மை | இது நிறைவேறிய ஒப்பந்தம் ஆகும். எனவே சரக்குரிமை உடனடியாக மாற்றப்படுகிறது. | இது நிறைவேற வேண்டிய ஒப்பந்தம் ஆகும். உரிமை மாற்றம் எதிர்காலத்தில் நிகழ உள்ளது. |
| 5 | வாங்குநரின் நொடிப்பு | வாங்குனர் விலையை செலுத்தும் முன்னரே நொடிப்பு நிலையை அடைந்துவிடின் விற்பனை செய்த சரக்கு விற்றவரின் கைவசம் இருந்தாலும், இருப்பவர் அச்சரக்கினை கலைப்பு அதிகாரி வசம் கொடுத்து அந்த விலைக்கான விகிதப்படி தொகையை மட்டுமே பெற உரிமை உண்டு. | விற்பனை உடன்பாட்டில் விற்குநர் வாங்குனர் கைவசம் உள்ள சொத்தை கலைப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க தேவையில்லை. காரணம் உரிமை இன்னமும் வாங்குனர்க்கு மாற்றப்படவில்லை. |
| 6 | விற்பனையாளரின் நொடிப்பு | விற்றசரக்கை வாங்குபவரிடம் ஒப்படைக்கும் முன் விற்குநர் நொடிப்பு நிலை அடைந்துவிட்டால் வாங்குனர் கலைப்பு அதிகாரியிடம் அச்சொத்தை பெற்றுக் கொள்ளலாம். | விற்பனை உடன்பாட்டில் அவ்வாறு செய்ய இயலாது. வாங்கியவர் பணம் செலுத்தியிருந்தால் கூட விகிதப்படி தொகையை பெறும் உரிமை மட்டுமே உண்டு. |
47.
1. இருக்கின்ற சரக்கு:
1. ஒப்பந்தம் செய்யும்போது விற்பனையாளரின் கைவசம் உள்ள சரக்கு.
2. விற்பனை செய்ய முகவரின் வசம் ஒப்படைக்கப்பட்ட சரக்கு.
3. அடமானம் பெற்றவர் விற்கும் அடமானம் பெற்றவர் விற்கும் அடமான சொத்து.
அ) ஒப்பிய சரக்கு:
பல சரக்குகளில் இந்த சரக்குதான் வாங்க தேர்வு செய்கிறேன் என அடையாளம் காட்டப்பட்ட சரக்கு.
(எ.கா) பல சேலைகளை பார்த்து பச்சை வண்ணமுள்ள இந்த சேலைதான் வேண்டும் என அடையாளம் காட்டுவது.
ஆ) உறுதி செய்யப்பட்ட சரக்கு:
விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பு இன்னதுதான் என்று உணரப்பட்ட சரக்கு.
(எ.கா) திரு. மதன் என்பவர் ராஜ் என்பவரிடம் பைக் வாங்க செல்கிறார். அங்கு Show room இல் பைக் காண்பிக்கப்படுகிறது. என்ன பைக் வாங்க வேண்டும் என முடிவெடுக்காத நிலையில் அங்கு காட்டப்பட்ட அனைத்து பைக்குகளும் உறுதியிடா சரக்கு.
2. எதிர்கால சரக்கு:
ஒப்பந்தம் செய்யும் போது தன் கைவசம் இல்லாத ஆனால் எதிர்காலத்தில் உற்பத்தி செய்வதோ அல்லது பிறரிடமிருந்து வாங்கியோ தரப்படும் சரக்கு.
(எ.கா) 1. இராஜன் என்பவர் கோபால் என்பவரிடம் 100 மூட்டை அரிசி அடுத்தமாதம் நடைபெறும் திருமண விழாவிற்கு தருவதாக உடன்படுகிறார்.
2. இந்நிலையில் அரிசி என்ற பொருள் எதிர்கால சரக்கைக் குறிக்கும்.
3. வருநிகழ்வு சார் சரக்கு:
1. இது ஒரு வகை எதிர்கால சரக்கு ஆகும்.
2. இந்த சரக்கு விற்பவர் கைவசம் வந்து சேர்வது எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சியை பொறுத்தது.
எ.கா. 1. A என்பவர் B என்பவரோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறார். கோதுமை C என்பவரிடமிருந்து கிடைத்தால் விற்கிறேன் என்பதாகும்.
2. கோதுமை என்பது கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம்.
48.
| வ.எண் | வேறுபடுத்தும் கூறுகள் | நிபந்தனைகள் | நம்புறுதிகள் |
| 1. | பொருள் | ஒப்பந்தத்தின் கருப் பொருளாகத் திகழ்வது. | நம்புறுதி ஒப்பந்தத்திற்குத் துணையாக இருக்கிறது. |
| 2. | முக்கியத்துவம் | ஒப்பந்தத்தில் நிபந்தனையை மீறுவது ஒப்பந்தத்தை மீறுவதாகக் கொள்ளப்படுகிறது. | நம்புறுதியை மீறுவது ஒப்பந்தத்தினை மீறுவதற்கு ஒப்பாகாது. |
| 3. | உரிமை மாற்றம் | நிபந்தனை நிறைவேற்றாமல் உரிமை மாற்றம் நிகழ முடியாது. | நம்புறுதியை நிறைவேற்றாமல் உரிமை மாற்றம் நிகழ முடியும். |
| 4. | பரிகாரம் / தீர்வு | நிபந்தனை மீறுவதனால் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒப்பந்தத்தை நீக்கிக் கொள்வதுடன் நட்ட ஈடு கோரும் உரிமையைப் பெறுகிறார். | நம்புறுதியை மீறுவதனால் ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்டவர் நட்ட ஈடு கேட்கும் உரிமையை மட்டுமே பெற்றுள்ளார். |
49.
| வ.எண் | வேறுபாடு | மாற்றுச்சீட்டு | காசோலை |
| 1 | வரையப்படுவது | மாற்றுச் சீட்டு வங்கி உட்பட ஒரு குறிப்பிட்ட நபர் மீது வரையப்படுவது. | ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுவது. |
| 2 | செலுத்தப்படுவது | கேட்டவுடனோ அல்லது குறிப்பிட்ட காலமுதிர்வின் போதோ தருமாறு எழுதப்படுவது. | எப்போதும் கேட்டவுடனே பணம் கொடுக்குமாறு எழுதப்படுவது. |
| 3 | ஏற்பு | கால மாற்றுச்சீட்டைப் பொறுத்தவரையில் அதை எழுதப் பெற்றவர் ஏற்க வேண்டும். | காசோலையை ஏற்பு செய்திட தேவையில்லை. |
| 4 | சலுகை நாள் | மாற்றுச்சீட்டின் முதிர்வு காலம் முடிந்த நாளிற்கு பின் பணம் தர மூன்று சலுகை நாட்கள் வழங்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் தர வங்கிக்கு சலுகை நாட்கள் தரப்படுவதில்லை. |
| 5 | படிகள் | அந்நிய மாற்றுச்சீட்டு மூன்று படிகள் தயாரிக்கப்படுகிறது. | காசோலைக்கு பணம் பெற படிகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை |
| 6 | வருவாய்த்தலை | மாற்றுச்சீட்டில் வருவாய்த்தலை அதன் மதிப்பிற்கு ஏற்ப ஒட்ட வேண்டும். | காசோலையில் வருவாய்த்தலை ஒட்ட வேண்டியதில்லை. |
50.
காசோலையின் இயல்புகள்:
1. காசோலை எழுத்து வடிவில் இருக்க வேண்டும்: காசோலை எழுத்து வடிவில் வரையப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் சட்டமோ அது பென்சிலால் கூட எழுத தடை விதிக்கவில்லை என்றாலும் மோசடி செய்யும் வாய்ப்பைக் கருதி வங்கியாளர்கள் தாங்களே காசோலையை அச்சிட்டு தருகிறார்கள்.
2. நிபந்தனையற்ற ஆணை: காசோலையில் வாடிக்கையாளர் பணம் கொடுக்க என கட்டளை பிறப்பிக்க வேண்டும். தயவு செய்து என்ற வார்த்தை இருந்தாலும் காசோலை செல்லும். ஆனால் கட்டளை நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும்.
3. குறிப்பிட்ட வங்கியர் மீது வரையப்படுதல்: காசோலையை ஒரு குறிப்பிட்ட வங்கியர் மீது மட்டுமே எழுத முடியும். அதுவும் ஒரு வங்கியின் எந்தக் கிளையில் வாடிக்கையாளர் பணம் வைத்துள்ளாரோ சம்பந்தப்பட்ட கிளையில் பணம் கொடுக்குமாறு எழுதவேண்டும். மின்னணு மற்றும் ஒருங்கிணைந்த வங்கி முறை நடைமுறையில் இருக்கும் இந்நாளிலும் எந்த கிளையில் வேண்டுமென்றாலும் பணம் பெறமுடியும்.
4. நிச்சயமான ஒரு தொகை: வங்கியரை ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கும் படி ஆணை இடவேண்டும். குறிப்பிட்ட அளவு பிணையம் வெளியிட ஆணை பிறப்பிக்க முடியாது.
5. பணம் பெறுபவரைத் திட்டவட்டமாக குறிப்பிட வேண்டும்: காசோலையை ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது அவரது ஆணைபெற்றவருக்கு தரும்படி எழுத வேண்டும் அல்லது கொணர்பவர் காசோலை எனின் கொணர்பவருக்கு பணம் தருமாறு ஆணையிடலாம்.
6. கேட்டவுடன் தருமாறு எழுதப்படுவது: காசோலையை கேட்டவுடன் தருமாறு எழுதப்பட வேண்டும். எப்போது தர வேண்டும் என்ற நாள் குறிப்பிடப்பட்டிருப்பின் கேட்டவுடன் கொடுக்க என்ற கட்டளை தேவையற்றது.
51.
1. வெற்று மேலெழுதுதல்:
யாருக்காக மேலெழுப்பப்படுகிறதோ அவர் பெயரை குறிப்பிடாமல் தமது கையொப்பத்தை மட்டும் இட்டு மற்றவரிடம் தந்து விடுதல்.
எ.கா: பல்லவன் என்பவருக்கு ஒரு காசோலை வரையப்படுகிறது அவர் அதை பாண்டியன் என்பவருக்கு மாற்றித்தர நினைக்கிறார். அப்போது பாண்டியன் பெயரை குறிப்பிடாமல் பல்லவன் என தனது கையொப்பத்தை இட்டால் போதுமானது.
2. சிறப்பு மேலெழுதல்:
மேலெழுதுபவர் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது அவரது ஆணை பெற்றவருக்கோ செலுத்தும்படி கட்டளை எழுதி தமது கையொப்பத்தை இடுதல்.
எ.கா: தனக்கு அல்லது பாண்டியனுக்கு செலுத்துக என காசோலையில் பல்லவன் கையொப்பமிட்டு மேலெழுதுவது.
3. நிபந்தனைக்குட்பட்ட மேலெழுதுதல்:
(i) காசோலை என்பது ஒரு நிபந்தனையற்ற ஆவணம்.
(ii) எனினும், மேலெழுதுபவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்தால் தான் மேலெழுதப் பெறுநர் பணம் பெற முடியும் என்ற நிபந்தனை விதித்து மேலெழுதுவது நிபந்தனைக்குட்பட்ட மேலெழுதல் எனப்படும்.
எ.கா: பாண்டியன் டெல்லியிலிருந்து 3 மாத காலத்திற்குள் திரும்பிவிட்டால் பணம் செலுத்துக என பல்லவன் கையொப்பமிட்டு மேலெழுதுவது.
4. வரையறுத்த மேலெழுதுதல்:
மேலெழுதப்பட்ட ஆவணத்தை வேறு யாருக்கும் மாற்ற முடியாதவாறு செய்யப்படும் மேலெழுதுதல்
எ.கா: பாண்டியனுக்கு மட்டும் கொடு என மேலெழுதுவது பல்லவன் கையொப்பமிடுவது.
5. பொறுப்பு தவிர் மேலெழுதுதல்:
மேலெழுதுபவர் ஆவணத்தின் மீது எழுதப்படும் வெளிப்படையான வார்த்தைகளால் தனது பொறுப்பினை தவிர்த்து விடுதல்.
எ.கா: பாண்டியன் அல்லது அவரது ஆணை பெற்றவருக்கு என் பொறுப்பு இல்லாமல் கொடுக்கவும் என பல்லவன் மேலெழுதுவது.
6. கடமை தவிர் (அ) உரிமைதவிர் மேலெழுதுதல்:
மேலெழுதப்பட்ட ஆவணம் மறுக்கப்படும் பொழுது, மறுக்கப்பட்ட விவரத்தை தன்னிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என தனது உரிமையை விட்டுக் கொடுப்பது.
எ.கா: பாண்டியனுக்கு அல்லது அவரது ஆணை பெற்றவருக்கு கொடுக்கவும் அவமதிப்பு அறிவிப்பு தேவையில்லை என பல்லவன் மேலெழுதுவது.
பகுதி மேலெழுதுதல்:
மாற்றுமுறை ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகையில் ஒரு பகுதியை மட்டும் மாற்றுமுறை மேலெழுதப்படுவது.
எ.கா: மாற்றுச் சீட்டின் தொகை ரூ.1000 த்தில் பாண்டியனுக்கு செலுத்த வேண்டியது ரூ.300 மீதமுள்ள ரூ.700 ஐ மேலெழுதி வேறு யாருக்கும் மாற்றுவது.
52.
தொழில் முனைபவரின் சிறப்பியல்புகள்:
(i) தொழில் துணிகர உணர்வு : தொழில் முனைபவர் தான் மேற்கொண்ட தொழிலில் ஏற்படும் இடர்களை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். வினையை நடத்தி வரும்போது ஏற்படும் இயற்கையான ஏமாற்றங்கள் அல்லது தோல்விகள் அவரின் ஆர்வத்தை சிதைக்கா வண்ணம் துணிவுடன் செயல்படுவோர் ஆவார்.
(ii) தன்னம்பிக்கை : தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு அழகு ஏற்படுத்துகிறது. எதிர்மறை உணர்வுகளான அசௌகரியங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் தொல்லைகள் தொழில் முனைபவரது மன உறுதியை குலைக்கக் கூடாது.
(iii) நெகிழ்வு தன்மை : மாறும் சூழ்நிலைகட்கு ஏற்ப தொழில் முனைபவன் தன் முடிவை அல்லது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். நெகிழ்வுத் தன்மையற்றவர்கள் தொழில் முனைவில் வெற்றி காண்பது இயலாத ஒன்றாகும்.
(iv) புதுமை புகுத்தல் : தொழில் முனைபவர் புதுமை படைப்பாளராக இருந்திட வேண்டும். ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்தி சந்தையில் நிரந்தரமான இடத்தை பிடிக்க வேண்டும். புதுமை என்பது புத்தம் புதிய பொருளாகவோ, புதுமைப் பண்புகளை பொருளில் நுழைப்பதோ, புதிய சந்தையை உருவாக்குவதோ, புதிய கச்சாப் பொருளைக் கொண்டு பொருளை உற்பத்தி செய்வதோ, புதிய உற்பத்தி முறையை கையாள்வதோ மற்றும் புதிய நுட்பத்தை மேற்கொள்வது.
(v) வளத்தை திரட்டுபவர் :
1. தான் மேற்கொண்ட செயலை செயலாக்கிட தொழில் முனைபவர் புலனாகக்கூடிய மற்றும் புலனாகாத உட்பொருட்களையும் ஒன்றிணைப்பவர் ஆவார்.
2. தொழிலை துவக்கிட இடு பொருளை வாங்குதல், மனித வளத்தை திரட்டுதல், நிதியை புரட்டுதல், போன்ற நடவடிக்கைகளை நாட்டின் மூலை முடுக்குகளுக்கு சென்று சேரும் வகையில் பொருளை உற்பத்தி சந்தையிடுகைக்கு கொண்டு சேர்க்கும் செயலை செய்பவர் ஆவார்.
(vi) கடின உழைப்பு: தொழில் முனைபவர் தான் மேற்கொண்ட செயலின் நோக்கத்தை அடைய அரும்பாடு படவேண்டும். தொல்லைகள், இடர்கள், அசௌகரியங்கள், இன்னல்கள் மற்றும் ஏமாற்றங்கள் என அவ்வப்போது ஏற்படும் இடர்களை தளராமல் மேற்கொள்ளுதல். தலைவிதியின் மீது பழிபோடுவதோ அல்லது பிறவற்றின் மீது பழி சுமத்தி சுகம் காண்பவராகவோ இருக்கக் கூடாது.
53.
மகளிர் தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் : மகளிர் தொழில் முனைவோர்கட்கு மேற்குறிப்பிட்டவாறு ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் என பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அவைகளில் சிலவற்றை கீழே விவாதிப்போம்.
(i) நிதிப்பிரச்சினை: மகளிர் தொழில் முனைவோர்களுக்கு தங்களின் தொழில் வினையில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. தங்களின் பெயரில் சொத்துக்கள் இல்லாத மகளிர் உரிமையாளர்கள் பிணைக்கடன் பெறுவதில் பெரும் இன்னல்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
(ii) இயக்கத்தடை : மகளிர் தொழில் முனைவோர்கள்
நமது நாட்டு கலாச்சாரப்படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய சூழலில் வீட்டுப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டியுள்ளது. என்னதான் தொழில் உரிமையாளராக மகளிர் உயர்ந்தாலும் தாயாக, மனைவியாக, மகளாக, மருமகளாக, மாமியாராக, பாட்டியாக தன்னுடைய கடமைகளை தட்டிக்கழிக்க முடிவதில்லை. தொழிலை துவங்கிய பின் பல்வேறு காரணங்களுக்காக மகளிர் வெளியில் செல்ல முடிவதில்லை.
(iii) கல்வியறிவு இன்மை : ஏட்டறிவு இல்லா அல்லது குறைவாக படித்துள்ள மகளிர் தொழில் முனைவோர்கள் வியாபாரம் அல்லது தொழில் தொடர்பான கருத்துக்களை முழுவதாக புரிந்து கொள்ள முடியாதவராக உள்ளனர். உதாரணமாக கணக்கை பராமரித்தல், பணம் கொடுக்கல் வாங்கலை கணக்கு வைத்துக் கொள்ளுதல், பொருளை சந்தையிடத் தொழில்நுட்ப கருத்துக்களை உள்வாங்குதல் போன்ற பல தரப்பட்ட செய்திகளை தெளிவாக விளங்கிக் கொள்ள குறைவான படிப்பு அல்லது படிப்பறிவு இன்மை மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது.
(iv) ஆதரவு இன்மை : மகளிர் தொழில் முனைவோர் செம்மையாக தன் வினையை செயல்படுத்த பலதரப்பட்ட மக்களின் கனிவு, பரிவு மற்றும் ஆதரவு இவைகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக கணவன், பிள்ளைகள், பெற்றோர்கள், வாழ்க்கைப்பட்ட இடம், நண்பர்கள், அயல் அண்டையில் வசிப்பவர்கள் என பலரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
v) கடும்போட்டி : தாராளமயமான போட்டி உலகில் மகளிர் தொழில் முனைவோர்கள் பெரிய நடுத்தர தொழில்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றனர். போட்டியை வலுவாக எதிர்கொள்ள விளம்பரம் மற்றும் விற்பனைப் பெருக்க யுக்திகளை கையாள வேண்டியுள்ள சூழ்நிலையில் மகளிர் தொழில் முனைவோர்கள் ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
54.
| வ.எண் | வேறுபாடு | நகர்புற தொழில் முனைவோர் | ஊரக தொழில் முனைவோர் |
|---|---|---|---|
| 1. | அமைவிடம் | மாநில தலைநகரம், மாவட்ட தலைநகரம் பேரூராட்சிகளில் தொழிலை துவங்குவார். | கிராமப்புறங்களில் தனது தொழிலை துவங்குபவர். |
| 2. | அரசின் சலுகைகள் | ஊரக தொழில் முனைவோரை காட்டிலும் குறைவான அரசு சலுகைகளை பெறுகிறார். | கிராமப்புற வளர்ச்சிக்காக அரசு அதிகமான சலுகைகளை இவருக்கு வழங்குகிறது. |
| 3. | அமைப்பு | உற்பத்தி, சில்லறை அல்லது கூட்டு பங்கு நிறும தொழில் முனைவோராக இருக்கலாம். | உற்பத்தி மற்றும் சில்லறை தொழில் முனைவோராக இருக்கலாம். |
| 4. | உற்பத்தி செலவு | நகர்ப்புறங்களில் செயல்படுவதால் அதிகமான உற்பத்தி செலவு ஏற்படுகிறது. | கிராமப்புறங்களில் செயல்படுவதால் குறைவான உற்பத்தி செலவு ஏற்படுகிறது. |
| 5. | விலை | உற்பத்தி செலவு அதிகமாதலால் பொருளுக்கான விலையை அதிகரித்து விற்பனை செய்கிறார். | உற்பத்தி செலவு குறைவாக உள்ளதால் நுகர்வோருக்கு குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்கிறார். |
55.
| வ.எண் | பங்குகள் | கடன் பத்திரம் |
| 1. | இது நிறுமத்தின் முதலில் ஒரு பங்கு ஆகும். | இது சட்டப்படி ஒரு கடன் ஆகும். |
| 2. | பங்குதாரர்கள் நிறுமத்தின் உறுப்பினர்கள்/ உரிமையாளர்கள் ஆவர். | கடன் பத்திரதாரர்கள் நிறுமத்தின் கடனீந்தோர்கள் ஆவர். |
| 3. | பங்குதாரர்கள் மாறுபடும் விலையில் பங்காதாயம் பெறுவர். | கடன் பத்திரதாரர்கள் நிலையான விதத்தில் வட்டி செலுத்தி அதற்கான பங்காதாயம் பெறுவர். |
| 4. | பங்குகளில் எந்தவிதமான விதிப்பும் கிடையாது. | நிறுமத்தின் சொத்துக்களின் மீது கடன் பத்திரங்கள் விதிக்கப்படும். |
| 5. | பங்குகள் தள்ளுபடியில் ஒரு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே வெளியிட முடியும். | சாதாரண பத்திரங்களை தள்ளுபடியில் வெளியிட எந்த நெறிமுறைகளும், தடைகளும் இல்லை. |
| 6. | இயக்குநர் அவையின் முடிவின் அடிப்படையிலும், இலாபத்தின் அடிப்படையிலும் பங்காதாய வீதம் மாறும். | கடன் பத்திரங்களின் வட்டி வீதம் நிலையானது |
56.
கடன் பத்திரங்கள் வெளியிடும் முறை மற்றும் நிபந்தனைகள் அடிப்படையில் பல விதங்களாக பிரிக்கலாம். அவை,
1. மாற்று அடிப்படை:
அ) மாற்ற இயலா கடன் பத்திரங்கள் :
இதை கடனீட்டு பத்திரமாக மட்டுமே வைத்திருக்க முடியும், சாதாரண பங்குகளாக மாற்ற இயலாது.
ஆ) பகுதி மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்:
கடனீட்டு பத்திரத்தை வெளியிடுபவர் அறிவிக்கும் சமயம், கடனீட்டு பத்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் சாதாரண பங்குகளாக மாற்ற இயலும்.
இ) முற்றிலும் மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் :
கடனீட்டு பத்திரத்தை வெளியிடுபவர் அறிவிக்கும் சமயம், கடனீட்டு பத்திரம் முழுமையாக சாதாரண பங்குகளாக மாற்ற இயலும்.
ஈ) தேர்வின்படி மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் :
வெளியீட்டாளர் முடிவு செய்யும் விலையிலோ / சமயத்திலோ கடனீட்டு பத்திரம் பங்குகளாக மாற்ற முடியும்.
2. பிணையங்கள் (அ) ஈட்டின் அடிப்படை:
அ) பிணையம் தரப்பட்ட கடன் பத்திரம்:
நிறுமத்தின் சொத்துக்கள் மீது பற்றுப் பொறுப்பு ஏற்படுத்தி வெளியிடப்படுவது.
இந்திய நிறுமச்சட்டம் 2013 பிரிவு 71 (3)ன்படி மத்திய அரசு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
ஆ) பிணையம் தரப்படாத கடன் பத்திரம்:
நிறுமத்தின் சொத்துக்கள் மீது எவ்வித பற்றுப் பொறுப்பும் ஏற்படுத்தப்படாமல் வெளியிடப்படுவது.
3. மீட்பு அடிப்படை :
அ) மீட்கக்கூடிய கடன் பத்திரம் :
குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு இவ்வகை கடன் பத்திரங்களை திரும்ப மீட்டுக் கொள்ளலாம்.
ஆ) மீட்க இயலா கடன் பத்திரம் :
நிறும வாழ்நாளில் இவ்வகையான கடனீட்டு பத்திரங்களை மீட்க இயலாது.
4. பதிவு செய்தல் அடிப்படை :
அ) பதிவு செய்யப்பட்ட கடனீட்டு பத்திரங்கள் :
குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை நிறும ஏட்டில் பதிவு செய்து நிறுமம் கடனீட்டு பத்திரங்களை வெளியிடுவது.
ஆ) கொணர்பவர் / பதிவு செய்யப்படாத பத்திரங்கள் :
கடனீட்டு பத்திரங்களை வைத்திருப்பவருக்கு அதன் மீதான உரிமை உண்டு.
57.
| கடன் பத்திரங்கள் | பங்கு சான்றிதழ் | பங்குரிமை ஆணை |
|---|---|---|
| பொருள் | எத்தனை பங்குகளை பங்குதாரர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும் சட்ட நடவடிக்கை | குறிப்பிட்டுள்ள பங்குகள் மீது இதனை வைத்திருப்பவருக்கு உரிமை உண்டு என கூறும் ஆவணம் |
| கட்டாயம் | நிறுமத்திற்கு கட்டாயமானது | நிறுமத்திற்கு கட்டாயமில்லை |
| மாற்று முறை ஆவணம் | இது மாற்று முறை ஆவணமில்லை | இது மாற்று முறை ஆவணம் |
| மாற்றம் | பங்கு மாற்ற பத்திரம் எழுதியே பிறருக்கு மாற்றி தர இயலும் | பங்குரிமை ஆணையை வாங்குபவரிடம் கொடுப்பதன் மூலம் மட்டுமே பங்குகளை மாற்றி தர முடியும். |
| வெளியீடு | இது உண்மையான வெளியீடு | இது போலியான வெளியீடு |
| தொகை செலுத்துதல் | முழுவதும் (அ) பாதி அளவு செலுத்தப்பட்ட பங்குகள் என அனைத்திற்கும் பங்கு சான்றிதழ் உண்டு. | முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளுக்கு பதிலாக வழங்குவது. |
| மத்திய அரசின் அனுமதி | இதை வெளியிட மத்திய அரசு முன் அனுமதி தேவையில்லை | இதை வெளியிட மத்திய அரசின் முன் அனுமதி கட்டாயம் தேவை. |
58.
இயக்குநர் தகுதிகள் : நிறுமம் கம்பெனி செயல்முறை விதிகளுக்கு வெளிகளில் கூடிய உள்ளவாறு தேவையான தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
பொதுவாக ஒரு இயக்குநர், நிதி, சட்டம், மேலாண்மை, விற்பனை, சந்தைப்படுத்தல், நிர்வாகம், ஆராய்ச்சி, பெருநிறும ஆளுமை, தொழில்நுட்ப செயல்பாடுகள் அல்லது நிறுமத்தின் வணிக தொடர்பான பிற துறைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் பொருத்தமான திறன்கள், அனுபவம் மற்றும் அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.
(i) ஒரு இயக்குநர் சரியான மனநிலை உடைய நபராக இருக்க வேண்டும்.
(ii) ஒரு இயக்குநர் கம்பெனி செயல் முறை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தகுதி பங்குகள் வைத்திருக்க வேண்டும்.
(iii) ஒரு இயக்குநர் தனிநபராக இருத்தல் வேண்டும்.
(iv) நல்ல நிதிநிலை உடையவராக இருத்தல் வேண்டும்.
(v) நீதிமன்றத்தால் எந்தவிதமான குற்றத்திற்காகவும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாமல்/ தண்டிக்கப்படாமல் இருத்தல் வேண்டும்.
59.
நிறுமச் சட்டம் 164 ஆம் பிரிவின்படி இயக்குனராக தகுதியற்றவர்கள் :
(i) நீதிமன்றத்தால் பித்த மனநிலை பிடித்தவர் என அறிவித்த நபர்.
(ii) நீதிமன்றத்தால் திவாலானவர் என அறிவித்த நபர்.
(iii) திவாலானவர் என அறிவிக்கக் கோரி விண்ணப்பம் செய்துள்ள நபர்.
(iv) குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குக் குறையாமல் சிறை தண்டனை பெற்றவர்.
(v) அழைப்பு பணம் செலுத்தாத நபர்.
(vi) நீதிமன்றத்தால் தகுதியற்றவர் என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டவர்.
(vii) பிரிவு 188 ன் கீழ் குற்றம் புரிந்தவர்களுடன் நடவடிக்கையில் ஈடுபடும் போது.
(viii) இயக்குனர் அடையாள எண்ணைப் பெறாதவர்.
60.
(i) பங்குதாரர்களால் நீக்கம் -பிரிவு (169)
1. இயக்குனர்கள் பின்பற்றிய கொள்கைகள் பொருத்தமானதல்ல என பங்குதாரர்கள் கருதினால்.
2. சிறப்பு அறிவிப்பை வழங்குவதன் மூலமும், சாதாரண தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமும் இயக்குனரின் பதவிக்காலம் முடியும் முன் இயக்குனரை பதவியிலிருந்தும் நீக்கலாம்.
(ii) மத்திய அரசால் நீக்கப்படுதல் :
1. பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோசடி
2. விவேகமான வர்த்தக நடைமுறையின்மை
3. கடுமையான வியாபார பாதிப்பு
4. பொது நலனுக்கு சேதமளிக்கும் வகையில் நிர்வாகம் நடத்தப்படுவது.
போன்ற காரணங்களால் மத்திய அரசு இயக்குனரை நீக்கலாம்.
(iii) நிறும/கம்பெனி சட்ட வாரியத்தால் நீக்கப்படுதல்:
ஒரு இயக்குனர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று கம்பெனி சட்ட வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் கம்பெனி சட்ட வாரியத்தால் இயக்குனர் நீக்கப்படலாம்.
61.
I. சட்டப்பூர்வமான அதிகாரங்கள் :
(i) பங்குதாரர்களிடமிருந்து வர வேண்டிய பங்குகள் மீதான செலுத்தப்படாத அழைப்புகளை பெறுவதற்கான அதிகாரம்.
(ii) கடனீட்டுப் பத்திரங்கள் வெளியிடுவதற்கான அதிகாரம்.
(iii) கடனீட்டுப் பத்திரம் தவிர இதர வழிகளில் கடன் வாங்குவதற்கான அதிகாரம்.
(iv) நிறுமத்தின் நிதியை முதலீடு செய்யும் அதிகாரம்.
(v) புதிய கடன்களை உருவாக்கும் அதிகாரம்.
(vi) நிறுமத்தின் வியாபாரத்தை பல்வகைப்படுத்தும் அதிகாரம்.
(vii) ஒருங்கிணைத்தல், ஒன்று சேர்த்தல் மற்றும் மறு சீரமைப்பு செய்தல் போன்றவற்றை அங்கீகரிப்பதற்கான அதிகாரம்.
(viii) நிதிநிலை அறிக்கை மற்றும் இயக்குனர் குழுவின் அறிக்கைகளை அங்கீகரிப்பதற்கான அதிகாரம்.
II . மேலாண்மை அல்லது நிர்வாக ரீதியான அதிகாரங்கள்:
i) மூன்றாம் நபருடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் அதிகாரம்.
ii) பங்குகளை ஒதுக்கீடு செய்தல், திரும்பப் பெறுதல் மற்றும் பங்குகளை மாற்றுவதற்கான அதிகாரம்.
iii) கடன் பத்திரங்களை வெளியிட வேண்டிய விதிமுறை களையும் நிபந்தனைகளையும் முடிவு செய்யும் அதிகாரம்.
iv) புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும்,வணிகத்தை செயல்படுத்துவதற்கும் வழிமுறைகளை உருவாக்க அதிகாரம்.
v) நிர்வாக இயக்குனர், மேலாளர் மற்றும் கம்பெனி செயலரை நியமனம் செய்யும் அதிகாரம்.
vi) தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை மேற்பார்வை செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
III. தீர்மானத்தின் மீது இயக்குனர் அதிகாரங்கள் :
i) நிறுமனத்தின் சொத்தை விற்க அல்லது குத்தகைக்கு விடும் உரிமை
ii) கடனை திரும்ப செலுத்த இயக்குனருக்கு தேவையான காலத்தை அனுமதிப்பது.
iii) செலுத்தப்பட்ட மூலதனம் மற்றும் காப்புகள் ஆகியவற்றின் கூட்டு தொகைக்கு மேல் கடன் வாங்கும் அதிகாரம்,
iv) ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நபரை முகவராக நியமனம் செய்தல்.
v) மிகை ஊதிய பங்குகளை வெளியிடுதல் மற்றும் மறுசீரமைப்பு செய்தல்.
vi) மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தில் 5% அல்லது ரூ.50,000 இதில் எது அதிகமோ அத்தொகையை தொண்டு நோக்கங்களுக்காக பங்களிப்பு செய்வதற்கான அதிகாரம்.
IV. இதர அதிகாரங்கள் :
i) சாதாரண காலிப் பணியிடங்களை நிரப்பும் அதிகாரம்.
ii) நிறும முதல் தணிக்கையாளரை நியமிக்கும் அதிகாரம்.
iii) மாற்று இயக்குனர், கூடுதல் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர்களை நியமிக்கும் அதிகாரம்.
iv) முக்கிய நிர்வாக அல்லது மேலாண்மை அதிகாரிகளை நீக்கும் அதிகாரம்.
v) பங்குகளுக்கான இடைக்கால மற்றும் இறுதி பங்காதாயத்தை பரிந்துரை செய்யும் அதிகாரம்.
vi) நிறும கடன் தீர்க்கும் நிலைமையை அறிவிக்கும் அதிகாரம்.
vii) அரசியல் அமைப்பிற்கு பங்களிப்பு செய்யும் அதிகாரம்.
62.
சட்டப்படி செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாத போதும் கீழ்க்காணும் மோசடிக்கு உடந்தையாக இருந்திருந்தால் இயக்குனர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
i) தகவலறிக்கையில் தவறான தகவல்களை அளித்தல்.
ii) பங்கு ஒதுக்கீட்டிற்கான தகவல்களை உரிய படிவத்தில் கம்பெனி பதிவாளருக்கு சமர்ப்பிக்க தவறுதல்.
iii) பங்குகளை ஒருங்கிணைந்த பங்குகளாக மாற்றியதற்கான அறிவிப்பை சமர்ப்பிக்க தவறுதல்.
iv) பங்கு சான்றிதழ் மற்றும் கடன் பத்திர சான்றிதழ் வழங்க தவறுதல்.
v) உறுப்பினர்களுக்கான பதிவேடு மற்றும் கடன் பத்திரதாரர்களுக்கான பதிவேடுகளை பராமரிக்க தவறுதல்.
vi ) ஆண்டு நிறும பொதுக் கூட்டத்தை கூட்ட தவறுதல்.
vii) நிதிநிலை அறிக்கை வெளியிட அல்லது வழங்கிட தவறுதல்.
viii) 15க்கும் மேற்பட்ட கம்பெனிகளில் இயக்குனராக பணியாற்றியவர்களை வைத்திருத்தல்.
63.
I. சட்டப்பூர்வமான பணிகள் :
நிறுமச்சட்டம் 2013ன் படி கீழ்க்கண்டவை நிறுமச் செயலரின் சட்டப்பூர்வமான பணிகள் ஆகும். அவை
(i) நிறுமத்தின் அங்கீகாரம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் நிறுமத்தின் சார்பாக கையொப்பம் இடுவது.
(ii) பங்குகள், இயக்குநர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை பராமரித்தல்.
(iii) பங்கு முதல் தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை நிறும பதிவாளரிடம் கொடுத்தல்.
(iv) பங்கு ஒதுக்கீடு செய்த இரண்டு மாதத்திற்குள் பங்கு ஒதுக்கீடு சான்றிதழை அளித்தல்.
(v) ஆண்டு அறிக்கையில் கையொப்பமிடுதல்.
(vi) தொழில் தொடங்க சான்றிதழை பெற தேவையான உறுதிமொழிகளை அளித்தல்.
(vii) ஒவ்வொரு பங்குனர்களுக்கும் ஆண்டு பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பை அனுப்புதல்.
(viii) சட்டமுறை ஏடுகளை தயாரித்தல்.
(ix) ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் இயக்குநரவை கூட்டங்களுக்கான கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பை 30 நாட்களுக்குள் தயாரித்தல்.
(x) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோப்பிலிட்டு நிறும பதிவாளருக்கு அனுப்புதல்.
(xi) நிறும கலைப்பின் போது நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவி செய்தல்.
II. சட்டப்பூர்வமற்ற பிற பணிகள் :
(i) இயக்குநருக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறுமத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து, பல முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களையும் அறிவுரைகளையும் வழங்குதல்.
b) இயக்குநர்களின் வருகை பதிவேட்டை பராமரிப்பது, கூட்டங்கள் கூட்டுவது.
c ) கூட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்ட குறிப்பு தயாரிப்பது தொடர்பாக கூட்டத் தலைவருடன் கலந்தாலோசித்து பல தீர்மானங்களை தயாரித்தல்.
d ) இயக்குநரவை அலுவலர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி ஆவணங்களை கோப்பிடல் மற்றும் பதிவேடுகளை தயாரித்து அளிப்பது.
ii) பங்குனர்களுக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறும பங்குனர்களின் உரிமை மீறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது.
b) பங்கு ஒதுக்கீட்டு கடிதம், கூட்ட அழைப்பு கடிதம், வருத்த கடிதம், பங்கு சான்றிதழ் பங்கானைகளை அனுப்புவது மற்றும் கடனீட்டுப்பத்திரத்தை அளிப்பது.
c )பங்குனர்களின் கூட்ட நாள், இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்கள் தாங்கிய அறிக்கையை பங்குனர்களுக்கு அனுப்புதல்.
d) இயக்குநர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு இயக்குநரவை சார்பாக கலந்தோசித்து விசாரித்து உரிய பதிலை அளிப்பது.
(iii) அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாட்களுக்கு ஆற்றும் சேவைகள் :
a) நிறும அலுவலக ஊழியர்களில் தலை சிறந்த மூத்த ஊழியர் செயலர்.
b) அலுவலக செயல்பாடுகளை இயல்பாக செயல்பட செய்வது.
c) அலுவலக செயல்பாடு சார்ந்த அனைத்தையும் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டியது.செயலரின் கடமை.
64.
பங்குநர்கள் கூட்டங்கள்: நிறும பங்குநர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் பங்குனர்கள் கூட்டம் என அழைக்கப்படுகிறது. நிறும பங்குநர் கூட்டங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(i) சட்டமுறை கூட்டம்: நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது.
(ii) ஆண்டுப் பொதுக்கூட்டம் : ஒவ்வொரு ஆண்டும் நிறுமத்தில் இயல்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டப்படும் கூட்டம் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகும்.
(iii) சிறப்புக் கூட்டம்: சட்டமுறைக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஆகியவை நிறுமத்தின் இயல்பான சாதாரண கூட்டங்கள் ஆகும்.
(iv) இயக்குநர் அவைக் கூட்டம் : நிறுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநரவையிடம் உள்ளதால் இயக்குநர்கள் அடிக்கடி கூடி பல வியாபார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்காக இயக்குநரவையால் கூட்டப்படும் கூட்டங்கள் இயக்குநரவை கூட்டங்கள் ஆகும்.
(v) வாரியக் குழுக் கூட்டம்: பட்டியலிடப்பட்ட நிறுமமும், ₹10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலுடைய ஒவ்வொரு பொது நிறுமம் தணிக்கை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இக்கூட்டம் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்ட வேண்டும்.
சிறப்புக் கூட்டங்கள்:
(i) வகுப்பு கூட்டம்(Class Meeting) Meetings of Particular Share or Debenture Holders
ஒரு குறிப்பிட்ட வகையான பங்குகள் அல்லது கூட்டங்கள் குறிப்பிட்ட வகையான கடனீட்டுப்பத்திரங்களும், கூட்டப்படும் கூட்டம் வகுப்பு கூட்டம் ஆகும். சாதாரண பங்குகள் (எ) முன்னுரிமை பங்குகள் கூட்டப்படும் கூட்டத்தை கூறலாம்.
(ii) கடனீந்தோர் கூட்டம் : நிறுமக் கூட்டங்களை போல இது ஒரு நிறும கூட்டம் அல்ல இருப்பினும், இது ஒரு புதிய கடன் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அல்லது கடனீந்தோர்கள் தொடர்பான சில வழக்குகளை பேசி முடிவு எடுக்கவும், கடனீந்தோர்களுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் இவ்வகை கூட்டங்கள் கூட்டப்படுகிறது.
65.
தீர்மானத்தினை மூன்று வகைகளாக பிரிக்கலாம் அவை :
1. சாதாரண தீர்மானம் :
ஒரு முடிவுக்கு எதிராக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட ஆதரவாக இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அது சாதாரண தீர்மானமாகும்.
சாதாரண தீர்மானம் மூலம் நடைமுறைப்படுத்தும் முடிவுகள்:
(i) நிறுமம் பெயரை திருத்துதல்
(ii) நிறும பங்கு முதலை மாற்றியமைக்க
(iii) கடனீட்டு பத்திரத்தை மீட்க
(iv) பங்காதாயம் அறிவிக்க
(v) இயக்குநர்களை பணியமர்த்த
2. சிறப்பு தீர்மானம் :
1. சிறப்பு பொருள் குறித்து நிறைவேற்றப்படும் தீர்மானம்.
2. வருகைபுரிந்துள்ள உறுப்பினர்களில் 4 இல் 3 பங்கு முடிவிற்கு சாதகமாக வாக்களிப்பது சிறப்பு தீர்மானம்.
சிறப்பு தீர்மானம் தேவைப்படும் நடவடிக்கைகள் :
(i) நிறும பதிவு அலுவலகத்தை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு.
(ii) நிறும நோக்கத்தை மாற்ற
(iii) நிறும பெயரை மாற்ற
(iv) சட்ட நடைமுறை விதிகளை திருத்தம் செய்ய
(v) புதிய தொழிலை தொடங்க
3. சிறப்பு அறிவிப்பு தேவைப்படும் தீர்மானம்
(i) நிறும சட்டம் 2013 குறிப்பிட்டுள்ள சில நடவடிக்கைகள் குறித்து முடிவுகளை எடுக்க சிறப்பு கூட்டம் கூட்ட வேண்டியுள்ளது.
(ii) இக்கூட்டம் கூட்டும் 14 நாட்களுக்கு முன் எக்காரணத்திற்காக கூட்டப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
இக்கூட்டம் கூட்ட வேண்டியதன் அவசியம் :
(i) பணி ஓய்வு பெரும் தணிக்கையரை தவிர மீண்டும் பணியில் அமர்த்தவில்லை என்பதை உறுதி செய்ய.
(ii) பணி ஓய்வு பெற்ற தணிக்கையரை மீண்டும் பணியில் அமர்த்தவில்லை என்பதை உறுதி செய்ய.
(iii) ஒரு இயக்குநரை பணிக்காலம் முடியும் முன்பே பணி நீக்கம் செய்ய
(iv) பணி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்களின் காலி இடத்தில வேறு இயக்குநர்களை பணியமர்த்த
(v) புதிய தொழிலை தொடங்க
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards