12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test

1.
மேலாண்மை என்றால் என்ன?
2.
திட்டமிடுதல் என்றால் என்ன?
3.
தலால் தெரு - விளக்குக.
4.
மனித வளத்தின் பொருள் தருக.
5.
சந்தை என்றால் என்ன?
6.
கலப்படத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
7.
மேலெழுதுதல் வரையறு.
8.
அகத்தொழில் முனைவோர் இலக்கணம் தருக.
9.
முழுநேர இயக்குநர் என்பவர் யார்?
10.
நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி. (ஏதேனும் 5)
11.
மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக. (ஏதேனும் 5)
12.
மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க.
13.
செபியின் அதிகாரங்களை விவரி. (ஏதேனும் 5)
14.
பணியமர்த்தல் கோட்பாடுகளை விவரி.
15.
பணிவழி பயிற்சிக்கும், பணிவழியற்ற பயிற்சி முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை? (ஏதேனும் 5)
16.
சந்தையிடுகை கலவையின் கூறுகளை குறிப்பிடுக.
17.
நுகர்வோர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்?(ஏதேனும் 5)
18.
மாநில ஆணையத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை விளக்குக.
19.
தாராளமயமாக்கல் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் பற்றி விளக்குக. (ஏதேனும் 5)
20.
21.
நிறுமச் செயலரின் பணிகளை விளக்கு?
22.
பலவகையான நிறும கூட்டங்களை விளக்குக.
23.
குறியிலக்கு மேலாண்மை செயற்முறையின் முதல் நிலை எது?
முக்கிய முடிவு பகுதியை நிர்ணயிப்பது
நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வது
குறிக்கோள்களுடன் வளங்களைப் பொருத்துவது
அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது
24.
25.
26.
அரசுப் பத்திரங்கள் _______ போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு
மாநில அரசுகள்
பகுதி அரசு அமைப்புகள்
மேற்கூறிய அனைத்தும்
27.
மனித வளம் என்பது ஒரு _________ சொத்து.
கண்ணுக்கு புலனாகும்
கண்ணுக்கு புலனாகாத
நிலையான
நடப்பு
28.
சரியான மனிதனை சரியான வேலையில் வைப்பது என்பது
பயிற்சி
பணியமர்த்தல்
பதவி உயர்வு
மாற்றம்
29.
குறிப்பிட்ட தலைப்பில் விரிவான கலந்துரையாடல்
ஆய்வின் கீழ்ப்பயிற்சி
பயிற்சியளிப்பு
மாநாடுகள்
ஆலோசனை
30.
31.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் யார்?
இந்திய உச்ச நீதிமன்றத்தின் சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
பிரதம மந்திரி
இந்தியத் தலைவர்
மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல
32.
VUCA ______, _______, ______, ________.
மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
மதிப்பு தவிர்க்க இயலாதது நிறுமம் மற்றும் அதிகாரம்
மாற்றம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது நிறுமம் ஏலம்
மேற்கூறிய அனைத்தும்
33.
தூய சில்லரை விற்பனையாளர்________ என அழைக்கப்படுபவர்
சந்தை உருவாக்குநர்கள்
நடவடிக்கை தரகர்கள்
வியாபாரிகள்
முகவர்கள்
34.
ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் நிபந்தனை
நம்புறுதி
நிபந்தனைகள்
உரிமை
உடன்பாடு
35.
மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
2
6
3
4
36.
கூட்டுப்பங்கு தொழில் முனைவோரின் வேறு பெயர்.
அகத்தொழில் முனைவோர்
தோற்றுவிப்பாளர்
மேலாளர்
பங்குநர்
37.
ஒரு தனியார் நிறுமம் குறைந்தது ______ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
ஏழு
ஐந்து
மூன்று
இரண்டு
38.
குறியிலக்கு மேலாண்மையின் இயல்புகளை எழுதுக.
39.
40.
காளை மற்றும் கரடி - விளக்குக.
41.
ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் உள்ள புறத்திறனீட்டல் படிநிலைகளை கூறுக.
42.
சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை?
43.
தனியார் மயமாக்கலின் முக்கிய கருத்துகளை விளக்குக.
44.
விற்பனை உடன்பாடு என்றால் என்ன?
45.
தொழில் முனைவோர் வரைவிலக்கணம் தருக.
46.
சிறப்பு தீர்மானம் என்றால் என்ன?
1.
ஒரு வணிக நிறுவனத்தின் மேலாண்மை செய்பவர்கள் மற்றும் விஷயங்களை நிர்வகிப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வழி மேலாண்மை என்று அழைக்கப்படுகின்றது.
2.
1. திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாது.
2. திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
3.
(i) 1874 ஆம் ஆண்டு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பங்குச் சந்தை அமைந்த இடத்திற்கு தலால் தெரு என்று பெயர்.
(ii) தலால் என்ற வார்த்தைக்கு மராத்தி மொழியில் தரகர் அல்லது இடைத்தரகர் என்று பொருள்.
(iii) இங்கு இந்தியாவின் புகழ்பெற்ற பங்குச்சந்தையான பம்பாய் பங்குச் சந்தை மற்றும் பிற மதிப்புமிக்க நிறுவனங்களும் உள்ளன.
4.
தனிப்பட்ட மற்றும் நிறுவனக் குறிக்கோள்களை அடைவதற்கு எவர் ஒருவர் திறமை, தனித்திறன், அறிவு, தகுதிகள், போட்டித்திறன் மற்றும் செயல்திறன் பெற்றிருக்கிறாரோ, அவரே மனித வளமாகக் கருதப்படுகிறார்.
5.
சந்தை என்ற சொல் "மர்கட்டஸ்" என்ற லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. மேலும் வணிகம் நடைபெறும் இடத்தை குறிக்கிறது. அதாவது சந்தையின் பொதுவான பயன்பாடானது பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்வதற்கான ஒரு இடமாக திகழ்கிறது.
6.
(i) உணவு தானியங்களில் சிறிய கற்கள் சேர்க்கப்படுகின்றன.
(ii) கருப்பு மிளகுடன் பப்பாளி விதை கலக்கப்படுகின்றது.
(iii) மிளகாய்ப்பொடியுடன் செங்கல் பொடி கலக்கப்படுகின்றது.
(iv) தேங்காய் எண்ணெயில் பாமாயில் கலக்கப்படுகின்றது.
7.
"மாற்றுமுறை ஆவணத்தை எழுதியவர் அல்லது வைத்திருப்பவர் ஆவண மாற்று செய்ய வேண்டி, எழுதியவர் என்ற நிலையில் அதன் முன்புறமோ அல்லது பின்புறமோ அத்துடன் இணைக்கப்பட்ட ஒரு தாளிலோ கையொப்பம் இடுதலை மேலெழுதுதல் எனப்படும்."
- மாற்று முறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு (5)
8.
(i) ஒரு தொழில் முனைவோர் ஆரம்பித்த பணியில் பணிபுரிபவர்.
(ii) இவர் தனக்கு வழங்கப்பட்ட பணியில், நிறுவனத்தில் கிடைக்கக்கூடிய வளங்களைக் கொண்டு, தனது ஆற்றலை பயன்படுத்தி புதிய எண்ணங்களை புகுத்துபவர்.
9.
நிறுமத்தின் இயக்குநராக பணிபுரியும் ஒருவர் தனது வேலை நேரம் முழுவதையும் நிறுமத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதும் மேலும் இதன் மூலமாக நிறுமத்திற்கு வருமானம் ஏற்படும் வகையில் குறிப்பிடத்தக்க நேரடி ஆர்வத்தைக் காட்டுபவரும் முழுநேர இயக்குநர் ஆவார்.
10.
நவீன மேலாண்மையின் கோட்பாடுகள்: நவீன மேலாண்மையின் தந்தை எனப் போற்றப்படும் திரு.ஹென்றி ஃபோயல் ஒவ்வொரு மேலாளரும் நிறுவனத்தின் வெற்றிக்காக நடைமுறைப்படுத்த வேண்டிய 14 பிரதான கோட்பாடுகளை வரையறுத்திருக்கிறார். அவைகளாவன.
(I) வேலைப் பகிர்வு : இக்கோட்பாட்டின்படி தொழிலமைப்பின் மொத்தப்பணிச் சுமையும் சிறிய பணிகளாகப் பகிர்வு செய்ய வேண்டும். தொழிலாளர் ஒவ்வொரு தொழிலாளியின் திறமைக்கேற்ப பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அப்பணியில் அத்தொழிலாளி சிறப்பீடுபாடும் நிபுணத்துவமும் அடையும் வண்ணம் தொழில் முறை வளர்ச்சியையும் பணிச்சூழலையும் உருவாக்க வேண்டும்.
(II) அதிகாரமும், பொறுப்பும்: அதிகாரம் என்பது ஒரு அலுவலர் தன் கீழ்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.
(III) ஒழுங்குமுறை: இது கீழ்ப்படிதல், மற்றவர்களிடம் முறைப்படி நடத்துதல், அதிகாரத்தை மதித்தல் போன்றவை ஆகும். இவ்வொழுங்கு நிறுவனம் செம்மையாக நடைபெற இன்றியமையாததாகும்.
(IV) பொது நலனுக்காக தனி நலம் புறக்கணிக்கப்படல் வேண்டும் : நிர்வாகம் தனிப்பட்ட ஆதாயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நிறுவனத்தின் நோக்கங்களை மட்டுமே முன் நிறுத்த வேண்டும். எனவே தனிப்பட்ட நபர்களின் தனிநலனை விட தொழில் நிறுவனத்தின் நோக்கமே அனைத்தையும் விட மேம்பட்டிருக்க வேண்டும்.
(v) ஊதியம் : ஊதியம் என்பது பணியாளர் களின் பணிக்கு கொடுக்கப்படும் விலையாகும். பணியாளருக்கு கொடுக்கப்படும் ஊதியமே தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முதன்மையான ஊக்குவிப்பவனாக இருந்து உற்பத்தியை அதிகரிப்பப்பதால் அவர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
11.
மேலாண்மை பணிகளை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம் அவை முக்கிய பணிகள் மற்றும் துணைப்பணிகள் ஆகும்.
முதன்மைப் பணிகள்:
(i) திட்டமிடுதல்:
திட்டமிடுதல் என்பது மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது ஆகும். திட்டமிடுதல் என்பது வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு ஆக்கபூர்வமான மதிப்பீடு ஆகும்.
(ii) அமைத்தல் :
பணியாளர்களுக்கு பணிகளை ஒப்படைவு செய்வதும் அப்பணிகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரங்களை வழங்குவதும் மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பணியாளரே பொறுப்பேற்க செய்வதும் அமைத்தல் பணி எனப்படுகிறது.
(iii) பணியமர்த்தல் :
பணியமர்த்தல் என்பது பணியாளர்களைத் தேர்வு செய்தல் மற்றும் திறமையான பணியாளர்களுக்கு பணியிடமளித்தல் செயல்பாடுகளை பணியமர்த்தல் உள்ளடக்கியுள்ளது.
(iv) இயக்குவித்தல் :
தற்போதைய இலக்குகளை சாதிக்கும் பொருட்டு தொடர்ச்சியான அடிப்படையில் செயலூக்கமளித்தல், முன்னணியிலிருத்தல், வழிகாட்டுதல் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுடன் தொடர்புபடுத்துதல் போன்றன இயக்குதலைக் குறிக்கிறது.
(v) கட்டுப்படுத்துதல் :
ஊக்க ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு அளிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும் பணியாளர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துதல் செயல்பாடு பயன்படுகிறது.
(vi) ஒருங்கிணைத்தல் :
ஒரு நிறுவனம் தனது குறிக்கோளை அடைவதற்கு பல்வேறு திறன்கள் கொண்ட பணியாளர்களை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைத்தல் எனப்படுகிறது. நிறுவனத்தின் ஒவ்வொரு மேலாண்மை பணிகளிலும் ஒருங்கிணைத்தல் பணி உள்ளடங்கியுள்ளது.
(vii) செயலூக்கமளித்தல் :
செயலூக்கமளித்தல் மூலமே நிறுவனத்தின் நோக்கங்களை அடைய முடியும். ஒரு பணியை விரைவாக செய்து முடிப்பதையும், பணியாளர்களின் பணியின் மீதான விருப்பத்தை வளர்ப்பதையும் செயலூக்கமளித்தல் என்ற சொல் உள்ளடக்கியுள்ளது.
துணைப்பணிகள் :
(i) புதுமைப்படுத்துதல் :
வியாபார உலகில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்கொள்ள ஊழியர்களையும் அமைப்பையும் தயார் நிலைப்படுத்தும் செயல்பாடு புதுமைப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது. வியாபாரத்தில் தொடர்ச்சியான மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
(ii) பிரதிநிதித்துவம் :
ஒரு மேலாளர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள், பொருட்கள் மற்றும் சேவையை அளிப்பவர்கள். அரசாங்க அதிகாரிகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதைப் போன்றவர்களுடன் மேலாளர் தொடர்புடன் இருக்க வேண்டும்.
(iii) முடிவெடுத்தல் :
ஒரு அமைப்பின் ஒவ்வொரு பணியாளரும் பல்வேறு எண்ணிக்கையிலான முடிவுகளை ஒவ்வொரு நாளும் எடுக்கின்றனர்.ஒரு அமைப்பு இலகுவாக செயல்படுவதற்கு முடிவெடுத்தல் உதவுகிறது.
(iv) தகவல் தொடர்பு:
தொடர்பு என்பது மனித எண்ணங்களை, கண்ணோட்டங்களை அல்லது கருத்துக்களை ஒரு நபர் மற்றொரு நபருக்கு பரிமாற்றம் செய்வதைக் குறிக்கிறது.
12.
அ) பத்திரங்களின் சந்தை:
பங்குகள், கடனுறுதிப் பத்திரங்கள் போன்ற பத்திரங்கள் மூலதனச் சந்தையில் கையாளப்படுவதால் இது பத்திரங்களின் சந்தை என அழைக்கப்படுகிறது.
ஆ) விலை:
பத்திரங்களின் விலை மூலதனச் சந்தையில் பத்திரங்களின் தேவை மற்றும் அளிப்பை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
இ) பங்கேற்பாளர்கள்:
மூலதனச் சந்தையின் ஈடுபடுபவர்கள் தனிநபர்கள், நிறுமங்கள், அரசு வங்கிகள், மற்றும் இதர நிதி நிறுவனங்கள் போன்றவர்கள் ஆவார்.
ஈ) இட அமைவு:
மூலதனச் சந்தைக்கான இடம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதில்லை, என்றாலும் பங்கு மாற்றகம் போன்ற நன்கு தெரிந்த இடமாக இருத்தல் வேண்டும்.
உ) நிதி சார்ந்த சொத்துக்களின் சந்தை:
மூலதனச் சந்தை நீண்ட கால நிதி சார்ந்த சொத்துக்களுக்கான ஒரு மேடையை வழங்குகிறது.
13.
(1) பங்குச்சந்தைகள் மற்றும் இடைத்தரகர்கள் தொடர்பான அதிகாரங்கள் (Powers Relating to Stock Exchanges & Intermediaries)
பத்திர வணிகத்தை மேற்கொள்ளும் பங்கு பரிமாற்றகங்கள் மற்றும் இடைத் தரகர்களிடம் செபி பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
(2) நாணய அபராதங்களை விதிக்கும் அதிகாரம் (Power to Impose Monetary-Penalties.)
மூலதனச்சந்தை இடைத்தரகர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் மீது வரம்பு மீறல்களுக்கு நாணய அபராதங்களை சுமத்துவதற்கு செபி அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது. இது ஒரு குறுகிய காலத்திற்கு தங்கள் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.
(3) பணியிடங்களில் செயல்பாடுகளை தொடங்குவதற்கான அதிகாரம் ஒதுக்கப்பட்டுள்ளது (Power to Initiate Actions in Functions Assigned.)
(அ) செபி ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஒரு அதிகாரம் உண்டு.
(ஆ) உதாரணமாக, இது பல்வேறு இடைத்தரகர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கலாம் அல்லது முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான குறிப்பிட்ட விதிகளை அறிமுகப்படுத்தலாம்.
(4) பத்திரங்களில் உள்வழி வர்த்தகத்தை, ஒழுங்குப்படுத்துவதற்கான அதிகாரம் (Power to Regulate Insider Trading.)
உள்வழி வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அல்லது வணிக வங்கியாளர்களின் பணிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
(5) பத்திரங்கள் ஒப்பந்த சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள் (Powers Under Securities Contracts Act.)
(அ) பங்குச்சந்தை திறம்பட ஒழுங்குபடுத்த நிதி அமைச்சகம் பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குவிதிகள்) சட்டத்தின் கீழ் பல்வேறு அதிகாரங்களை செபிக்கு 13 செப்டம்பர், 1994 அன்று ஒரு அறிவித்தல் மூலம் வழங்கியுள்ளது.
(ஆ) ஒவ்வொரு பங்குச் சந்தையிலும் ஆளும் குழுவில் மூன்று உறுப்பினர்களை நியமிக்க நிதி அமைச்சகம் செபிக்கும் அதிகாரம் அளிக்கிறது.
(6) பங்குச்சந்தை வணிகத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் (Power to Regulate Business of Stock Exchanges)
பத்திரச் சந்தை மற்றும் பரஸ்பர நிதியுடன் தொடர்புடைய இடைநிலையர்கள், மோசடியான மற்றும் முறையற்ற வியாபார செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை செபி கொண்டுள்ளது.
14.
1. முதலில் வேலை, அடுத்து மனிதர்
(i) பணியின் தேவைக்கேற்ப பணியாளர் வேலையில் அமர்த்தப்பட வேண்டும்.
(ii) வேலைக்கு தேவைப்படும் விண்ணப்பதாரர் மற்றும் அவரது தகுதியில் எவ்விதமான சமரசமும் இருக்கக்கூடாது.
(iii) "முதலில் வேலை அடுத்து மனிதர்" என்பது வேலை வாய்ப்பு கொள்கையாக இருக்க வேண்டும்.
2. வேலைவாய்ப்பு :
(i) புதிய ஊழியர்களுக்கு தகுதிக்கு அதிகமான அல்லது குறைவான வேலை வழங்கப்படக் கூடாது.
(ii) தகுதியை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்.
3. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் :
பணி தொடர்பாக பணியிடத்தில் நிலவும் விதிமுறைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை பணியாளர் பரவலாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. அபராதங்கள் பற்றிய விழிப்புணர்வு :
ஊழியர் தவறு செய்தாலோ அல்லது அவரால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டாலோ அதன் காரணமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனை மற்றும் அபராதம் குறித்த விழிப்புணர்வினை அவர் பெற்றிருக்க வேண்டும்.
5. விசுவாசம் மற்றும் ஒத்துழைப்பு :
(i) பணியாளர்களுக்கு பணியமர்த்தும் போது அவருக்குள் விசுவாசம் மற்றும் ஒத்துழைப்பு உணர்வினை வளர்க்கும் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
(ii) இதன் மூலம் அவர் வேலை மற்றும் நிறுவனம் குறித்த அவரது பொறுப்புகளை சிறப்பாக உணர்ந்து கொள்ள இயலும்.
15.
| வ.எண் | ஒப்பிடுவதற்கான அடிப்படை | பணிவழிப் பயிற்சி | பணிவழியற்ற பயிற்சி |
| 1. | விளக்கம் | பணியாளர் உண்மையான வேலை சூழலில் வேலையை புரிந்து கொள்கிறார். | பணியாளர், பணிச் சூழலுக்கு வெளியே பயிற்சியை பெறுகிறார். |
| 2. | செலவு | செலவு குறைவான முறை | செலவு அதிகமான முறை அதாவது தனித்தனிப் பயிற்சி அறைகள் தனித்திறன் பெற்றவர்கள், வளங்கள் மற்றும் காணொளி போன்ற வளங்கள் தேவைப்படுகிறது. |
| 3. | இடம் | வேலை இடத்திலேயே பயிற்சி அளிக்கப்படுகிறது. | வேலை இடத்திற்கு வெளியே பயிற்சி அளிக்கப்படுகிறது. |
| 4. | பொருத்தம் | உற்பத்தி செய்யும் அமைப்புகளுக்கு பொருத்தமான முறை | உற்பத்தி அமைப்புகளுக்கு பொருத்தமற்ற முறை. இது மேலாண்மை செய்யும் நிறுவனங்களுக்கு பொருத்தமான முறை |
| 5. | அணுகுமுறை | நடைமுறை அணுகுமுறை | கோட்பாடு அணுகுமுறை |
| 6. | கோட்பாடு | நிறைவேற்றல் மூலம் கற்றல் | அறிவைப் பெறுவதன் மூலம் கற்றல் |
| 7. | கற்றல் | அறிவைப் பெறுவதன் மூலம் கற்றல் | அனுபவத்தின் மூலம் கற்றல் |
| 8. | தொடர்பு | பயிற்சி மிகவும் பொருத்தமானது மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு நாளுக்கும் தேவையான தேவைகளை கையாளுதல். | ஒரே நேரத்தில் பணியாளர்களின் குழுக்களுடன் மிக எளிதாக தொடர்பை ஏற்படுத்த முடியும். |
16.
(1) பொருள் (Product)
பொருள் சந்தையில் ஒரு முக்கிய கூறு ஆகும். பொருள் இல்லையெனில் எந்த ஒரு சந்தையும் இயங்க இயலாது என்று கூறுகின்ற அளவிற்கு பொருள் முக்கிய இடம் பெறுகிறது.
(2) விலை (Price)
விலை என்பது பண்டங்கள் மற்றும் பணியின் மாற்று மதிப்பாக பெறப்படும் ஒன்றாகும்.
(3) இடம் (Place)
(i) ஒரு பொருள் என்னதான் தரம் வாய்ந்தவையாகவும், விலையில் சாதகத்தன்மை மற்றும் சிறந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உற்பத்தி இடத்திலிருந்து நுகர்வு இடம் வரை பொருட்களை சரியான முறையில் மற்றும் சரியான நேரத்தில் கொண்டு செல்லவில்லை எனில் அனைத்தும் பயன் அற்றதாகும்.
(ii) எனவே சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இடம் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
(4) விற்பனை மேம்பாடு / விளம்பரம் (Promotion)
சந்தையில் ஒரு பொருள் என்ன தான் தரமுடையதாக இருந்தாலும் மேலும் விலையில் சாதக நிலை இருந்தாலும் நுகர்வோர் மத்தியில் பொருளின் சிறப்பு இயல்புகள் மற்றும் பயன்பாடு குறித்து தெரியப்படுத்தாத நிலையில் அப்பொருள் நிர்ணயித்த வெற்றியை ஒரு போதும் அடைய இயலாது, எனவே மேம்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேம்பாட்டு நடவடிக்கையில் விளம்பரம் அதிக பங்கு வகிக்கிறது.
17.
(i) அதிக விலைக்கு விற்றல் :
விற்பனையாளர்கள் மற்றும் சேவைகளை அளிப்பவர்கள் தாங்கள் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதன் தரத்திற்கு ஈடான விலையைக் காட்டிலும் கூடுதலான விலையை அளிப்பதற்கு பல்வேறு தருணங்களில் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
(ii) கலப்படம் :
கலப்படம் என்பது உணவுப் பொருட்களில் விரும்பத்தகாத பதிலிப் பொருட்களைச் சேர்ப்பதாகும். கலப்படப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு உடல்ரீதியாகவும், பணரீதியிலும் கடுமையான இழப்புகள் ஏற்படுகிறது. கலப்படம் நுகர்வோரது உடல்நலத்தை பெரிதும் பாதிப்பதால், அது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும்.
(iii) போலியான பொருட்கள் :
மக்கள் மத்தியில் பிரபலமடைந்த வணிகக் குறியுடைய பொருட்களுக்கு அதே போன்ற போலியான பொருட்கள் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்டு மோசடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தானியங்கி (ஆட்டோமொபைல்) வாகன உதிரிபாகங்கள், பிளேடுகள், கைக்கடிகாரங்கள், பேனாக்கள், வானொலிப்பெட்டிகள், மருத்துவ மருந்துப் பொருட்கள், நகைகள், துணிகள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் கூட கள்ளத்தனமாக, போலியாகத் தயாரிக்கப்பட்டு இமயம் முதல் குமரி வரை எங்கும் நீக்கமற தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
(iv) செயற்கையான பற்றாக்குறை:
சில சூழ்நிலைகளில் வணிகர்கள் தங்களின் வணிக நிறுவனங்களின் சரக்குகளை இருப்பு வைக்கும் இடங்களில் போதுமான அல்லது தேவைக்கு அதிகமான அளவு சரக்குகளை இருப்பு வைத்திருந்தாலும் கூட தங்கள் கடைகளின் முகப்பில் இருப்பு இல்லை எனும் பெயர்ப்பலகையை வைக்கின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் நுகர்வோர் தங்களின் தவிர்க்க இயலாத தேவையின் அடிப்படையில் அப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
(v) தரக்குறைவு :
கட்டுமானம் செய்து முத்திரையிடப்பட்ட கொள்கலன்களை திறந்தால் அதில் அடைக்கப்பட்டுள்ள பொருட்கள் தரம் குறைந்ததாகவும், கெட்டுப்போனதாகவும், நிகர எடை கொள்கலனில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட குறைவாக இருப்பதையும் காணமுடிகிறது.
18.
(i) நோக்கத்திற்காக வணிக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு ஆணையம் என்ற பெயரில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
(ii) இந்த அமைப்பு நுகர்வோர் குறைபாட்டு தீர்ப்பாணையம் என அழைக்கப்படுகிறது.
அதிகாரம்
(i) மாநில மன்றம் விசாரித்த புகார்கள் அல்லது தன்வசம் விசாரணையில் உள்ள புகார்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பெற்று ஆழ்ந்த விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
(ii) கணக்கு ஏடுகள் ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநில நுகர்வோர் தன்வசம் வைத்துக்கொள்ளவும் அல்லது மேற்கூறிய இந்த ஆவணங்களை குறைதீர்ப்பு முகமத்தில் பணிபுரியும் அலுவலர்கள் பார்வைக்கோ அல்லது ஆய்வுக்கோ வழங்க அதிகாரம் பெற்றுள்ளது.
(iii) மேற்கூறிய முகமையின் அதிகாரிகளுக்கு சட்டத்தின் நோக்கத்திற்காக தேவைப்படும் தகவல்களை வழங்கும் அதிகாரம்.
19.
நன்மைகள்
(அ) வெளி நாட்டு முதலீடுகள் அதிகரிப்பு: (Increase in Foreign Investment)
ஒரு நாடு வணிகத்தை தாராளமயமாக்குதலின் மூலமாக அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து கவர்ச்சிகரமான முதலீடுகளை பெற முடிகின்றது. அம்முதலீடுகள் மூலமாக உள்நாட்டில் மூலதனத்தை பெருக்குவதோடு அதன் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்குவதற்கு உதவுகிறது.
(ஆ) அந்நிய செலாவணி இருப்பு அதிகரிப்பு (Increase the Foreign Exchange Reserve)
வெளி நாட்டு முதலீட்டிற்கும் அந்நிய செலாவணிக்குமான கட்டுப்பாடுகளை தளர்த்தி மூலதனத்தை எளிதில் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது.
(இ) நுகர்வு அதிகரிப்பு : (Increase in Consumption)
தாராளமயமாக்களினால் ஒரு நாட்டில் பயன்பாட்டிற்கு அதிக அளவிலான பொருட்கள் கிடைக்கவும் அதிக உற்பத்திக்கும் வழிவகை செய்கிறது.
(ஈ) விலைக்கட்டுப்பாடு : (Control Over Price)
ஏற்றுமதி இறக்குமதி தீர்வைகளை நீக்குவதால் நுகர்வோருக்கு குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாராளமயமாக்கலினால் இறக்குமதி நாடுகளுக்கு நன்மை விளைவிக்கிறது.
(உ) வெளிநாட்டில் பெறும் கடன்களை குறைக்கிறது (Reduction in external borrowings)
தாராளமயமாக்கலின் மூலம் வெளி நாட்டுக் கடன்களை ஈர்ப்பதன் மூலம் வெளிநாட்டு வர்த்தகக் கடன்களை வாங்கும் வாய்ப்பு குறைகிறது.
குறைபாடுகள்:
(அ) வேலையின்மையை அதிகரித்தல் (Increase in Unemployment)
வர்த்தக தாராளமயமாக்கல் பெரும்பாலும் பொருளாதாரத்தின் சமநிலைக்கு வழிவகுப்பதால் சிறு தொழில்களில் சில வளர்ந்தும் சில சிறு தொழில்களில் சரிவும் ஏற்படுகிறது. இதனால் சில தொழிற்சாலைகள் மூடுகின்ற நிலையால் வேலையில்லா நிலை உருவாகிறது.
(ஆ) உள்நாட்டு தொழில் அலகுகளின் இழப்பு (Loss to Domestic Units)
தாராளமயமாக்கல் கோட்பாட்டில் குறைந்த நுழைவுக் கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு தொழில்கள் பல நாடுகளில் ஊடுருவ சாத்தியம் அதிகம் உள்ளது. இது உள்நாட்டு தொழில்களை அச்சுறுத்துவதுடன் மற்றும் போட்டியை தோற்றுவித்து உள்நாட்டு தொழிலை அடியோடு ஒழிக்கும் சதியாகவும் கருதப்படுகிறது.
(இ) அயல்நாடுகளை சார்ந்திருத்தலை பெருக்கும்:(Increased Dependence of Foreign Nation)
வர்த்தக தாராளமயமாக்கல் என்பது பலம் பொருந்திய பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக போட்டிகளை எதிர்கொள்ளும். அது சந்தையை தன் கட்டுபாட்டிற்கு கீழ் கொண்டுவரும் நிலையை உருவாக்க நேரிடலாம்.
20.
21.
I. சட்டப்பூர்வமான பணிகள் :
நிறுமச்சட்டம் 2013ன் படி கீழ்க்கண்டவை நிறுமச் செயலரின் சட்டப்பூர்வமான பணிகள் ஆகும். அவை
(i) நிறுமத்தின் அங்கீகாரம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் நிறுமத்தின் சார்பாக கையொப்பம் இடுவது.
(ii) பங்குகள், இயக்குநர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை பராமரித்தல்.
(iii) பங்கு முதல் தொகையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பை நிறும பதிவாளரிடம் கொடுத்தல்.
(iv) பங்கு ஒதுக்கீடு செய்த இரண்டு மாதத்திற்குள் பங்கு ஒதுக்கீடு சான்றிதழை அளித்தல்.
(v) ஆண்டு அறிக்கையில் கையொப்பமிடுதல்.
(vi) தொழில் தொடங்க சான்றிதழை பெற தேவையான உறுதிமொழிகளை அளித்தல்.
(vii) ஒவ்வொரு பங்குனர்களுக்கும் ஆண்டு பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பை அனுப்புதல்.
(viii) சட்டமுறை ஏடுகளை தயாரித்தல்.
(ix) ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் இயக்குநரவை கூட்டங்களுக்கான கூட்ட நிகழ்ச்சிக் குறிப்பை 30 நாட்களுக்குள் தயாரித்தல்.
(x) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோப்பிலிட்டு நிறும பதிவாளருக்கு அனுப்புதல்.
(xi) நிறும கலைப்பின் போது நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவி செய்தல்.
II. சட்டப்பூர்வமற்ற பிற பணிகள் :
(i) இயக்குநருக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறுமத்திற்கு தேவையான கொள்கைகளை வகுத்து, பல முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களையும் அறிவுரைகளையும் வழங்குதல்.
b) இயக்குநர்களின் வருகை பதிவேட்டை பராமரிப்பது, கூட்டங்கள் கூட்டுவது.
c ) கூட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் கூட்ட குறிப்பு தயாரிப்பது தொடர்பாக கூட்டத் தலைவருடன் கலந்தாலோசித்து பல தீர்மானங்களை தயாரித்தல்.
d ) இயக்குநரவை அலுவலர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தி ஆவணங்களை கோப்பிடல் மற்றும் பதிவேடுகளை தயாரித்து அளிப்பது.
ii) பங்குனர்களுக்கு ஆற்ற வேண்டிய முகமைப் பணிகள் :
a) நிறும பங்குனர்களின் உரிமை மீறப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது.
b) பங்கு ஒதுக்கீட்டு கடிதம், கூட்ட அழைப்பு கடிதம், வருத்த கடிதம், பங்கு சான்றிதழ் பங்கானைகளை அனுப்புவது மற்றும் கடனீட்டுப்பத்திரத்தை அளிப்பது.
c )பங்குனர்களின் கூட்ட நாள், இடம் மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்கள் தாங்கிய அறிக்கையை பங்குனர்களுக்கு அனுப்புதல்.
d) இயக்குநர்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு இயக்குநரவை சார்பாக கலந்தோசித்து விசாரித்து உரிய பதிலை அளிப்பது.
(iii) அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாட்களுக்கு ஆற்றும் சேவைகள் :
a) நிறும அலுவலக ஊழியர்களில் தலை சிறந்த மூத்த ஊழியர் செயலர்.
b) அலுவலக செயல்பாடுகளை இயல்பாக செயல்பட செய்வது.
c) அலுவலக செயல்பாடு சார்ந்த அனைத்தையும் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்த வேண்டியது.செயலரின் கடமை.
22.
பங்குநர்கள் கூட்டங்கள்: நிறும பங்குநர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் பங்குனர்கள் கூட்டம் என அழைக்கப்படுகிறது. நிறும பங்குநர் கூட்டங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
(i) சட்டமுறை கூட்டம்: நிறுமச் சட்டப்படி ஒவ்வொரு பொது நிறுமமும் தொழில் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திலிருந்து 6 மாதத்திற்குள் பங்குனர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் இதனை சட்டமுறை கூட்டம் என அழைக்கப்படுகிறது.
(ii) ஆண்டுப் பொதுக்கூட்டம் : ஒவ்வொரு ஆண்டும் நிறுமத்தில் இயல்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க கூட்டப்படும் கூட்டம் ஆண்டு பொதுக்கூட்டம் ஆகும்.
(iii) சிறப்புக் கூட்டம்: சட்டமுறைக் கூட்டம் மற்றும் ஆண்டு பொதுக் கூட்டம் ஆகியவை நிறுமத்தின் இயல்பான சாதாரண கூட்டங்கள் ஆகும்.
(iv) இயக்குநர் அவைக் கூட்டம் : நிறுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இயக்குநரவையிடம் உள்ளதால் இயக்குநர்கள் அடிக்கடி கூடி பல வியாபார நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்காக இயக்குநரவையால் கூட்டப்படும் கூட்டங்கள் இயக்குநரவை கூட்டங்கள் ஆகும்.
(v) வாரியக் குழுக் கூட்டம்: பட்டியலிடப்பட்ட நிறுமமும், ₹10 கோடி அல்லது அதற்கு மேல் பங்கு முதலுடைய ஒவ்வொரு பொது நிறுமம் தணிக்கை குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இக்கூட்டம் ஆண்டுக்கு குறைந்தது நான்கு முறை கூட்ட வேண்டும்.
சிறப்புக் கூட்டங்கள்:
(i) வகுப்பு கூட்டம்(Class Meeting) Meetings of Particular Share or Debenture Holders
ஒரு குறிப்பிட்ட வகையான பங்குகள் அல்லது கூட்டங்கள் குறிப்பிட்ட வகையான கடனீட்டுப்பத்திரங்களும், கூட்டப்படும் கூட்டம் வகுப்பு கூட்டம் ஆகும். சாதாரண பங்குகள் (எ) முன்னுரிமை பங்குகள் கூட்டப்படும் கூட்டத்தை கூறலாம்.
(ii) கடனீந்தோர் கூட்டம் : நிறுமக் கூட்டங்களை போல இது ஒரு நிறும கூட்டம் அல்ல இருப்பினும், இது ஒரு புதிய கடன் கொள்கையை அறிமுகம் செய்யும் போது அல்லது கடனீந்தோர்கள் தொடர்பான சில வழக்குகளை பேசி முடிவு எடுக்கவும், கடனீந்தோர்களுடன் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் இவ்வகை கூட்டங்கள் கூட்டப்படுகிறது.
23.
(d)
அமைப்பின் குறிக்கோள்களை வரையறுப்பது
24.
(a)
25.
(b)
26.
(d)
மேற்கூறிய அனைத்தும்
27.
(b)
கண்ணுக்கு புலனாகாத
28.
(b)
பணியமர்த்தல்
29.
(c)
மாநாடுகள்
30.
(c)
31.
(a)
இந்திய உச்ச நீதிமன்றத்தின் சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
32.
(a)
மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
33.
(b)
நடவடிக்கை தரகர்கள்
34.
(a)
நம்புறுதி
35.
(c)
3
36.
(b)
தோற்றுவிப்பாளர்
37.
(d)
இரண்டு
38.
(i) குறுகிய கால இலக்குகளுடன் நிறுவனத்தின் நீண்டகால இலக்குகளை இணைக்க குறியிலக்கு மேலாண்மை முயற்சி செய்கிறது.
(ii) சமுதாய குறிக்கோள்களுடன் அமைப்பின் குறிக்கோள்களை தொடர்புபடுத்த முயற்சி செய்கிறது.
(iii) குறியிலக்கு மேலாண்மை இலக்குகளை மட்டும் அடையச் செய்வதல்ல, திறமையான செயல்திறனையும் அடையச் செய்கிறது.
(iv) இது அனைத்து நிலைகளிலும் இலக்குகளை அடைவதற்கான அமைப்பின் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
(v) குறியிலக்கு மேலாண்மை மூலம் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊக்கம் மற்றும் திருப்தி கிடைக்கச் செய்கிறது.
39.
40.
காளை - தெஜிவாலா:
(i) பத்திரங்கள் எதிர்காலத்தில் விலையேற்றம் பெறும் என்று எதிர்பார்க்கின்ற ஊக வணிகர் காளை அல்லது தெஜிவாலா (Tejiwala) என்றழைக்கப்படுகிறார்.
(ii) ஒரு காளை தன்னுடைய கொம்புகளால் எதிரிகளை உயரே அல்லது மேல் நோக்கி தூக்கி ஏறிவது போன்று, இந்த வகை வணிக ஊக வணிகர் பிணையப் பத்திரங்களின் விலையை உயரச் செய்யும் நோக்கோடு செயல்படுவதால் காளை எனப் பெயரை பெற்றுள்ளார்.
(iii) இவர் எல்லாம் நன்மைக்காகவே நடைபெறும் (Optimism) என்ற மனப்பாங்கு கொண்டவர்.
கரடி - மண்டிவாலா:
(i) கரடி அல்லது மண்டிவாலா (Mandiwala) என்றழைக்கப்படும் ஊகவணிகர், எதிர்காலத்தில் குறிப்பிட்ட பத்திரங்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என்று எண்ணுபவர்.
(ii) ஒரு கரடி வணிகர் எதிலும் பின்னோக்கிய மனப்பாங்கு(pessimism) கொண்டவர்.
(iii) ஒரு கரடி பொதுவாகத் தன்னுடைய எதிரியைத் தரையில் தள்ளி அழுத்துகிறது. அதேபோல் ஒரு கரடி ஊகவணிகரும் பங்குச் சந்தையில் பங்குகளின் விலையை கீழே தள்ளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்
41.
ஆட்சேர்ப்பின் படிநிலைகள் பின்வருமாறு:
(i) ஆட்சேர்ப்பு திட்டமிடல்.
(ii) காலிப்பணியிடங்களை தீர்மானித்தல்.
(iii) வளங்களை கண்டறிதல்.
(iv) விளம்பரம் குறித்த தகவலை உருவாக்குதல்.
(v) பொருத்தமான விளம்பரம் முறையை தேர்ந்தெடுத்தல்.
(vi) தேர்வு செயல்பாட்டிற்கு வழிவகுத்தல்.
(vii) மதிப்பீடு மற்றும் கட்டுப்பாடு.
42.
1. நவீன சந்தையிடுகை கொள்கையானது அறிவு தரத்தை பயன்படுத்த உதவுகிறது.
2. சந்தையிடுகை துறையில் மேம்பாட்டை ஏற்படுத்துகிறது.
3. கொள்கை வழிகாட்டல் மேம்பாடு மற்றும் நல்லதொரு பயனுள்ள முடிவினை செயல்படுத்துகிறது.
4. சந்தையிடுகை தொடர்புள்ள பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண வழிவகை செய்கிறது.
5. சந்தையிடுகை தொடர்பான பிரச்சனை குறித்து மேலும் தகவல்களை கண்டு உணருகிறது.
6. முன்னேற்ற செயல் குறித்து சரியான நடவடிக்கை மேற்கொள்கிறது.
43.
பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைக்கு மாற்ற அனுமதி அளிப்பது தனியார்மயமாக்கல் எனப்படும்.
முக்கிய கருத்து:
1. பொதுத்துறையை ஒடுக்குதல் அல்லது அதன் ஆதிக்கத்தை குறைத்தல்
2. பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்றல்
3. புரிந்துணர்வு ஒப்பந்தம்
4. பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை விலக்கி கொள்ளுதல்.
44.
விற்பனை ஒப்பந்தம் என்ற சொல்லில் விற்பனையும் மற்றும் விற்பனை உடன்பாடும் உள்ளடக்கியது.
1. விற்பனை -பொருளின் உரிமையை உடனே மாற்றிவிடக்கூடிய நடவடிக்கைகள்.
2. விற்பனை உடன்பாடு - பொருளின் உரிமையை எதிர்காலத்தில் மாற்றும் நடவடிக்கைகள்.
45.
"தொழில் முனைவோர் என்பவர் புதுமை படைப்பாளி, புதிய சேர்க்கையை கண்டறிபவர் அல்லது புதிய நிறுவனத்தை உருவாக்குபவர்" - J.A. ஷும்பீட்டர்
46.
ஒரு முடிவை நிறைவேற்ற கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள பங்குனர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதம் நபர்கள் முடிவிற்கு சாதகமாக வாக்களித்தால் அது சிறப்பு தீர்மானம் ஆகும். அதாவது முடிவிற்கு எதிராக வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை போல மூன்று மடங்கு அதிகமான எண்ணிக்கையில் முடிவு சாதகமாக வாக்களித்து முடிவை நிறைவேற்றினால் அது சிறப்பு தீர்மானம் ஆகும்.
(i) சிறப்பு தீர்மானம் தேவைப்படும் நடவடிக்கைகள்
(ii) நிறுமத்தின் பதிவு அலுவலகத்தை ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு மாற்றம் செய்ய.
(iii) நிறுமத்தின் நோக்கத்தை மாற்ற
(iv) நிறுமத்தின் பெயரை மாற்ற
(v) சட்ட நடைமுறை விதிகளை திருத்தம் செய்ய
(vi) நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி நிறும பங்கு முதல் தொகையை குறைக்க.
(vii) புதிய தொழிலைத் தொடங்க
(viii) தணிக்கையாளரை பணியமர்த்த.
(ix) மொத்த விற்பனை முகவர்களை பணியமர்த்த
(x) இயக்குநர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்களின் ஊதியத்தை தீர்மானிக்க.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards