12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test

1.
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
(i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
(ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு
(iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு செய்க.
ii, i, iii
i, iii, ii
iii, ii, i
ii, iii, i
2.
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?
1951
1952
1976
1978
3.
நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
1961
1972
1976
1978
4.
5.
1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?
5
7
6
225
6.
7.
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?
8.
சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீவிர் அறிந்ததென்ன?
9.
இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக.
10.
பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.
11.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை?
12.
இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை?
13.
மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக.
14.
இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?
15.
பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
16.
ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.
17.
நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.
18.
முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
19.
இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க .
1.
(b)
i, iii, ii
2.
(a)
1951
3.
(b)
1972
4.
(a)
5.
(a)
5
6.
7.
முக்கிய கடமைகள் :
1.புதிய இந்திய அரசு பொருளாதாரத்தை வளர்த்தல்.
2.வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல்.
3.உற்பத்தி துறையை விரிவாக்கம் செய்தல்.
4.வேலை வாய்ப்புகளை பெருக்குதல் .
5.வறுமையைக் குறைத்தல் போன்றவை முக்கிய கடமைகளாக இருந்தன.
8.
1.ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது.
2.சுரண்டலை ஒழிப்பது.
3.செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதை தடுப்பது ஆகியன சமதர்ம சமூக அமைப்பு ஆகும்.
9.
1.பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படுவதை இரு முக்கிய அம்சங்கள் தீர்மானித்தன.
2.ஒன்று கருத்தியல் மற்றொன்று நடைமுறை சார்ந்தது.
3.கருத்தியல் நிலையில் அரசாங்கம் சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது.
4.நடைமுறையில் கனரகத் தொழில்களை ஏற்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது.
10.
1.பெரும் நிலவுடைமையாளர்கள்,தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாகவே முன் வந்து வழங்குவது பூமிதான இயக்கத்தின் நோக்கமாகும்.
2.வினோபா பாவே முதன் முறையாக தனது நிலத்தை அரசிடம் வழங்கியது மக்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.
11.
குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் :
1.குத்தகையை முறைப்படுத்துவது.
2.குத்தகைக்காரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
3.நிலவுடைமையார்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிக்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.
12.
விளைவுகள் :
1.உணவு உற்பத்தி பெருகியது.
2.இரசாயன உரங்கள்,பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை வளர்ச்சி பெற்றது.
3.உபரி உணவு தானியங்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
4.ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தது.
5.இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டால் சூழலியல் பிரச்சனைகள் தோன்றியது.
13.
1.1980ல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
2.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
3.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
14.
1.வேளாண்மையின் பின்தங்கிய நிலையை இரு காரணிகளோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
2.ஒன்று நிறுவன அடிப்படையிலானது.
3.நிறுவனம் சார்ந்தது என்பது நிலவுடமை வர்க்கம்,விவசாயத் தொழிலாளர் வர்க்கத்திற்கு இடையே உள்ள சமூக பொருளாதார உறவுகளை குறிப்பது.
4.தொழில்நுட்பம் சார்ந்தது என்பது சிறந்த விதைகள்,டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட நீர்ப்பாசன வசதிகள் ஆகியவற்றோடு தொடர்புடையது.
15.
1.நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்தன.
2.நிர்வாகச் செலவுகள் அனைத்து நேரங்களிலும் கட்டுக்கடங்கி இருப்பதில்லை.
3.பொதுத்துறை நிறுவனங்களில் தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர்.
4.பொதுத்துறை நிறுவனங்களின் இடைநிலை பொருட்கள் தனியார் துறையின் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்படும் போது அர்த்தமற்றதாகிறது.
16.
1.1960 களில் தொழில் துறையிலும் வேளாண்மையிலும் வளர்ச்சி ஏற்பட்ட பின்னரும் வறுமை குறையவில்லை.
2.கிராமப்பகுதிகள்,நகர்ப்பகுதிகள் ஆகிய இரண்டிலும் வறுமை நிலவுகிறது.
3.கிராமப்புற வறுமையைப் போக்குவதற்காக அரசாங்கத்தால் முழுவீச்சில் ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
4.சமூக வளர்ச்சித் திட்டங்கள்,பஞ்சாயத்துராஜ் போன்ற உள்ளாட்சி நிறுவனங்களைப் புதுப்பிப்பது,சிறு குறு விவசாயிகளைப் போன்ற குறிப்பிட்ட குழுக்களை இலக்காகப் கொண்ட திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
5.1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
6.கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
7.இதன் மூலம் அவர்கள் வறுமையிலிருந்து வெளியே வர இயலும்.
8.நாட்டிலிருந்த 5011 ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
9.உதவியைப் பெறும் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு மானியங்களும் மாறுபட்டன.
10.இத்திட்டத்தால் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க வெற்றியைக் கருத்தில் கொண்டு கிராமப்புற ஏழைகளின் சுய வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டமாக 1999 இல் இது மறுசீரமைக்கப்பட்டது.
11.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமானது (பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
12.ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயதுவந்த உறுப்பினர்களுக்கு தனித்திறனற்ற உடல் உழைப்பு,வேலையைத் செய்ய விருப்பம் உடையவர்களுக்கு,ஒவ்வொரு ஆண்டும் 100நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய வேலையைக் கொடுப்பதன் மூலமே இதை வெற்றிகரமாகச் செய்தது.
13.இம்முயற்சியின் கீழ்க்கொள்ளப்படும் பணிகள் கிராமப்புறங்களில் சாலைகள்,கால்வாய்கள்,சிறிய நீர்ப்பாசன வேலைகள்,மரபு சார்ந்த நீர் நிலைகளை மீட்டெடுத்தல் போன்ற நீண்ட காலம் பயன்தரும் செல்வங்களை உருவாக்கும்.
17.
1.இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
2.அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தனித்தனிமையாக நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியாக வேண்டும்.
3.இவ்வாறு நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படை வடிவம் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்தாலும்,சில குறிப்பிட்ட வகைகள் சார்ந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்படுவதில் மாநிலங்களுக்கிடையே ஒரே சீரான தன்மையில்லை.
4.அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தியாவின் பல மாகாணங்கள் ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் சட்டங்களை இயற்றின.
5.நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த ஜமீன்தார்கள் ஜமீன் ஒழிப்பு சட்டங்களின் அரசியலமைப்பு சட்டபூர்வத் தன்மையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினர்.
6.இதன்படி ஜமீன்தார்கள் தங்களின் நிலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது குறித்தோ இழப்பீடு குறித்தோ கேள்வி கேட்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
7.முடிவில் ஜமீன்தாரிமுறை ஒழிப்பு 1956-இல் நிறைவு பெற்றது.இது மிகவும் வெற்றிகரமான நிலச்சீர்திருத்தமாகும்.
8.இருந்தபோதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.
9.இந்நிலங்கள் தங்களது "தனிப்பட்ட விவசாயத்தின்" கீழிருந்தன என உரிமைகொண்டாடி ஜமீன்தார்களால் குடியானவர்களை வெளியேற்றவிட்டு நிலங்களை எடுத்துக்கொள்ள முடிந்தது.
10.இவ்வாறு ஜமீன்தாரி என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டாலும் பல நிலவுடையாளர்கள் தொடர்ந்து பெருமளவிலான நிலங்களைத் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
18.
1.1951-56 வரையிலான காலப்பகுதி முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்கானது.
2.முதலாவது ஐந்தாண்டு திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட மொத்த முதலீடு ரூ.3870கோடிகளாகும்.
3.முதலாவது ஐந்தாண்டு திட்டம் (1951-56)வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.
4.மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான வளர்ப்பதிலும் குறிப்பாக உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.
5.முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடு வளர்ச்சியை இலக்காகச் கொண்டிருந்தன.இதைப் பொருளாதார நிபுணர்கள் "இந்து வளர்ச்சி விகிதம்"என அழைத்தனர்.
19.
1.இந்தியா,அறிவியல் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை வளர்த்தெடுப்பில் பல முன்னேற்றங்களை எட்டியுள்ளது.
2.விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்த ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909-இல் J.R.D டாட்டா மற்றும் மைசூர் மஹாராஜா ஆகியோரின் நிதியுதவில் பெங்களூரில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம்(Indian Institute of Science-IIC)மட்டுமேயாகும்.
3.1945-இல் முனைவர் ஹோமி J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிம் நிறுவனம் (Tata Institute of fundametal Research-TIFR) நிறுவப்பெற்றது.
4.புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் (National Chemical Laboratory),புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் (National Physics Laboratory)ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை ஆகும்.
5.அது முதலாக அறிவியல் துறையின் வானியியற்பியல் (geo-phyiscs) உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் (Celluar and molecular biology) கணித அறிவியல்கள் (mathematical sciences) மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேக்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.
6.அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientofic and Industraial Research)எனும் குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
7.இவ்வமைப்பு (CSIR)பயன்பாட்டு அறிவியல் (Applied of Scientific and IndustrialResearch) எனும் ஒரு குடையின் கீழ் பெரும்பாலான ஆய்வு நிறுவனங்களை இயங்கி வருகின்றன.
8.அணுசக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு முகாமையாகத் (nodal agency)திகழ்கிறது.அணுசக்தி உற்பத்தி அணு ஆயுத உற்பத்தி ஆசிய முன்னெடுக்கிறது.
9.இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.முதல் IIT கரக்பூரில் நிறுவப்பட்டது.தொடர்ந்து டெல்லி,பம்பாய்,கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.
10.தற்சமயம் நமது நாட்டில் 23 IITகள் செயல்படுகின்றது.இவையல்லாமல் 31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும் (National Institute of Technology-NIT)23 இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும் (National Institute of information Technology -IIT) செயல்பட்டு வருகின்றன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards