12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test

1.
நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு ______ என மறுபெயர் சூட்டப்பட்டது.
வாஷிங்டன்
நியூயார்க்
சிக்காகோ
ஆம்ஸ்டர்டாம்
2.
டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு இட்டுச் சென்ற எதிர்ப்புக்கு தலைமையேற்ற பிரபு _____ ஆவார்.
மார்ட்
டாண்டன்
லஃபாயட்
மிராபு
3.
கூற்று: வளர்ந்து கொண்டிருந்த பூர்ஷ்வாக்கள் தங்கள் சமூகத்தகுதிக்கு நிகரான அரசியல் அதிகாரம் வேண்டினர்.
காரணம்: அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற வேண்டுமென அவர்கள் விரும்பினர்.
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி.காரணம் தவறு
கூற்று தவறு. காரணம் சரி.
4.
பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன் மற்றும் குடிமக்கள் உரிமைகள் பிரகடனம் பெண்களைத் தவிர்த்துவிட்டதால் அதன் மேல் ____ அதிருப்தி கொண்டிருந்தார்.
ஒலிம்பே டி கோஜெஸ்
மேரி அன்டாய்னெட்
ரோஜெட் டி லிஸ்லி
ரோபஸ்பியர்
5.
பதினாறாம் லூயியின் அதிகாரபூர்வமான வசிப்பிடமாக இருந்தது _____.
வெர்செய்ல்ஸ்
தெளலன்
மார்செய்ல்ஸ்
டியூலெர்ஸ்
6.
மனிதன் மற்றும் குடிமக்களின் உரிமைப் பிரகடனத்தின் சாரம்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டவும்.
7.
இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக.
8.
தொழிற்புரட்சியின் சிறப்புக்கூறுகளை முன்னிலைப்படுத்திக் காட்டவும்.
9.
சாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தையெனக் கருதப்படுகிறார்?
10.
பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது?
11.
1783 இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் முக்கிய சரத்துக்களை விவாதிக்கவும்.
12.
அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.
13.
"1789 ஆம் ஆண்டு புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே கருத்துக்களின் களத்தில் ஒரு புரட்சி நடந்தது " - விளக்குக.
14.
தென்அமெரிக்காவில் முதன்முதலாகப் பிரேசிலில் அரசியலமைப்பு சார்ந்த முடியாட்சி அரசு அமைந்ததற்கான சூழ்நிலைகளை எடுத்துரைக்கவும்.
15.
16.
அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்.
17.
பாஸ்டில் சிறை தகர்ப்பு முதல் ரோபஸ்பியர் கொல்லப்பட்டது வரையிலுமான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
18.
"அமெரிக்க புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன". இக்கூற்றை உறுதிப்படுத்தவும்.
19.
தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
1.
(b)
நியூயார்க்
2.
(d)
மிராபு
3.
(a)
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
4.
(a)
ஒலிம்பே டி கோஜெஸ்
5.
(d)
டியூலெர்ஸ்
6.
1.1789 ஆகஸ்ட் 26ல் மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2.அரசரைச் சட்டத்தின் ஆட்சிக்குத் துணையாய் இருக்க செய்த இப்பிரகடனம் தனிமனித உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் வரையறை செய்தது.
3.ஒரு முகவுரையையும் 17 பிரிவுகளையும் கொண்டுள்ளது.
4.அனைத்து மக்களும் தங்கள் வருவாய் ஆதாரங்களுக்கு ஏற்றவாறு வரி செலுத்த வேண்டுமென கூறுகிறது.
7.
1.பொலிவர் கராகஸ் பகுதியின் கிரியோல் வகுப்பைச் சேர்ந்தவர்.
2.ஸ்பானியர்களின் காலனி ஆதிக்கத்தை விமர்சித்தார்.
3.பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் கூடி லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கங்களும் இடது சாரிகளுக்கும் உத்வேக மூட்டும் ஒரு சக்தியாக பொலிவர் விளங்கினார்.
8.
1.அறிவியல் தொழில் புகுத்தப்பட்டது.
2.இரும்பு எஃகு பயன்பாடு அதிகரித்தது.
3.உற்பத்தியை அதிகரிக்கச் செய்த புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பு.
4.சிறப்புத் தொழிற்திறன் முறைகள்.
5.போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்புகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை தொழிற்புரட்சியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.
9.
1.சாமுவேல் சிலேட்டர் அமெரிக்காவின் ரோட் ஐலென்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆவார்.
2.1800இல் தொழில் முனைவோர் பலர் சிலேட்டரின் ஆலையைப் போன்றே பல ஆலைகளை உருவாக்கினர்.
3.அமெரிக்க குடியரசுத்தலைவரான ஆண்ட்ரூ ஜேக்சன் சிலேட்டரை அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை எனப் போற்றினார்.
10.
1.1819 ஏற்பட்ட மந்தநிலை காரணமாக 60,000 அதிருப்தியற்ற மக்கள் ஹென்றி ஹன்ட் என்பவர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2.ஆர்பாட்டக்காரர்களின் மனநிலையை கண்டு அதிகாரிகள் பீதியடைந்தனர்.
3.மான்செஸ்டர் யோமனரி எனும் தன்னார்வ குதிரைப்படையை கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க உத்தரவிட்டனர்.
4.700 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.17 நபர்கள் கொல்லப்பட்டனர்.
11.
1.13 குடியேற்ற நாடுகளின் சுதந்திரத்தையும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் எனும் பெயரில் ஒரு புதிய நாடு உருவானதையும்,இங்கிலாந்து அங்கீகரித்தது.
2.மேற்கே 31வது இணைகோட்டை எல்லையாகவும் கொண்ட பகுதிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குச் சொந்தமாயின.
3.மேற்கிந்திய தீவுகள், இந்தியா, ஆப்பிரிக்கா ஆகியவற்றில் இங்கிலாந்திற்குச் சொந்தமாயிருந்த சில பகுதிகளை பிரான்ஸ் பெற்றது.
4. ஸ்பெயின் இங்கிலாந்திடமிருந்து புளோரிடாவைப் பெற்றது.
5. ஹாலந்தும் இங்கிலாந்தும் போருக்கும் முன்பு நிலவிய நிலையை அப்படியே பேணின.
12.
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகு முறைகளை (avenutes) ஏற்படுத்தியது .
2.மக்களாட்சி,குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாச்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும். தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
13.
1.அறிவொளிச் சிந்தனைகளால் எழுச்சியூட்டப்பட்டிருந்த அறிவார்ந்த மக்கள் அனைத்து அறிவுத் துறைகளையும் காரண காரியங்களோடு பார்க்கத் துவங்கினர்.
2. வால்டேர், ரூஸோ, மாண்டெஸ்கியூ ஆகியோரின் எழுத்துகள் 1789 ஆம் ஆண்டு புரட்சிக்கு தூண்டுகோலாய் அமைந்தன.
3. மாண்டெஸ்கியூவின் சட்டங்களின் சாரம்,வால்டேரின் பதினான்காம் லூயியின் காலம்,குயோவின் சமூக ஒப்பந்தம் போன்ற நூல்கள் புரட்சி ஏற்பட தூண்டு கோலாக அமைந்தன.
14.
1.நெப்போலியன் போர்த்துகலின் மீது படையெடுத்த போது போர்த்துகலின் அரசர் டாம் ஜோவா பிரேசிலுக்கு தப்பி ஓடினார்.
2.பிரேசில் முன்னேற்றமடைய அவர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
3.தனது மகன் டாம் பெட்ரோவிடம் பிரேசிலை ஒப்படைத்து விட்டு போர்த்துகல் திரும்ப முடிவு செய்தார்.
4.பிரேசிலின் மேட்டுக்குடி மக்கள் ஆப்பிரிக்கா அடிமைகளைச் சாந்திருந்தனர்.
5.டாம் பெட்ரோ பிரேசிலின் சுதந்திரத்தை அறிவித்து விட்டு அங்கேயே தங்கிவிட்டார்.1822 ல் பிரேசில் போர்த்துகல்லிடமிருந்து விடுதலை பெற்றது.
15.
16.
காரணம்:
1.காலனிகளைத் தனது நாட்டின் பகுதிகளாக கருதிய இங்கிலாந்து காலனி மக்களின் நலன்களை புறக்கணித்து தனது நலன்களுக்காக பல சட்டங்களை இயற்றியது.
2.நாவாய் சட்டம் சர்க்கரை மீது வரி விதிப்பு,முத்திரைச் சட்டம்,டவுண்ஷெண்ட் சட்டம் ,தேயிலை மீதான வரிவிதிப்பு போன்றவை அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள் ஆகும்.
3.பொறுத்துக் கொள்ள முடியாத சட்டங்களின் விளைவாக குடியேற்ற நாடுகள்,பில்டெல்பியாவில் முதன் முதலாக பொது மாநாட்டைக் கூட்டின.
போக்கு:
1775-ல் மாசா சூசெட்ஸில் உள்ள லெக்சிங்டன் என்ற இடத்தில் விவசாயிகள் ஆங்கிலேயரோடு போரிட்டு ஆங்கிலப் படைகளை முற்றுகையிட விரைந்தனர்.
2.ஆங்கிலப் படைகளுக்கு வில்லியம் ஹோவ் என்பவரும்,அமெரிக்க படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டனும் தலைமையேற்றனர்.
3.ஆரம்ப கால போர்களில் ஆங்கியப் படை வெற்றி வாகை சூடியது.பின்னர் வாஷிங்டன் தனது திட்டமிடப்பட்ட போர் தந்திரங்களின் வாயிலாக ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தார். 1777-ல் சரடோகா போரும் 1781-ல் யார்க்டவுன் போரும் முக்கிய போராகும்.
4.குடியேற்ற நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவின.
விளைவுகள்:
1.அமெரிக்க புரட்சி உலக வரலாற்றில் பல அணுகுமுறைகளை (Avenues) ஏற்படுத்தியது.
2.மக்களாட்சி, குடியரசு போன்ற கோட்பாடுகள் மேலும் விரிவாகப் பரவலாயின.
3.அரசியல்,சமூக மாற்றங்கள் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாக கொண்டிருந்தன.
4.குடியேறியவர்கள் அனைவருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்கும் நாடானது.
5.கல்வியின் முக்கியத்துவம் சிறப்பிடத்தைப் பெற்றது.
6.கூட்டாட்சிக் கோட்பாடு பரவலானது.
7.அமெரிக்க புரட்சி காலனியாதிக்கத்திற்கு ஒரு பின்னடைவாகும்.தங்கள் காலனிய எஜமானர்களுக்கு எதிராக குடியேற்ற நாடுகளின் விடுதலைக்கான கோரிக்கை உலகின் பல்வேறு பகுதிகளில் பரவியது.
8.ஒவ்வொரு தனி மனிதருக்கும் பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம் மற்றும் சமவாய்ப்பு ஆகியன வழங்கப்பட்ட சுதந்திர சமுதாயம் உருவாவதற்கு இப்புரட்சி வழிகோலியது.
17.
பாஸ்டில் முறை தகர்ப்பு :
1.அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் அல்லல்பட்ட பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அரசர் பாரிஸ் நகர வீதிகளுக்கு செல்லும்படி படைகளுக்குக் கட்டளையிட்டார்.இதனால் கோபம் கொண்ட மக்கள் 1789 ஜூலை 14-ல் பாஸ்டில் சிறையை தகர்த்து கைதிகளை விடுவித்தனர்.
தேசிய மன்றம்:
1.பாஸ்டில் சிறை தகர்ப்பால் ஊக்கம் பெற்ற தேசிய சட்டமன்றம் 1791ல் அரசியலமைப்பை உருவாக்கியது. புதிய அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு அங்கங்களை பரிந்துரைத்தது.
குழுக்களின் தோற்றம்:
1.தேசிய சட்டமன்றம் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட சாதாரண மக்களின் துயரங்கள் தொடர்கதையாக இருந்தன. மனநிறைவு பெறாத மக்கள் தங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதம் செய்ய அரசியல் குழுக்களை உருவாக்கத் தொடங்கினர்.
2.முக்கியமான குழு ஜேக்கோபியன் குழு ஆகும்.இதன் தலைவர் மாக்ஸ்மிலியன் ரோபஸ்பியர் ஆவார்.கார்டிலியர் கிளப்பில் செல்வாக்கு பெற்றவர் டாண்டன் ஆவார்.
3.ஜேக்கோபியன் குழுவிற்குள் இருந்த கிராண்டியர்கள் அரசரின் ஆதரவாளராக இருந்தனர்.
ஜேக்கோபியன்களின் ஆட்சி:
1.1793க்கும் 1794க்கும் இடைப்பட்ட காலம் தீவிர சீர்திருத்தங்களுக்கான காலமாகும்.17954 பிப்ரவரி 4ல் ஜேக்கோபியர்கள் அதிகம் இருந்த சட்டமன்றம் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலும் அடிமைமுறையை ஒழித்து ஆணை பிறப்பித்தது.அரசாங்கமும்,சமூகத்தின் அடித்தளமும் அளவுக்கு மேலாக தீவிரமயமாக்கப்பட்டதால் கோபம் கொண்ட உறுப்பினர்கள் ரோபஸ்பியரை 1794ல் தூக்கிலிட்டனர்.
18.
1.முந்நாளில் செயின்ட்- டோமிங்கோ ( பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் காலனிகளை அவ்வாறு அழைத்தனர்) என்றறியப்பட்ட ஹைட்டி,கரீபியன் கடலில் இருந்த மிக வளமான பிரெஞ்சக் காலனியாகும்.
2.அது ஐரோப்பாவின்,ஏனைய கரீபியன் அமெரிக்கக் காலனிகளின் மொத்த சர்க்கரை உற்பத்தியைக் காட்டிலும் அதிக சர்க்கரையை உற்பத்தி செய்யும் பண்ணைகளைக் கொண்டிருந்தது.
3.பாஸ்டில் சிறை வீழ்த்தப்பட்டது எனும் செய்தியைத் தொடர்ந்து முடியாட்சியரசின் ஆளுநருக்கு எதிராக ஆயுதமேந்திய எதிர்ப்பு ஒன்று நடைபெற்றது.
4.முலாட்டோபிரிவைச் சேர்ந்த வின்சென்ட் ஓஜ் என்பவர் காலனிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காகப் பாரிஸின் நகரச் சட்டமன்றத்தின் ஆதரவைத் திரட்டிக் கொண்டிருந்தார்.
5.1790 இன் இறுதியில் அவர் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது.ஆனால் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
6.1791 மே மாதத்தில் பிரான்சின் புரட்சி அரசாங்கம் வசதி படைத்த முலாட்டோக்களுக்குக் குடியுரிமை வழங்கியது.
7.இரண்டு மாதங்களுக்குள்ளாக ஐரோப்பிய வெள்ளை இனத்தாருக்கும் முலாட்டோக்களுக்குமிடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.
19.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்கள்:
1.வியாபார,வணிகத் துறைகளில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள்,முதலாளிகள் எனும் புதிய வர்க்கத்தை உருவாக்கியது.
2.கடல் கடந்து காலனிகளை உருவாக்கும் போட்டியில் இங்கிலாந்து தாமதமாக இணைந்தாலும்,காலப்போக்கில் இங்கிலாந்து மேலாதிக்கம் பெற்றது.
3.இங்கிலாந்தில் மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சந்தைகளும் விரிவடைந்தன.
4.பல்வேறு காலனிகளின் குறிப்பாக இந்தியாவின் செல்வங்கள் சுரண்டப்பட்டு இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
5.ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து மிகவும் தாராளத்தன்மை கொண்ட நாடாக இருந்தது.
6.நிலக்கரி, இருப்பு போன்ற மூல வளங்கள் இங்கிலாந்தில்அதிக அளவில் கிடைத்ததென்பது தொழில் வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும். தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
7. தொழிற்புரட்சிக்கு முன்பு வேளாண்மையிலும் இங்கிலாந்து விரைவான முன்னேற்றத்தைப் பதிவு செய்திருந்தது. இயந்திரமயமாக்கலின் முலமாக அதிக அளவிலான நிலங்கள் வேளாண்மையின் கீழ் கொண்டுவரப்பட்டன.
8. தனது கடற்கரைப்பகுதி முழுவதிலும் இங்கிலாந்து சிறப்பாக நிறுவப்பட்டிருந்த துறைமுகங்களைக் கொண்டிருந்தது.
6.நிலப்பகுதியிலிருந்து சற்றே தொலைவில் அமைந்திருந்த இங்கிலாந்தின் புவியியல் அமைவிடமும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து சற்றே பாதுகாப்பாக அமைந்திருந்தமையும் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது.
தொழிற்புரட்சியின் தாக்கம்:
1.இங்கிலாந்துத் தீவுகளில் நிலவிய மிதமான தட்பவெப்பநிலை பருத்தியிழைத் துணி உற்பத்திக்கு உகந்ததாக இருந்தது.
2.மறுமலர்ச்சி மக்களின் வாழ்க்கையைப் பற்றிய அணுகுமுறையை மாற்றியமைத்தது எனில், தொழிற்புரட்சி விவசாய காலம் தொட்டு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பாதையையே மாற்றியது.
3. தொழிற்புரட்சி உற்பத்தியில் இருந்த பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தது.
4.இயந்திரங்களைப் பயன்படுத்தி பொருளுற்பத்தி செய்வோர்கள் கைவினைத் தொழில்களைப் பாழ்படுத்தினர்.ஆயிரக்கணக்காக கைவினைஞர்களும் நெசவாளர்களும் வேலையற்றவர்களாயினர்.
5.தொழிற்புரட்சியின் முதற்கட்டத்தில் இயந்திரங்கள் அறிமுகமானபோது பெண்கள் குழந்தைகள் ஆகியோரிடமிருந்து மலிவான விலையில் உழைப்பு பெறப்பட்டதால் உடல் வலுமிக்க ஆண்கள் வேலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
6.தொழிற்புரட்சியின் மிக முக்கியமான விளைவு ஆலை முதலாளிகள்,ஆலை தொழிலாளர்கள் என இரண்டு வர்க்கங்கள் உருவாக்கப்பட்டதுவே தங்கள் உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கக் காப்புவரி விதிப்பது,தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவது ஆகிய இவ்விரு விஷயங்களைக் கடந்து ஏனையவற்றில் அரசு தலையிடுவது முதலாளிகளுக்கு ஒவ்வாமையாக இருந்தது.
7.இயந்திரங்களை உடைப்பது பெரும் எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது தொழிலாளர் சங்கங்கள் உருவாக்குவது என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards