12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

பிரிவு 2 - குறுவினா - உரைநடை
1.
புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.
பிரிவு 3 - சிறுவினா - உரைநடை
2.
பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் எவ்வாறு ?
நெடுவினா
3.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு ? விளக்குக.
4.
செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
பிரிவு 2 - குறுவினா - செய்யுள்
5.
முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார் ?
6.
செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவர் உரைப்பன யாவை ?
பிரிவு 3 - சிறுவினா - செய்யுள்
7.
இவ்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
8.
சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
பிரிவு 2 - குறுவினா - உரைநடை
1.
(i) சங்க இலக்கியத்தில், தற்காலிகமாய்த் தங்குமிடம், புக்கில்.
(ii) கணவன், மனைவி ஆகியோர் பெற்றோரைப் பிரிந்து தனித்து வாழுமிடம், தன்மனை.
பிரிவு 3 - சிறுவினா - உரைநடை
2.
(i) பண்டைய விரிந்த குடும்பம், இன்றைய கூட்டுக் குடும்பம்.
(ii) சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்றது.
(iii) கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் 'விரிந்த குடும்ப' முறையைக் காண இயலும்.
(iv) இன்று பெண்கள் திருமணத்திற்குப் பின், கணவனின் குடும்பத்தாருடன் வாழ்வதைக் காணலாம்.
(v) பொருளாதாரம், கல்வி, பணிநிலை ஆகிய அனைத்து நிலைகளிலும் பெண்கள் உயர்ந்திருப்பினும் அவள், கணவன் குடும்பத்தினரைச் சார்ந்து வாழும் அமைப்பே இன்று காணப்படுகிறது.
(vi) கணவன் வீட்டில் அவன் பெற்றோர், உடன்பிறந்தோர் ஆகியோருடன் வாழும் கூட்டுக் குடும்பநிலை, பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சி ஆகும்.
நெடுவினா
3.
குடும்பம் என்னும் சிறிய அமைப்பு, சமூகம் என்னும் பரந்த அமைப்பாதல்.
(i) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது.
(ii) குடும்பம் என்பதில் தொடங்கிக் குலம், கூட்டம், பெருங்குழு, ·சமூகம் என்னும் அமைப்புவரை விரிவடைகிறது.
(iii) குடும்பம், மனித சமூகத்தின் அடிப்படை அலகு.
(iv) குடும்பம் அமைய அடிப்படை, திருமணம்.
(v) ‘குடும்பு’ என்னும் சொல்லின் பொருள், கூடி வாழ்தல். அது ‘அம்’ விகுதி பெற்றுக் ‘குடும்பம்’ என்றானது.
(vi) குடும்பம் பல கட்டங்களைக் கடக்கிறது; பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறுகிறது.
(vii) குடும்பத்தின் தொடக்கம், திருமணம்; மணமக்கள் வாழும் வீடு, மணந்தகம். ‘திருமணம்’, ‘குடும்பம்’ என்னும் சொற்கள் தொல்காப்பியத்தில் இல்லை; திருக்குறளில் தான் காணப்படுகின்றன.
(viii) சங்க காலத்தில் தாயே குடும்ப முறைக்குத் தலைமையேற்றாள். அது தாய்வழிக் குடும்பமாய் அமைந்தது.
(ix) பதிற்றுப்பத்தில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை தாய்வழிக் குடும்பத்திற்குச் சான்றாகும்.
(x) சங்க இலக்கியங்களில் ‘இவள் மகன்' என்ற கூற்றே காணப்படுகிறது; 'இவன் மகன்' என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
(xi) சங்க காலத்தில், திருமணமான பெண், தாய்வீட்டிலேயே கணவனுடன் தொடர்ந்து வாழும் நடைமுறை இருந்தது. தாய்வழிச்சொத்து பெண்களையே சேர்ந்தது. சங்க காலத்திலேயே ஆண்வழிச் சமூக முறையும் வேர் ஊன்றிப் பரவியது. திருமணத்திற்குப் பின் பெண்கள், கணவன் இல்லத்திற்குச் சென்று வாழ்ந்தனர்.
(xii) ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' என்னும் குறுந்தொகைப்பாடல் பெண், தன் கணவனை முழுமையாய்ச் சார்ந்து வாழ்ந்தமையைக் கூறுகிறது.
(xiii) தனிக்குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோர் சேர்ந்து வாழும் நிலை. தனிக்குடும்பத்துடன் கணவன் அல்லது மனைவியின் தந்தை உடன் வாழும் நிலையே 'விரிந்த குடும்ப
முறை' எனப்பட்டது. இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்கள் மற்றும் சுற்றத்துடன் மனையறம் காத்தலே இல்வாழ்வின் பயன். குடும்பம் என்னும் அலகின் தொடர்ச்சியே இன்றைய சமூக அமைப்பாகும். இதனைக் கூட்டுக் குடும்பமும், தந்தைவழிக் குடும்ப அமைப்பும் கட்டமைக்கின்றன.
4.
காரணம் கருதாமல் செய்த உதவி
ஒருவர் நமக்கு எந்த உதவியும் செய்யாதிருக்கையில், அவருக்கு நாம் உதவுவது 'செய்யாமல் செய்த உதவி' எனப்படுகிறது.
அப்படிப்பட்ட உதவியைச் செய்தவருக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் ஈடாகாது.
காலத்தினால் செய்த நன்றி
ஆபத்துக்காலத்தில் ஒருவர் செய்த உதவி சிறியதாய் இருக்கலாம்.
ஆனால், உரிய காலத்தில் செய்யப்பட்ட அந்த உதவியின் பயனை உணர்ந்தவர்கள் அஃது உலகத்தைவிடப் பெரிது எனப் போற்றுவர்.
பயன் தூக்கார் செய்த உதவி
ஒருவருக்கு உதவி செய்வதால், என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பாராது உதவி செய்ய வேண்டும். அத்தகைய உதவியை ஆராய்ந்து பார்த்தால், அது கடலைவிடப் பெரியது ஆகும்.
பனைத்துணையாய்க் கொள்பவர்
ஒருவர் செய்த சிறிய உதவியைப் பெரியோர் பெரிதாய்க் கருதுவர்.
இதனையே வள்ளுவர், தினையளவான சிறிய உதவியைப் பனையளவாய்க் கருதுவர் என்றார்.
நல்லதைக் கொள்; அல்லாததை விடு !
ஒருவர் செய்த நன்றியை என்றுமே மறத்தல் கூடாது.
ஒருவர் செய்த தீமையை அன்றே மறத்தல் வேண்டும்.
செய்ந்நன்றி கொன்றவர்க்கு உய்வில்லை!
எத்தகைய அறத்தை அழித்தவர்க்கும் அந்தப் பாவத்திலிருந்து நீங்க வழியுண்டு.
ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்கு அப்பாவத்திலிருந்து நீங்க வழியில்லை.
பிரிவு 2 - குறுவினா - செய்யுள்
5.
இல்லற வாழ்வில் ஈடுபட்டுத் தானும் இன்பம் அனுபவித்துப் பிறர்க்கும் உதவி செய்ய வேண்டும்.
இத்தகைய வழியில் இல்வாழ்க்கை நடத்துபவனே 'முயல்வாருள் எல்லாம் தலை' என்கிறார், வள்ளுவர்.
6.
ஒருவன், பிறன் பொருளைத் தன் பொருள் போலக் கருத வேண்டும்.
இந்த நெஞ்சழுக்கற்ற நிலையே செல்வம் பாதுகாப்பாய் இருப்பதற்கான வழியாகும்.
பிரிவு 3 - சிறுவினா - செய்யுள்
7.
இல்லற வாழ்க்கையில் உள்ள அன்பே, பண்பாகும்.
இல்லறத்தில் மேற்கொள்ளும் அறமே பயனாகும்.
இல்லறத்திற்குரிய அறங்களை மேற்கொண்டு வாழ்பவர் துறவிகளைக்காட்டிலும் மேன்மையானவர்.
இல்லறத்திற்குரிய அறங்களைத் தவறாது மேற்கொள்பவர் தேவராகவே கருதப்படுவார்.
8.
(i) ஒருவன் வலியவரிடத்துக் கோபம் கொண்டால் அஃது அவனுக்குத் தீங்காகும்.
(ii) மெலியாரிடத்துக் கோபம் கொண்டால் பழியும் பாவமும் உண்டாகும்.
(iii) ஒருவனுக்குத் தீமைகள் ஏற்படக் காரணமாவது கோபம். எனவே, அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
(iv) ஒருவரின் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் அழிப்பது, கோபம்.
(v) அக்கோபத்தைக்காட்டிலும் வேறு பகை அவனுக்கு இல்லை.
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards