11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
நல்ல குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
2.
காவடிச்சிந்து என்பது யாது?
3.
'கோட்டை என்னும் சொல் திராவிட' மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
4.
வாடிவாசல் என்னும் குறும் புதினத்தின் ஆசிரியர் ___________.
சி.சு.செல்லப்பா
சி.சு.சின்னப்பா
இந்திரன்
விஜயகாந்தன்
5.
'OROLOGY' என்பது ____________ பற்றிய ஆய்வு
மலை, குன்றுகள்
தாவரங்கள், விலங்குகள்
ஆறு, கடல்
பறவைகள், வண்டுகள்
6.
'மலயத்துவஜ' என்று வழங்கப்பட்ட மன்னன் ____________
சேரன்
சோழன்
பாண்டியன்
பல்லவன்
7.
மனித சமூகத்தின் ஆதிநிலமாய்க் கருதப்படுகிறது __________
காடு
மலை
கடல்
வயல்
8.
மலையும் மலைசார்ந்த இடமும் ________ திணையாகும்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
9.
பகுபத உறுப்புகளுள் இடம் பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்.
பகுதி, இடைநிலை, சாரியை.
பகுதி, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி.
10.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
| 1. வெள்ளிவீதியார் | - | அ) புறநானூறு |
| 2. அண்ணாமலையார் | - | ஆ) சி.சு. செல்லப்பா |
| 3. வாடிவாசல் | - | இ) குறுந்தொகை |
| 4, இளம்பெருவழுதி | - | ஈ) காஷடிச்சிந்து |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| ஆ | ஈ | அ | இ |
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | ஆ | அ |
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | அ | ஆ |
11.
காவடிச்சிந்துவிற்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன்
அண்ணாமலையார்
முருகன்
பாரதியார்
12.
கூற்று “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் - கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு,
கூற்று சரி, விளக்கம் தவறு.
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
கூற்று தவறு, விளக்கம் சரி.
கூற்றும் தவறு, விளக்கமும் தவறு.
13.
'தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து' என்பதை விளக்குக.
14.
A nation's culture resides in the hearts and in the soul of its people.
15.
Looking at beauty in the world is the first step of purifying the mind.
16.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) தண்டுடை
17.
எவையேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக
(அ) உந்தோங்கும்
18.
சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய பெயர்கள், ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்.
19.
நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர், பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர்
20.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) நன்று நன்று
21.
இலக்கணக் குறிப்பு தருக
(அ) பிரிந்தோர்
22.
"குறுந்தொகை" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'அம்ம வாழி தோழி' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
23.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) பிரிந்த
24.
ஏதேனும் ஒன்றனுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக
(அ) வாழ்வான்
25.
26.
1.
(i) குறுந்தொகை நான்கடிமுதல் எட்டடிகள்வரை அமைந்த குறுகிய பாக்களால் ஆனது.
(ii) பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் இருநூற்று ஐவர் பாடிய பாடல்களைக் கொண்ட நூல்.
(iii) பண்டைய தமிழரின் அகஒழுக்கமாகிய இன்பியல் வாழ்க்கையினைச் சுவைபடச் சித்திரிக்கும் நூல்.
2.
(i) தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச்சிந்து ஆகும்.
(ii) முருகப்பெருமானுக்கு அவன் அடியார்கள் காவடி எடுத்துச் செல்லும் போது அன்பர்களால் பாடப்படும் பாடல்கள், காவடிச்சிந்து ஆகும்.
(iii) இவை சிந்து என்னும் இசைப்பாடல்களால் ஆனவை. காவடிச்சிந்து என்னும் நூலில் 22 இசைப்பாடல்கள் உள்ளன.
3.
(i) 'கோட்டை' என்னும் சொல் தமிழில் கோடு எனப்படுகிறது; மலையாளத்தில் கோட்ட, கோடு எனப்படுகிறது.
(ii) கன்னடத்தில் கோட்டே, கோண்டே எனவும், தெலுங்கில் கோட்ட எனவும் வழங்கப்படுகிறது.
(iii) துளுவில் கோட்டே என்றும், தோடா மொழியில் குவாட் என்றும் வழங்கப்படுகிறது.
4.
(a)
சி.சு.செல்லப்பா
5.
(a)
மலை, குன்றுகள்
6.
(c)
பாண்டியன்
7.
(b)
மலை
8.
(a)
குறிஞ்சி
9.
(d)
பகுதி, விகுதி.
10.
(d)
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | அ | ஆ |
11.
(b)
அண்ணாமலையார்
12.
(b)
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
13.
பண்பட்ட தமிழர் : தமிழர்கள் பண்பட்டவர்கள். கல்வியறிவும் அனுபவ அறிவும் கொண்டவரைத்தாம் பண்பட்டவர் என்பர்.
கல்வியறிவு : ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்களும் தமிழர்களின் கல்வியறிவைக் கண்கூடாய்க் காட்டுபவை.
அனுபவம் தந்த அரிய முத்துகள் : வாழ்க்கை அனுபவத்தில் தெறித்து விழுந்த முத்துகளே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', “தீதும் நன்றும் பிறர் தர வாரா", “நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்” முதலியனவாகும்.
தமிழரின் இருவிழிகள் : இத்தகைய உயரிய பண்பாட்டினைக் கொண்ட தமிழர்கள் இசையையும் இறை உணர்வையும் தம் இருவிழி எனப் போற்றினர். இவ்வுண்மையை வெளிப்படுத்துகின்ற நூல்களே திருவெம்பாவை, திருப்பாவை, திருப்புகழ், காவடிச்சிந்து முதலான நூல்கள்.
காவடியின் கருப்பொருள் : காவடித்தண்டின் இருபக்கமுள்ள பலகைகள் கந்தனின் திருவடிகள். அந்தத் திருவடிகளைத் தோளில் சுமப்பது பெரும்பேறு எனக் கருதி முருகனடியார் கோவில் நோக்கிச் செல்கின்றனர்.
நடையும் பத்தியும் சற்றும் நழுவா : வழிநடைக்களைப்பைக் களையவும், இதயத்தில் இறையுணர்வு இம்மியளவும் குன்றாதிருக்கவும் முருகனடியார்கள் பாடிய வழிநடைப் பாடல்களே காவடிச்சிந்து ஆகும்.
14.
ஒரு நாட்டின் பண்பாடு அந்நாட்டு மக்களின் உள்ளத்திலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது.
15.
உலகிலுள்ள அழகை உற்று நோக்குவதே மூளையைத் தூய்மைப்படுத்துவதற்கான முதல் முயற்சியாகும்.
16.
(அ) தண்டுடை - தண்டு + உடை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (தண்ட் + உடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தண்டுடை)
17.
(அ) உந்தோங்கும் - உயர்ந்து + ஒங்கும்.
'உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்' என்ற விதிப்படி வருமொழி முதல் எழுத்து உயிரெழுத்தாய் (ஓ) வந்ததால், நிலைமொழி ஈற்று உகரம் கெட்டு (து - த் + ௨) *உயர்ந்த் + ஒங்கும்' என்றானது.
அடுத்து 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்ற விதிப்படி (த் + ஒ - தோ) 'உயர்ந்தோங்கும்' என்றானது.
18.
சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்கு எப்பெயர்கள் ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்?
19.
பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர் எவர்?
20.
(அ) அடுக்குத்தொடர்
21.
(அ) வினையாலணையும் பெயர்கள்
22.
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னும் மாக்களோடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே.
23.
(அ) பிரிந்த - பிரி + த்(ந்) + த் + அ.
பிரி - பகுதி; த் - சந்தி, 'ந்' ஆனது விகாரம்; த் - இறந்தகால இடைநிலை; அ - பெயரெச்ச விகுதி.
24.
(அ) வாழ்வான் - வாழ் + வ் + ஆன்.
வாழ் - பகுதி; வ் - எதிர்கால இடைநிலை; ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி.
25.
26.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards